காலச்சுவடு என்றொரு பத்திரிகை இருக்கின்றது…
காலச்சுவடு என்றொரு பத்திரிகை இருக்கின்றது, முழுக்க முழுக்க அறிவாளிகள் மட்டும் எழுதும் பத்திரிகை என சொல்லிகொள்ளும், தமிழில்தான் எழுதுவார்கள் நமக்கெல்லாம் புரியாது
காலசுவடா? காலாவதியான காலணியா? என்று கடந்து செல்லவேண்டிய விஷயம் அது.
உலக விஷயமோ, பொருளாதாரமோ, வரலாறோ அல்லது உலகிற்கு தேவையான விஷயமோ , செய்திகளோ அல்லது குறைந்தபட்சம் சிரிக்க கூட விஷயம் இல்லா பத்திரிகை அது
அறிவாளிகள் எல்லாம் தங்கள் கற்பனையினை கொட்டியிருப்பார்கள், புரிந்துகொண்டால் நாம் புத்திசாலியாம், நமக்கெல்லாம் ஒரு மண்ணும் புரியாது, சமூகத்திற்கு அறவே பிரயோசனமில்லா பத்திரிகைகளில் அதுவுமொன்று
மார்டன் ஆர்ட் எனப்படும் ஓவியங்களையும், பின் நவீனத்துவம் எனும் கட்டுரைகளையும் கண்டு ஹிட்லர் சொன்னான் அல்லவா?
“என் கண்ணில் படும்படி இந்த பைத்தியகாரதனங்களை ஜெர்மனில் வைக்காதீர்கள், அழித்தே விடுங்கள், இவை எல்லாம் அரைபயித்தங்களின் பிதற்றல், இவற்றால் நாட்டிற்கோ சமூகத்திற்கோ ஒரு பலனும் இல்லை” அப்படியான சங்கதி அது.
அதுவும் அட்டைபடத்தினை கூட ஒரு மாதிரிதான் வெளியிடுவார்கள், அதனையும் தாண்டி இரு பக்கம் படிப்பதற்குள் நாம் தமிழனா? எனும் அச்சம் மேலோங்கும், அபபடி அறிவு ஜீவிதமாக இருக்கும் இதழ் அது
அதற்கும் கலைஞருக்கும் அடிக்கடி முட்டிகொள்ளும், இப்பொழுது அவர் இல்லாத காலத்தில் இன்னும் ஆடுகின்றது காலசுவடு
அது இலக்கிய பத்திரிகை என சொல்லிகொள்ளும் அல்லவா? அதனால் திமுகவில் இருக்கும் இலக்கியவாதிகளை குறி வைத்திருக்கின்றது
முதலில் வம்பிழுத்தது மனுஷ்ய புத்திரன், அவரும் காலச்சுவடும் அடித்துகொண்டார்கள், இரு அறிவாளிகள் அப்படித்தான் வாதிடுவார்கள், அதே நேரம் இரு முட்டாள்களும் அப்படி அடித்துகொள்ளும் வாய்ப்பு பல சினிமாக்களில் கூட உண்டு
இப்பொழுது அடுத்த இலக்கியவாதி சல்மாவினை சிக்கலில் விடுகின்றது
இந்து பத்திரிகையில் காலசுவடினை சேர்ந்த யாரோ எழுதியிருக்கின்றார், அதாவது சுந்தர ராமசாமியால் கண்டெடுக்கபட்ட சல்மாவின் கவிதைகளை நாங்கள்தான் பிரசுரித்தோம் என்றெல்லாம் சொல்லி, இறுதியில் கயிற்றினை இறுக்குகின்றது
அதாவது கவிஞர் சல்மா திமுகவில் இணைந்தபின் அவரின் படைப்புகள் பாதிக்கபட்டுவிட்டதாகவும், திமுக அவரை சுதந்திரமாக விடவில்லை எனவும் கவலைபடுகின்றது
சுந்தர ராமசாமி பற்றி நமக்கு பெரிதும் தெரியாது, தெரியும் அவசியமும் இல்லை. ஜெயமோகனின் சுந்தரபுராணம் இப்பொழுதுதான் அடங்கியிருக்கின்றது. சுந்தர ராமசாமி அப்படி பெரிதும் சாதித்திருந்தால் அவர்களோடு இருக்கட்டும், அவர் என்ன அப்துல் கலாமிற்கு ஆராய்ச்சியில் உதவினாரா?
இல்லை குமரி மாவட்டத்தை மீட்டெடுத்தாரா? சமூகத்திற்கு அவர் செய்தது என்ன? ஒன்றுமில்லை, போகட்டும்
சல்மா துணிச்சலாக எழுதினார், இஸ்லாமிய அடித்தட்டிலிருந்து வந்து ஒரு பெண் முற்போக்காக எழுதுவது பெரும் ஆச்சரியம். அவர் சிறப்பாக எழுதினாரா? இல்லையா என்பது வேறுவிஷயம்,
ஆனால் தைரியமாக எழுதினார்
காலசுவடு அவரின் எழுத்தினை வியாபாரத்திற்காக பயன்படுத்தியது, அவர் பிரபலமானதும் கலைஞர் திமுகவில் இணைத்துகொண்டார். ஏன் காலசுவடில் எழுதுபவர்கள் திமுகவிற்கு வரகூடாதா? அவர்கள் என்ன அடிமையா?
திமுகவில் இணைந்தபின் சல்மா படைப்புதிறனை இழந்துவிட்டார், திமுக அவரின் எழுத்துக்கு கடிவாளமிடுகின்றது என்பதெல்லாம் கலைஞரே சொல்வது போல “கழகத்தில் குழப்பம்” விளைவிக்கும் சதி
திமுக எல்லா முற்போக்கு எழுத்தாளர்களையும் உற்சாகபடுத்தும், கலைஞரின் தன்மை பெரியார் காலத்திலிருந்தே அப்படித்தான், எத்தனையோ முற்போக்கு எழுத்தாளர்களை ஆண், பெண் என்ற வேறுபாட்டை களைந்து அவர் ஊக்குவித்தார்
சர்ச்சைகள் இருந்தும் மனுஷ் அதற்கு ஒரு உதாரணம், ஒரு வித்தியாசமான பாத்திரம் என தெரிந்தும் இலக்கியவாதி, எழுத்தாளன் என்பதால் மனுஷினை கலைஞர் சேர்க்கத்தான் செய்தார்.
சல்மா இஸ்லாமியர்களின் அதிருப்தியினை சம்பாதித்த காலம் இருந்தது, திமுகவின் வாக்கு வங்கிகளில் இஸ்லாமிய மக்கள் இருந்தும் கலைஞர் சல்மாவினை திமுகவில் சேர்த்து பொறுப்புக்கள் வழங்கினார் என்றால் அதில் என்ன அரசியல் இருக்கின்றது?
எல்லா படைப்பாளனுக்கும் பல காரணங்களால் எழுத்து திணறும், சூழ்நிலைகள் அவனை பாதிக்கும், அப்பொழுது படைப்புகள் தாமதமாகும், நினைக்கும் பொழுதெல்லாம் எழுதமுடியுமென்றால் அவன் நல்ல படைப்பாளியாக இருக்கமுடியாது, வியாபாரியாக இருக்கலாம்
சல்மாவின் படைப்புகள் தாமதமாக ஆயிரம் காரணங்கள் இருக்கலாம், நிச்சயம் திமுகவாக இருக்கவே முடியாது
ஏன் முன்பு “கவிஞர்” கனிமொழி என அடையாளமிட்டு என்னமோ எழுதிகொண்டிருந்த கனிமொழியின் படைப்புக்கள் ஏதும் வருகின்றதா? அப்படி ஒன்றும் இப்பொழுது வந்ததாக தெரியவில்லை
தமிழச்சி தங்கபாண்டியன் கூட இப்பொழுது முன்புபோல் எழுதுவதில்லை,.
காலசுவடு இனியும் திருந்தாது, அடுத்த இலக்கியவாதி யாராவது இருக்கின்றார்களா என தேடும், சிண்டு முடிய பார்க்கும்
நாட்டில் அறிவுஜீவி பத்திரிகைகளின் இம்சை எல்லை மீறி செல்கின்றது, அவர்கள் தமிழில் எழுதினாலும் புரியாது, ஒரு மண்ணும் விளங்காது
ஆனால் அவர்களின் அரசியல் விளையாட்டு ஓரளவிற்கு புரிகின்றது, அதுவும் கலைஞரை மனதிற்குள் கருவும் இந்து பத்திரிகையும் அதற்கு வாய்ப்பு கொடுத்திருப்பதும் கவனிக்கதக்கது.
சிங்கம் முதிர்ந்த வயதில் இருக்கும்பொழுது சில நரிகள் துள்ள தொடங்குகின்றன, கருநாகம் ஓய்வெடுக்கும் பொழுது தவளைகள் தாளமிடுகின்றன
திமுகவில் இருக்கும் இலக்கியவாதிகள் கொஞ்சம் எச்சரிக்கையாய் இருப்பது நல்லது