ஆபரேஷன் எண்டபே : 05

No automatic alt text available.ஒரு தவறான தகவல் இணையமெல்லாம் பரவுகின்றது, அதாவது 2007ல் சிரியா வடகொரியா உதவியுடன் அணுகுண்டை செய்ததாகவும் அதனை இஸ்ரேல் கண்டுபிடித்து சிரியா அணுவுலைகளை அழித்ததாகவும் சில செய்திகள்

சிரியா இஸ்ரேலோடு யுத்தம் நடத்திய நாடென்றாலும் அது அணு ஆராய்ச்சியில் எல்லாம் இறங்கவில்லை, பக்கத்து லெபனானும் இறங்கவில்லை

 

இஸ்ரேலிடம் அணுகுண்டு உண்டு, 1950களிலே உருவாக்கிவிட்டார்கள் ஆனால் வெளிகாட்டமாட்டார்கள். அவர்கள் நாடகம் அப்படி

அதன் பின் சதாமிற்கு அணுகுண்டு ஆசை வந்தது, அது அமெரிக்காவின் செல்லபிள்ளையாக அவர் இருந்த 1980ல் வந்தது

ஈரானை எதிர்க்க அமெரிக்க சதாமிற்கு கொம்பு சீவிய காலம் அது, சதாமும் மிக துடிப்பாக இருந்தார்

அணுகுண்டுக்கு பகீரத தவம் இருந்தவர் சதாம், மறுப்பதற்கில்லை

Image may contain: outdoor and natureசதாமின் அணுவுலைக்கு பிரான்ஸ் உதவியது, ஈராக் அணு ஆயுதம் பெற்றால் இஸ்ரேலுக்கு சமமான எதிரி ரெடி, விடுமா இஸ்ரேல்?

மொசாத் களமிறக்கபட்டது, மொசாதில் அழகான விபசாரிகளும் உண்டு, அவர்கள் பாக்தாத்தில் முகாமிட்டு பிரான்ஸ் விஞ்ஞானிகளை வளைத்தார்கள்.

சில விஞ்ஞானிகளை அழகிகளால் வளைத்தார்கள், சிலரை பணத்தால் வளைத்தார்கள் , ஒவ்வொரு விஞ்ஞானியிடமிருந்தும் கறந்த தகவலை பொருத்தினார்கள்.

ஈராக்கில் ஊடுருவிய மொசாத் உளவாளிகள் சிரிய எல்லையில் கட்டபட்ட ஆலையினை படமெடுத்து அனுப்பிகொண்டே இருந்தார்கள்

ஈராக்கின் அணுதிட்டம் முழுக்க அறிந்து கொண்டார்கள், இஸ்ரேல் தரப்பு இதனை வெளிகாட்டாமல் பிரான்ஸ் அணுவுலைக்கு உதவ கூடாது என்று வலியுறுத்தியது

இது மின்சார அணு விநியோகம் என சொல்லி நழுவியது பிரான்ஸ், அதன் பின் மொசாத் தன் இன்னொரு முகத்தை காட்டியது

பிரான்ஸின் அணு ஊழியர்கள் போராட்டம் என்ற பெயரில் பொங்கினர், உரிமை அது இது என சொல்லி அடித்து நொறுக்கினர், ஆலையில் அவர்கள் நொறுக்கியது என்ன தெரியுமா?

ஈராக்க்கிற்காக செய்த‌ அணுவுலை பாகங்கள்

பிரான்சுக்கு நெருக்கடி மேல் நெருக்கடி தொடங்கியது, பிரான்சின் அமைதி கெட்டது, பிரான்சில் அணுவிஞ்ஞானிகள் எல்லாம் மர்மமாக செத்தார்கள்

அல்லது சொல்லாமல் கொள்ளாமல் வேலையினை விட்டே ஓடினார்கள்

கொஞ்ச காலத்தில் மொசாத்தின் அட்டகாசத்தை அறிந்த பிரான்ஸ் ஜாகையினை பாக்தாத்திற்கு மாற்றியது

அங்கு பணிகள் தீவிரமடைந்தன, இது மின்சார அணுவுலை என சொல்லி பணிகள் நடந்தன‌

இதற்கு மேலும் விட்டால் ஆபத்து என கருதிய இஸ்ரேல் மிக துணிவான முடிவினை எடுத்தது

1981 ஜூன் 7ம் தேதி, மாலை அணுவுலை பூட்டபட்டபின் யாரும் உள்ளே இல்லை என்ற தகவல் கிடைத்தபின் மிக வேகமாக கிளம்பிய இஸ்ரேலின் 25 விமானங்கள் அந்த ஆலையினை தாக்கின, 10 நிமிடத்தில் அழிந்தது ஆலை

இன்றும் சதாம் திட்டமிட்ட அணு ஆயுதம், பிரான்சின் உதவி, விஞ்ஞானிகள் பட்டியல் , என்ன செலவு என எல்லா விவரமும் இஸ்ரேலிடம் உண்டு

சதாமினை திரும்ப திரும்ப அடிக்க அந்த பட்டியல்தான் உதவிற்று

எப்படி திரட்டினார்கள்? எப்படி எடுத்தார்கள் என்றால் அதுதான் மொசாத், அதுதான் இஸ்ரேல்

அதன் பின் ஈரானுடன் யுத்தம், பெரும் பணம் அழிந்த கவலை என சதாமும் அணு ஆராய்ச்சிக்கு செல்லவில்லை

பிரான்ஸ் பட்ட அடியில் அதன் பின் பிரான்சும் இஸ்ரேலை எதிர்க்கவில்லை

பின் சதாம் அணுகுண்டு வைத்திருக்கின்றார் என்ற பல்லவியினை சும்மாவே பாடி அவரை கொல்லவும் செய்தாயிற்று

ஆக ஈராக் அணுகுண்டு பெறாமல் தடுக்கவே 1981ல் இஸ்ரேல் அப்படி தாக்கியது, அதன் பின் அதற்கான அவசியமில்லை

2007ல் இஸ்ரேல் தாக்கியது லெபனானை, ஹெஸ்புல்லா இயக்கத்தினரை எச்சரிக்கும் விதமாக நடந்தது அது

இன்று அணுகுண்டு தயாரிப்பில் ஈடுபட்டுள்ள ஈரான் இஸ்ரேல் தாக்கும் என அஞ்சிதான் நிலத்தடி மாளிகையில் தன் ஆலையினை அமைத்துள்ளது

அடிக்கடி எங்கள் அணுவுலையினை இஸ்ரேல் தாக்கினால்… என எச்சரிக்கை செய்யவும் ஈரான் தவறுவதில்லை, அதன் உள்ளூர பயம் அப்படி

இஸ்ரேலும் சும்மா அல்ல, 200 அடி ஆழம் வரை துளைத்து வெடிக்கும் குண்டுகளை தயாரித்துவிட்டதாக அடிக்கடி சொல்லி பயமுறுத்தும்

ஈரானிய அணு விஞ்ஞானிகள் கொல்லபடுவதும், ஈரானை உலக நாடுகள் எச்சரிப்பதுமாக இப்பொழுதும் விளையாட்டு நடக்கின்றது

இப்பொழுது அணுவுலையின் சில நுட்பங்கள் கிடைக்காமல் ஈரான் தள்ளாடுவது நிஜம், இரு ஆண்டுகளுக்கு முன்பே செய்யபட்டிருக்க வேண்டிய அணுகுண்டு இன்னும் செய்யபடவில்லை

ஆக‌ சிரியா அணுஆலையினை இஸ்ரேல் தகர்த்தது என்பதெல்லாம் சும்மா

ஆனால் சதாமின் உலைகளை தகர்த்ததும், பிரான்ஸை அலற வைத்ததும், இன்று ஈரானின் அணுவுலைக்கு குறி வைப்பதும் சாட்சாத் இஸ்ரேல்தான்

இப்பொழுது ஒரு கேள்வி எழலாம், இஸ்லாமிய நாடுகளிடம் அணுகுண்டு இருக்க கூடாது என மிக விழிப்பாய் இருக்கும் மேற்குலகம் பாகிஸ்தானை மட்டும் எப்படி அனுமதித்தது??

பாகிஸ்தான் அணுவுலையினை நொறுக்க அவர்களிடம் காரணம் இருந்தது, படையும் இருந்தது ஆனால் செய்யவில்லை ஏன்?

அதுதான் உலக அரசியல், இந்தியாவிடம் அணுகுண்டு இருக்கும் பொழுது பாகிஸ்தானிடமும் இருந்தே தீரவேண்டும் அப்பொழுதுதான் சமநிலை வரும்

ஈராக்கை , ஈரானை எல்லாம் தடுத்த இஸ்ரேல், லிபியா அணுகுண்டு பெற்றுவிட கூடாது என குழப்பிய அமெரிக்கா எல்லாம் பாகிஸ்தானின் அணுகுண்டை கண்டும் காணாமல் இருப்பது இதற்காகத்தான்

பாகிஸ்தான் அணுவிஞ்ஞானி கான் அணுநுட்பத்தை வடகொரியாவிற்கு கொடுத்தபொழுது 
(வடகொரிய அணுகுண்டு பாகிஸ்தான் விஞ்ஞானி உபயம், இதெல்லாம் சொல்லமாட்டார்கள். ) அவசரமாக பாய்ந்து பிடித்தார்கள்,

பிடித்து?? தண்டனை ஒன்றுமே இல்லை, மாறாக பாகிஸ்தானிலே இரு என சொல்லிவிட்டார்கள்

ஏன் என்றால் அதுதான். இந்தியாவிற்கு ஒரு எதிரி தேவை அவனிடம் அணுகுண்டு இருப்பதில் தவறே இல்லை

இப்படிபட்ட “நல்ல எண்ணம்” கொண்ட இஸ்ரேல், அமெரிக்காவுடன் தான் மோடி கொஞ்சி கொண்டிருக்கின்றார்

முற்றும் .