“தோள் கண்டார் தோளே கண்டார்” என்ற கம்பனின் வரி பிரசித்தியானது

ராம நவமியில் ராமயாணம் பற்றி சொன்னால் கேள்வியாக கேட்டுகொண்டிருக்கின்றார்கள்

நல்லது

நாம் முழுக்க படித்தது கம்பராமாயணம், ஓரளவு படித்தது வால்மீகி மற்றவை எல்லாம் கண்ணில் படவே இல்லை

கம்பராமாயணம் படித்தால் ராமன் கதையினை விட நெஞ்சில் தங்குவது கம்பனின் தமிழ், அவனது உருவகமும் கற்பனையும்

கம்பன் ஏன் மிக பெரும் கவிஞன் என சொல்லபடுகின்றான் என்றால் அதற்காகத்தான்,

எப்படி அவனால் கற்பனையில் அவ்வளவு நுட்பமாக அன்றே ஒரு பேரழகு பெண்ணை சொல்ல முடிந்தது??

ஒரே ஒரு சாத்தியம்தான் உண்டு..

குஷ்பூவினை கனவிலே கண்டிருக்கின்றான் கம்பன், இல்லாவிட்டால் சாத்தியமில்லை

ஓரிடத்தில் ராமனை பற்றி கம்பன் துள்ளி எழுந்து சொல்வான் ” அய்யோ இவன் அழியா அழகுடையான்”

இப்பொழுது இருந்தால் , குஷ்பூவினை கண்டால் இப்படித்தான் சொல்வான்

“மையோ, மரகதமோ, மறி முகிலோ….அய்யோ இவள் அழியா அழகுடையாள்….”

“தோள் கண்டார் தோளே கண்டார்” என்ற கம்பனின் வரி பிரசித்தியானது

அது எப்பொழுதும், இப்பொழுதும் “கன்னம் கண்டார், கன்னமே கண்டார்” என குஷ்பூவிற்கும் பொருந்தும்.

ஆனாலும்….

“அய்யோ இவள் அழியா அழகுடையாள்….”