பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

பெரும்போரின் களப்பலி : 02

Image may contain: one or more people, people walking, crowd and outdoorஏற்கனவே உலகம் அமெரிக்காவை காரி துப்பிகொண்டிருந்த நேரம், அதுமன்றி இவர் குறிப்பிடும் நாடுள் உலக‌ சண்டையிலே இல்லை, அமைதியாக சொன்னார்.

பேர்ல் ஹார்பர் தாக்குதல் மட்டுமல்ல, ஜப்பானின் மீதான அமெரிக்க கோபத்திற்கு பெரும் காரணம் கார், டிவி, வாட்ச் உட்பட எல்லா தயாரிப்புகளையும் மிக குறைந்த விலையில் கொடுத்துகொண்டிருந்தது ஜப்பான், அதுதான் அவர்களின் கோபத்தை மிக சீண்டிய விஷயம்

நிச்சயமாக அந்த குண்டு பொருளாதார அணுகுண்டேதான், மறுக்க முடியாது. அதன் பின்புதான் ஜப்பானிய பொருளாதாரமும் ராணுவமும் அமெரிக்க வசம் சென்றன, அதன் பின்புதான் ஜப்பானிய பொருளுக்கு அமெரிக்க சந்தை என்ற ஒப்பந்தமே எழுதபட்டது

இந்த யோசனையில் இருந்த அமெரிக்க அதிபர் அமைதியாக பதில் சொன்னார்

“தளபதியாரே, உங்கள் திட்டம் நிறைவேறினால் இன்னும் 25 ஆண்டல்ல, 2500 ஆண்டுகளுக்கு சண்டை இருக்காது தான், உலகின் மக்களில் முக்கால்வாசிப்பேர் இறந்துவிடுவார்கள், இனி நமக்கு உலகில் எல்லோரும் அஞ்சுவார்கள் இதோடு விட்டுவிடலாம்” என்றார்.
ஆனால் ரஷ்யா புகைந்தது, அவர்களும் கிட்டதட்ட பாதிகிணறு தாண்டியிருந்தார்கள், ஜெர்மானிய விஞ்ஞானிகளை கடத்திய வகையில் 70% முன்னேறி இருந்தார்கள் ஆனால் முழுவெற்றி இல்லை.

எப்படியோ இன்று ரஷ்யாவிற்கு பெரும் ஆறுதலான “எட்வர்ட் ஸ்னோடன்” போல அன்றும் யாரோ ஒரு உளவாளி அமெரிக்க அணுரகசியத்தை காப்பியெடுத்து கொடுத்தான், முதன் முதலாக அணுநுட்பம் அமெரிக்காவிற்கு வெளியே சென்றது

1949ல்ரஷ்யா முதல் அணகுண்டினை வெற்றிகரமாக செய்யவும், அமெரிக்கர்களின் சந்தோஷம் துக்கமாக மாறியது.

அணுகுண்டின் ஆபத்தினை உணர்ந்தவர்கள், அதன் அழிவு தெரியும், அமெரிக்க முகாமில் இருந்த நாடுகள் அஞ்சின, ஆபத்தென்றால் அமெரிக்கா வரும்தான், ஆனால் வருவதற்குள் ரஷ்யாவின் அணுகுண்டுகள் ஐரோப்பாவினை பொசுக்கும். ஏற்கனவே அடிமை நாடுகளை விடுவித்து உலகில் பலமிழந்திருந்த பிரிட்டனும் பிரான்சும் அணுகுண்டு பாதுகாப்பிற்கு மாற விரும்பின‌.

ஆனால் உலகறிய இதோ இவைதான் அணுகுண்டுகள்,வைத்துகொள்ளுங்கள் என கொடுக்கமுடியாது,பல குழப்பங்களை கொண்டுவரும் விவகாரம், பெரும் அழிவு சக்தி, பெரும் போரில் கூட முடியலாம்.

அணுகுண்டினை விரும்பிய உலக நாடுகள் தந்திரமாக சில காரியங்களில் இறங்கின அதாவது மின்சாரத்திற்கான அணுமின் உலை என கட்டுவது, அங்கு ஒரு பக்கம் மின்சாரம் எடுப்பது, இன்னொரு பக்கம் ரகசியமாக அணுகுண்டுகளை செய்வது.

அப்படியாக பிரிட்டனும்,பிரான்சும் மின்சாரம் செய்கிறோம் என சொல்லி கட்டிய அணு உலைகளிலே அணு ஆயுதம் செய்தன.

அமெரிக்க முகாமில் அதன் அடியாட்களுக்கு நுட்பத்தினை அமெரிக்கா வழங்கியதாக சந்தேகித்த ரஷ்யா, தனது சகாக்களுக்கு “மின்சார அணு உலைகளை” வழங்க ஆரம்பித்தது. சீன வல்லரசின் முதல் அதிபர் மாவோ மிக தந்திரமாக அணுகுண்டினை செய்து ஐந்தாம் அணுநாடாக்கினார்.

உலகம் முழுவதும் அணுநுட்பம் வேகமாக பரவியது, வல்லரசு நாடுகள் அணுகுண்டின் ஆற்றலை அதிகபடுத்தின, அமெரிக்காவும்,ரஷ்யாவும் இன்றுவரை 3000 மேற்பட்ட சோதனைகளை நடத்தி 10 மெட்ரிக் டன் வரை சக்திவாய்ந்த குண்டுகளை வைத்துள்ளன, பூமியின் வடதுருவம் ரஷ்யாவின் சோதனை களமாகவும், உலகின் சில ஆளில்லா பிரதேசங்கள் அமெரிக்க சோதனை களமாகவும் மாறின, கடலடியில் கூட சோதித்தார்கள்

ஹிரோசிமாவில் வீசப்பட்டகுண்டு வெறும் 50 டன், இபொழுதுள்ள குண்டுகளின் சக்தியை கணக்கிட்டு கொள்ளுங்கள்.

ஜஹாங்கீர் பாபா எனும் இந்திய விஞ்ஞானியின் தலமையில் மின்சாரத்திற்கான அணுசக்தி என பல்லவியை தொடங்கிய இந்தியா, இந்திரா காந்தியின் காலத்தில் அணுகுண்டினை சோதித்து வரலாற்றில் இடம்பிடித்தது.

இந்தியா தும்மினால் பாகிஸ்தானும் இரு முறை தும்மவேண்டும் அல்லது செத்துவிடுவார்கள், அவர்கள் குணம் அப்படி. இந்தியா அணுகுண்டினை வெடித்தால் சும்மா விடுவார்களா? பதிலுக்கு அணுகுண்டினை வெடிக்கவேண்டும். ஆனால் வசதிகள் குறைவு.

இஸ்ரேலிடம் மரண அடிவாங்கி இருந்த இஸ்லாமிய தேசங்களும் அவற்றின் எண்ணெய் பணமும் பூட்டோவின் மண்டையில் பல்ப் எரியவிட்டது, ஒரு அசுப நாளில் அறிவித்தார் இனி உலகிற்கு தேவை “இஸ்லாமிய அணுகுண்டு”.

ஐரோப்பவில் அணுசக்த்தி படித்து,அணுசக்க்தி நிலையத்தில் பணியாற்றிய கான் எனும் இளைஞனை பிடித்தார்கள். நாட்டுபற்றும் (பணபற்றும்) நிரம்பிய கான் பாகிஸ்தான் அணுதிட்டத்தில் முக்கிய பங்காற்றினார், முன்னாள் லிபிய அதிபர் கடாபி பணமாற்றினார், பாகிஸ்தான் அணுசக்தி வேகமாக வளர்ந்தது.

இந்தியாவினை கட்டுபடுத்த பாகிஸ்தானை கொஞ்சி,தடவி,கொம்புசீவி வளர்க்கும் அமெரிக்காவிற்கு தெரிந்தாலும், காணாமல் விட்டுவிட்டது, மொத்தத்தில் பாகிஸ்தானிடம் அணுகுண்டு 80களிலே வந்துவிட்டது.

ஆனால் லிபிய பணத்தில் அணுகுண்டினை செய்த பாகிஸ்தான், லிபியாவிற்கு பெரும் பணம் அடிப்படையில்தான் அணுஆயுதம் தருவதாக மிரட்டியது, வெளியில் சொல்லமுடியாத கோபத்தில் சவூதி அரசரிடம் முறையிட்டார் கடாபி.

ஆச்சர்யமாக சவூதி அரசரும் அதே கோபத்தில் இருந்தார், ஆமாம் அவருக்கும் பாகிஸ்தானின் அதே வாக்குறுதி,அதே பட்டை நாமம்.

அதற்குள் மேற்கு நாடுகள் சுதாரித்து பாகிஸ்தானை நோக்கி குருபார்வையை வீசியது,விளைவு ராணுவபுரட்சி, பூட்டோவிற்கு தூக்கு, இஸ்லாமிய அணுகுண்டு பாகிஸ்தானுக்கு மட்டும் சொந்தமானது.

ஆட்சி மாறியதும், பாகிஸ்தானின் “அணுதாத்தா” கானுக்கு முக்கியத்துவம் குறைக்கப்ட்டது, நாட்டுபற்றிற்கு உழைத்த அவர் பணப்பற்றிற்காகவும் சிறிது உழைக்க விரும்ப்பினார்.

லிபியா,வடகொரியா,ஈரான்,ஈராக் இன்னும் பல நாடுகள் அணுகுண்டு பெற தலைகீழாக நின்ற காலங்கள், ஆனால் அணுநுட்பம் மிகமிக கடுமையான ரகசியம், பெறவே இயலாதது, மிக மிக சிக்கலான விஷயம் அது.

ஆனால் கான் லிபியாவிற்கு ஆளனுப்பினார், “பாகிஸ்தான் அரசு தராததை நான் தருகிறேன், நுட்பங்களை தருவேன், மற்றதை நீங்கள்தான் முடித்துகொள்ளவேண்டும், ஆனால பணம் மிக மிக அதிகம் சம்மதமா?”
லிபிய அதிபர் கடாபி மிகமிக ஆர்வமானார், கானும் சில ரகசியங்களை சொன்னார், அணுகுண்டும் தயாரானது, சோதித்தார்கள், புத்தரின் சிலை போல இருந்த அணுகுண்டு பதிலுக்கு கடாபியின் பொறுமையை சோதித்தது.

கான் புன்னகைத்தார், இன்னும் கொஞ்சம் பணம்,கொஞ்சம் ரகசியம் ஆனால் அணுகுண்டு மட்டும் தயாரில்லை, இப்போது கடாபியும் இல்லை, கானின் சொத்துமதிப்பு மட்டும் மிக உச்சத்தில்.

பல நாடுகளில் கையேந்தி,கம்யூனிசத்தினை காப்பாற்றுவதாக சொல்லி அணுகுண்டினை செய்யமுனைந்த‌ வடகொரியாவின் அணு நிலை கொஞ்சம் முன்னேற்றம், சோதித்ததாக சொல்லிகொள்கின்றார்கள், சில குண்டுகள் இருக்கலாம் என்கின்றது உளவு தகவல்கள்.ஆனால் அவர்களையும் நம்ப முடியாது ஒரே ஏவுகனையை 10 முறை படமெடுத்துவிட்டு 10 ஏவுகனைகள் சோதித்தோம் என்பவர்கள், ஆனால் ஆபத்தான நாடு.

இடையில் சதாமும் அணு ஆய்தம் செய்ய முனைந்தார், பொறுக்குமா இஸ்ரேலுக்கு?, நுட்பத்தினை வழங்க முன்வந்த பிரான்சினை தடுக்கபார்த்தது, இது அணுவுலை ஒப்பந்தம் என பிரான்ஸ் கைவிரிக்க, ஒரு மாலை வேளையில் 25 விமானங்களை அனுப்பி ஈராக்கின் அணுவுலையை தகர்த்தது இஸ்ரேல்

பின்னாளில் ஈராக்கின் ஸ்கர்ட் கனைகள் இஸ்ரேலை தாக்க இதுதான் காரணம்.
உலகிற்கே அணுகொள்கை,ஆற்றல் கொள்கை, அணுகுண்டு என சொல்லி கொடுத்த யூதர்களின் இஸ்ரேல் சும்மா இருக்குமா?, அகதியாக சென்ற நாட்டிலியே கலக்கியவர்கள், நாடு கிடைத்தால் விடுவார்களா?, நிச்சயமாக அவர்களிடம் அணுஆயுதம் உண்டு. ஆனால் இருப்பதாக ஒரு சுவடினை கூட வெளிகாட்ட மாட்டார்கள், அது தான் அவர்களின் சாமார்த்தியம்.

ஆனால் ஈரானின் அணுகுண்டு தயாரிக்கவிடாமல் கடும் வில்லங்களை செய்கிறது இஸ்ரேல், வல்லரசு நாடுகள் ஈரானுடன் அணுசக்தி ஒப்பந்தம் செய்துகொள்ள துடியாய் துடிக்கின்றது இஸ்ரேல். காரணம் அணுவுலையின் அடுத்த கட்டம் நிச்சயம் அணுகுண்டு. எப்படியாவது ஈரானை நொறுக்க கடும் முயற்சிகளை செய்கிறது இஸ்ரேல்.

இவ்வாறு ஒவ்வொரு நாடும் அணுகுண்டு கனவில் மிதக்க, வல்லரசுகள் வேகமாக அணுவுலைகளை அமைக்க ஆரம்பித்தன, அமெரிக்காவில் மட்டும் 105 அணுவுலைகள் உண்டு, ரஷ்யா ஒருநாளும் உண்மை கணக்கினை சொல்லாது.

எல்லாம் நன்றாக போய்கொண்டிருந்த பொழுது, சோவியத் யூனியனின் அதிபர் அம்மக்களுக்கு நமது மோடியை போல கசப்புமருந்து கொடுத்து கொண்டிருந்த பொழுது, உக்ரைனின் செர்னோபில் அணுவுலை வெடித்து சிதறியது.
கிட்டதட்ட 5 லட்சம் மக்கள் இறந்தார்கள், 10 லட்சம் பேர் இடப்பெயர்வு.

முதன் முதலாக அணுவுலையினையின் ஆபத்தை உணர்ந்த வல்லரசுகள், மக்களின் எதிர்ப்பினை கண்டு ஒரு திட்டம் தீட்டின, அதாகபட்டது இனி நமது நாட்டில் அணுவுலை வேண்டாம், கொஞ்சம் கொஞ்சமாக மூடலாம், ஆனால் அணுகுண்டு வேண்டும், அணு உலை இல்லாமல் அணுகுண்டு இல்லை.
அவர்களின் மகா திட்டமிடலில் உதித்த திட்டங்கள் குதர்க்கமானவை.

வேறு நாடுகளில் நாடுகளில் திறக்கலாம், மின்சாரம் அவர்களுக்கு, வெடித்தால்,சாவும் நோயும் அவர்களுக்கு, ஒழுங்காக நடந்தால் இறுதியாக கிடைக்கும் அணுஆயுத பொருளில் நமக்கும் பங்கு உண்டு.

இதனால் கொட்டபோகும் லாபமோ அள்ள அள்ள குறையாதது.

பல ஏழை நாடுகளின் பின் தங்கிய அப்பாவி கிராமங்களுக்கு சனி பிடிக்க தொடங்கியது, இந்த காலத்தில்தான், அதில் ஒன்றுதான் கூடன்குளமும், இடிந்தகரையும்.

தொடரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications