வெல்ல பிறந்தவன் : 07
அன்றைய பாரசீகம் பல நாடுகளாக இருந்தது, இன்றைய துருக்கி உட்பட்ட நாடுகளை மாமன்னன் சைரஸ் என்பவரின் வாரிசாக அச்செமின்ட்ட் என்பவர்கள் ஆண்டனர். சிரியா பக்கம் அசீரியர்கள், லெபனான் பக்கம் டயர், எகிப்தில் பாரோக்கள் என சிற்றரசுகளாய் ஆண்டனர்.
(சைரஸ் குறிப்பிடதக்க பாரசீக மன்னன், அவன் மேற்கு பாரசீகத்தில் பெரும் அரசை அமைத்திருந்தான், அவனின் வரலாறும் மிக பெரிது.)
இவர்கள் மேதிய பெர்சிய அரசனான டார்சியுஸ் என்பவருக்கு கட்டுபட்டவர்கள். டார்சியுஸ் பாபிலோனில் இருந்தான், இன்றைய பாக்தாத் அது
அன்றைய உலகில் பலமிக்க அரசன் அந்த டார்சியஸ்தான், அவனை எதிர்க்க யாருக்கும் துணிவும் பலமுமில்லை. இரும்பு மனிதனாக ஆண்டுகொண்டிருந்தான், அவனின் படைபலமும் அப்படி இருந்தது.
சீனா முதல் பல நாடுகளிலிருந்து அவனுக்கு வியாபாரம், வற்றாத டைக்கிரிஸ் நதியின் விளைச்சல் போதா குறைக்க்கு கப்பல் மூலம் வரும் வருமானம் என பெரும் செல்வத்தில் இருந்தான் டேரியஸ்
பாரசீகமும் பெருமையின் உச்சத்தில் இருந்தது. கலை வீரம் செல்வம் அறிவு நாகரீகம் கட்டகலை என எல்லாவற்றிலும் உச்சத்தில் இருந்தார்கள்
அந்த நெபுகாத் நேச்சர் எனும் பெரும் மன்னனின் பாக்தாத் அது, இந்த உலக அதிசயமான பாபிலோன் தொங்கும் தோட்டம், பளிங்கு அரண்மனை என அசத்திகொண்டு இருந்த அக்கால பாபிலோன்
அழகும் கலைமிகு கட்டடமும் கொட்டி கிடந்த பூமி. பெரும் பாதுகாப்பான கோட்டைகளுக்குள் அற்புத இலக்கியங்கள் எழுந்த காலம் அது
அக்காலம் பாரசீகத்தின் பொற்காலம், அன்று இஸ்லாம் கிறிஸ்தவம் என எதுவுமில்லை, ஷியா சன்னி தகறாறில்லை, ஐஎஸ் இயக்கமில்லை, குண்டுவெடிப்பில்லை, எண்ணெய் இருந்தது ஆனால் நிலத்தடியில் பத்திரமாக இருந்தது. அதனை வைத்து என்ன செய்ய என விட்டுவிட்டார்கள்.
இந்த பாரசீக ஏரியாவிற்குள்தான் படையெடுத்து வருகின்றான் அலெக்ஸாண்டர், இன்றைய துருக்கிதான் ஆசியாவிற்கு ஐரோப்பாவிருந்து வரும் நுழைவாயில், அங்கேதான் அலெக்ஸாண்டரும் நுழைந்தான்
பாரசீக அரசாக இருந்த அச்சமின்ட் சாம்ராஜ்யம் அவனை எதிர்பார்த்தே போருக்கு தயாராக இருந்தது, அக்காலத்தில் அரசின் பெரு நகரம், தலைநகரம் எல்லாம் ஆற்றின் கரையிலே அமைந்திருக்கும் என்பது உலக நியதி
இன்று பிகா நகரம் என அழைக்கபடும் அந்த நதியின் ஊர் அன்று கிரானிசஸ் ஆறு என அழைக்கபட்டது, நதியின் அக்கரையில் அச்சிமெண்ட்களும் இக்கரையில் அலெக்ஸாண்டரும் இருந்தனர்
நதியினை கடக்க உத்தரவிட்டான் அலெக்ஸாண்டர், ஆனால் கரையிரங்க முடியாத அளவிற்கு அந்த அச்சமின்ட் பாரசீகர்களின் தாக்குதல் இருந்தது, பின் வாங்கியது கிரேக்கபடை
அலெக்ஸாண்டரின் தனி திறமை பூகோளம். ஆறு மலைகளில் யுத்தம் செய்வது எப்படி என அவனுக்கு அரிஸ்டாட்டில் போதித்திருந்தார்.
திட்டமிட்டான் அலெக்ஸாண்டர், பகலில் ஆற்றை கடந்தால்தானே அடிப்பார்கள், இரவில் கடந்துவிட்டால் என்ன? முதலில் ஆறு வேகம் குறையும் இடம் எது? அதனை காண வேண்டும். வளைவுகளில் ஆற்றின் வேகம் குறைவு
ஒரு வளைவினை கண்டு இரவில் படைகளை கடக்க உத்தரவிட்டான், முதலில் கடந்தது காலாட்படை, அவர்களுக்கு பின் ஈட்டிபடை பின் குதிரைபடை
பொழுது விடியும் பொழுது ஆற்றை கடந்து நின்ற அலெக்ஸாண்டைரை திகிலாக பார்த்த பாரசீகர்கள் யுத்தம் தொடங்கினர்
கிரேக்க படைகளுக்கு அலெக்ஸாண்டரும், பார்மினியோவும் தளபதி. பாரசீக படைக்கு 11 தளபதிகள் இருந்தனர்
யுத்தம் தொடங்கியது, அலெக்ஸாண்டர் படையில் மொத்தமே 30 ஆயிரத்தையொட்டிய வீரர்கள் இருந்தார்கள், பாதிபடையினை அவன் மாசிடோனியாவில் நிறுத்திவிட்டு வந்திருந்தான், பாரசீக படையோ எண்ணிக்கை 70 ஆயிரத்தை தொட்டு நின்றது
யுத்தம் மூண்டது, முதலில் பம்மியது கிரேக்கபடை அதன் அர்த்தம் எதிரியின் வியூகத்தை படிப்பது. அது தெரியாமல் பாரசீகர் சிக்க, திருப்பி அடித்தது அலெக்ஸாண்டர் படை
மற்ற அரசர்கள் எல்லாம் உத்தரவினை பிறப்பித்து கொண்டு யானை மீதோ, தேரிலோ இருப்பார்கள். ஆனால் அலெக்ஸாண்டர் அப்படி அல்ல களத்தில் இறங்கி வீரனோடு வீரனாக விளாசிகொண்டிருப்பான்
அதுவரை அலெக்ஸாண்டர் யாரென பாரசீகர்களுக்கு தெரியாது, எப்படி இருப்பான் என்றும் தெரியாது. இதில் கவசமும் மாட்டிவிட்டால் சுத்தமாக தெரியாது
ஆனால் கருப்பு குதிரையில் மிக துடிப்பாக உத்தரவுகளை பிறப்பித்த ஒரு வீரன் மீது பாரசீக வீரனுக்கு சந்தேகம் வலுத்தது, இவனாகத்தான் இருக்கவேண்டும் என கோடாரியினை வீசினான், அலெக்ஸாண்டரின் குதிரை துள்ள கோடாரி அலெக்ஸாண்டரின் மூக்கு முன் கடந்தது
பின் சுதாரித்த அலெக்ஸாண்டரின் வாள் அந்த பாரசீகனை கொன்றது, அதுதான் அலெக்ஸாண்டர் என அவன் அறிவிக்க வாய்ப்பின்றியே போனது
தளபதிகளை குறிவைத்து அடிப்பது அலெக்ஸாண்டர் ஸ்டைல், அப்படி தளபதிகள் வீழ வீழ யுத்தம் அலெக்ஸாண்டர் பக்கம் வந்தது
அலெக்ஸாண்டரின் சிறிய படை, ஆனால் துடிப்பான படை அந்த அச்சிமென்ட் பாரசீக படைகளை புரட்டி எடுத்து வெற்றிபெற்றது
200 ஆண்டு அளவில் பாரசீகத்தில் கிரேக்கர்களுக்கு கிடைத்த முதல் வெற்றி அது, துருக்கியினை தாண்டி அவன் நிச்சயம் பாபிலோன் அரசனிடம்தான் வரவேண்டும், அந்த டேரியசிடம்
ஆனால் அலெக்ஸாண்டர் செல்லவில்லை, காரணம் டாரியஸின் பலம் அதிகம், அதனால் ஆங்காங்கு இருக்கும் சிற்றரசுகளை காலி செய்துவிட்டு பாபிலோனை நொறுக்குவது அவன் திட்டம், டாரியஸ் சும்மா அல்ல நிச்சயம் அவன் சிங்கம், பெரும் வியூகமும் படையுமின்றி அவனை நெருங்கவே முடியாது
ஆசியா மைனரை கைபற்றிய பின் பல அனுகூலங்கள் அலெக்ஸாண்டருக்கு இருந்தன, குறிப்பாக ஐரோப்பிய வியாபாரம் அதன் வழியே நடந்தது, டோல்கேட் போட்டால் அள்ளிவிடலாம் அல்லவா? அதனைத்தான் செய்தான்
ஆனால் கப்பல் மூலம் சிரியா, எகிப்து நாடுகளுடன் அன்றே ஐரோப்பா தொடர்பு கொண்டிருந்தது. தமிழக கப்பல்கள் இப்பக்கமும், ஐரோப்பிய கப்பல்கள் அப்பக்கமுமாக இன்றைய எகிப்து, சிரியா, இஸ்ரேபிய, அரேபிய பகுதிகள் விளங்கின
இந்த இடத்தை குறிவைத்து படை நகர்த்தினான் அலெக்ஸாண்டர், இடையில் சில கோட்டைகளை பிடிக்க வேண்டி இருந்தது, அசால்ட்டாக பிடித்தான், ஆனால் களத்தில் இறங்கி போரிடுபவன் என்பதால் காயங்களுக்கும் அவன் இலக்காணான்
அவன் அழைத்து சென்ற மருத்துவபடை அவனுக்கு கைகொடுத்தது, அவனும் அரிஸ்டாட்டிலிடம் மருத்துவம் படித்ததும் பயன்பட்டது
போரில் அவன் காயத்தை குணமாக்கும் வரை அமைதிகாத்தான், பின் மறுபடியும் யுத்தத்திற்கு கிளம்பினான்.
செய்தி பேரரசரான டாரியசுக்கு சென்றது, அவனும் அலெக்ஸாண்டரின் நகர்வுகளை கவனித்துகொண்டே இருந்தான்
பாரசீக பேரரசு என்பது இந்தியா முதல் கிரேக்கம் வரை பரவியிருந்த பெரும் அரசு, பெரும் நிலபரப்பு அதனால் இம்மாதிரி எல்லை தகறாறுகள் அதிகம். கிரேக்கர்கள் வாலாட்டுவதும் இவர்கள் விரட்டுவதும் வழக்கம்
ஆனால் அலெக்ஸாண்டர் திரும்பி செல்லாமல் முன்னேறுகின்றானா? யோசித்தான் டேரியஸ்
விடமுடியாது, இது வளம் கொழிக்கும் வியாபார பகுதிகள் விட்டுவிட்டால் பாரசீக அரசின் பெரும் செல்வம் பெருகாது.
அன்று இன்றிருக்கும் எல்லைகள் இல்லை இன்றைய துருக்கியின் சில பகுதிகள் சிரியாவிற்குள்ளும் இருந்தது
இந்த பகுதிகள், அதாவது சிரிய துருக்கி பகுதிகள் அன்று அசீரியா என அழைக்கபட்டது, பைபிளில் கூட சான்றுகளை காணலாம்
இங்கு முக்கியமான நகரம் இசிஸ் என்பது இருந்தது, மலையும் கடலும் சார்ந்த பகுதி இன்று துருக்கி எல்லையில் உள்ள நகரம்
அங்கு தான் படையெடுத்தான் அலெக்ஸாண்டர், அசீரிய மன்னன் அலறினான், இவனை சமாளிக்க தன்னால் முடியாது என அறிந்து பேரரசரான டாரியஸிடம் செய்தி அனுப்பினான்
டாரியசுக்கும் மிகுந்த கோபம், என்ன இந்த கிரேக்கன்? 22 வயதில் இவ்வளவு ஆசையா? ஏதோ எல்லையில் வென்றுவிட்டால் மொத்த பாரசீகமுமே கிடைத்துவிடும் என்ற சிறுபிள்ளைத்தனமான ஆசையா?
ஒரு காட்டு காட்டினால்தான் அடங்குவான் என சொல்லிவிட்டு தானே படை நகர்த்தி வந்தான்.
அலெக்ஸாண்டர் இதனை எதிர்பார்க்கவில்லை, பாபிலோனில்தான் டேரியஸை எதிர்கொள்ளமுடியும் என எண்ணியிருந்தான், ஆனால் டேரியஸ் முந்திகொண்டான் என்ன செய்யலாம்?
முடிந்தளவு படை திரட்டினான், படையினை விட களத்தினை தேர்வு கவனமாக தேர்வு செய்தான், ஆம் ஒரு இடுக்கான பகுதி அது.
திறந்த பரந்தவெளி என்றால் டாரியசிடம் செல்லுபடியாகாது, காரணம் டாரியஸிடம் சிறந்த தேர்படை இருந்தது, அதில் ஹாயாக அமர்ந்துகொண்டு அம்பெரியலாம், வாழ் சுழற்றலாம், ஈட்டி எறியலாம் பல வசதிகள்
அப்படியான வாய்ப்பு டாரியசுக்கு வழங்கபட கூடாது, நமது ஈட்டிபடையும், வேகமான குதிரைபடையுமே நமக்கு பலம். அதற்கு களம் மகா முக்கியம்.
இதனை கணக்கிட்டுத்தான் ஒரு குறுகலான மலை சந்தில் மோத கணக்கிட்டான் அலெக்ஸாண்டர், தந்திரமகா அந்த இடுக்கின் அப்பக்கம் நின்றுகொண்டு சவால் விட்டான்
இந்த வியூகம் டேரியஸுக்கு புரியவில்லை, இன்னொன்று அதுவரை அவன் தோல்வி அறியாதவன், கிட்டதட்ட 1.5 லட்சம் சேனையாளர்களுடன் அவன் யுத்த களத்திற்கு வந்தான்
அதாவது அலெக்ஸாண்டரின் வியூகத்தில் அவனை அறியாமல் களத்திலே சிக்கிவிட்டான் டாரியஸ்.
அலெக்ஸாண்டரிடம் இருந்தது 50 முதல் 60 ஆயிரம் வீரர்கள்தான், டேரியஸின் படை அவனை விட மும்மடங்கு பெரிது
இரு பராக்கிரம சாலிகள், எதிர் எதிர் பக்கம் நின்றுகொண்டிருந்தனர், அலெக்ஸாண்டரா? டேரியஸா பார்த்துவிடலாம் என உறுமிகொண்டிருந்தார்கள்
டாஸ் யார் போட்டார்கள் என்பது வரலாற்றில் இல்லை, ஆனால் மிக உக்கிரமான மோதல் தொடங்க தயாராக நின்றார்கள்
டாரியஸ் கம்பீரமாக தன் தேரில் வீற்றிருந்தான், இப்பக்கம் அலெக்ஸாண்டர் தன் புக்கிலேஸில் அமர்ந்திருந்தான், அவன் அருகே பார்மினியோ நின்றான்
அலெக்ஸாண்டரின் கையசைப்பிற்காக களம் காத்திருந்தது.
தொடரும்…