வெல்ல பிறந்தவன் : 08
அலெக்ஸாண்டர் படையினை மூன்றாக பிரித்திருந்தான், இடதுபக்கம் காலாட்படை வலதுபக்கம் குதிரைபடை என நிருத்தியிருந்தான் முன்றாம் அணியினை தனக்கு பின்னால் நிறுத்தியிருந்தான்.
அப்பக்கம் நடுவில் டேரியஸ் இருந்தார், அவரை சுற்றி மெய்பாதுகாவல் படை இருந்தது இடது பக்கம் குதிரைபடை, தேர் படைகள் இருந்தன, வலது பக்கம் காலாட்படை இருந்தது.
யார் சங்கு ஊதினார்களோ தெரியாது, சிக்னல் கொடுத்தான் அலெக்ஸாண்டர். போரை அவன்தான் முதலில் தொடங்கினான், தன் பலமிக்க குதிரைபடையினை டேரியசின் காலாட் படையினை நோக்கி ஏவினான்
டேரியரின் அம்புபடை தேனி கூட்டமாக அம்பு எய்தது. அலெக்ஸாண்டரின் குதிரைபடை தடுமாறியது. அலெக்ஸாண்டரின் பெரும் பலமான குதிரைபடை முன்னேற முடியாமல் தவிக்க, பெருமித சிரிப்பு சிரித்தான் டேரியஸ்.
தோல்வியின் திணறல் முகம் தெரிய, சட்டென வியூகத்தை மாற்றினான் அலெக்ஸாண்டர், தன் காலாட்படையினை டேரியஸின் குதிரை+ தேர் படை நோக்கி ஏவினான்.
டேரியஸின் பலமிக்க தேர்படையினை அலெக்ஸாண்டரின் காலட்படை ஈட்டி எறிந்து கட்டுபடுத்தி ஒரு வழியினை கொடுத்தது, அந்த இடைவெளியில் அலெக்ஸாண்டரின் பின்னால் இருந்த மூன்றாம் அணி ஊடுருவிற்று
அதவாது பின்னால் இருந்தும் டேரியஸை தாக்க ஆரம்பித்தது அலெக்ஸாண்டர் படை, இதனை டேரியஸ் எதிர்பார்க்கவில்லை, முன்னும் எதிரி பின்னாலும் எதிரி என்றால் எந்த மன்னன் குழம்பமாட்டான்?
அதிர்ந்தான் டேரியஸ்.. அவனின் 11 தளபதிகளும் ஆளுக்கொரு பக்கம் பிரிந்தனர். அலெக்ஸாண்டர் எதிர்பார்த்தது இதனைத்தான்.
ஒரு மாதிரியான முற்றுகையில் சிக்கியது டேரியஸ் படை, வியூகம் குழம்பியது மலையிடுக்கில் தொடங்கிய சண்டையினை அப்படியே நகர்த்தி சென்றான் அலெக்ஸாண்டர். டேரியசின் தேர்படை பலமான சேதத்தை சந்தித்தது
டேரியஸின் படையினை விட அலெக்ஸாண்டர் படை மிக சிறியது ஆனால் பலமான வியூகத்தில் அது டேரியஸ் படைக்கு கடும் சேதம் கொடுத்தது. எங்கும் ரத்தம், ஓலம், மனித உறுப்பு என குவிந்து கிடந்தது களம்
யுத்தம் நடந்துகொண்டே இருக்க அலெக்ஸாண்டரின் படைகள் ஒருவித நகர்த்தல் யுத்தம் செய்தது அதாவது டேரியரின் படைகளை குறிப்பிட்ட இடத்திற்கு நகர்த்தியபடியே சென்றது. அந்த வியூகபடி சண்டையிட்டுகொண்டிருந்தான் அலெக்ஸாண்டர்
டேரியசோ அதனை கவனிக்கதவறி வெற்றியினை விட்டுவிட கூடாது எனும் பதற்றத்திலே போரிட்டான்.
ஒரு கட்டத்தில் ஒரு பக்கம் நதி ஒரு பக்கம் கடல், ஒரு பக்கம் அலெக்ஸாண்டர் என மூன்று பக்கமும் சூழ்பட்டான் டேரியஸ். ஒரு கட்டத்தில் டேரியசுக்கு புரிந்தது.
“இவன் சாதரண ஆளில்லை, யுத்தம் நடத்துவதாக நம் கவனத்தை திருப்பி மிக இக்கட்டான இடத்திற்கு கொண்டுவந்துவிட்டான், ஆற்றுக்குள் கடலுக்குள் சென்று எப்படி போரிடுவது. சந்தேகமில்லை இவன் பூகோளத்தையும் சண்டைக்கு அழைக்கும் வித்தைக்காரன், இனி சண்டை தொடர்ந்தால் அழிவு நிச்சயம், இப்போதைக்கு தப்பலமாம்”
ஆம், அந்த மாமன்னன், ராஜாதி ராஜ…. டேரியஸ் தப்பி ஓடிவிட்டான். அவனுக்கும் காரணம் இருந்தது. “சிரிய எல்லையில்தானே அடித்துவிட்டான் அலெக்ஸாண்டர். நான் என் பாபிலோனுக்கு செல்கின்றேன், பெரும் படை திரட்டி மறுபடியும் யுத்தம் தொடங்கவேண்டும்
இவனை விட்டால் பாரசீகத்திற்கு ஆபத்து, விடமாட்டேன்” என சொல்லிவிட்டு பாபிலோனுக்கு பறந்தான். அலெக்ஸாண்டரும் அவனை விரட்டவில்லை, பயந்து ஓடிவிட்டான் ஓடட்டும். நாம் எகிப்தினை பார்த்துவிட்டு பின் பாபிலோன் செல்லலாம் எகிப்து நோக்கி சென்றான்
போகும் வழியில் இன்றைய லெபனான் ஜோர்டான் எல்லையில் தீர் என்றொரு நாடு இருந்தது. அங்கொரு ஜகஜால கில்லாடி இருந்தான் அவன் பெயர் டயர், கொஞ்சம் புத்திசாலி.
அலெக்ஸாண்டர் துருக்கிபக்கம் அடிக்கும்பொழுதே இவனுக்கு விளங்கிற்று, நிச்சயம் அலெக்ஸாண்டர் இப்பக்கம் வரலாம். கோட்டையில் எல்லாவற்றையும் சேகரித்து வைத்து பெரும் படையோடு கோட்டையில் மிக தயாராக இருந்தான், கிட்டதட்ட 5 ஆண்டு தாக்குபிடிக்கும் அளவு தயாராக இருந்தான் டயர்.
லெபனான் பக்கம் வந்த தன் வழக்கமான மடலை அனுப்பினான். அதில் இரண்டே வாய்ப்புதான் உண்டு. அடிபணிகின்றீரா? அல்லது யுத்தத்திற்கு தயாரா?
டயர் அடிபணியவில்லை. போர் தொடங்கிற்று. அலெக்ஸாண்டர் பெரும் சோதனையினை அங்குதான் சந்தித்தான்.
டயரின் தாக்குதலும் கோட்டையும் வலுவாக இருந்தது. டேரியஸை விரட்டிய அலெக்ஸாண்டர் அவனிடம் திணறினான். அந்த யுத்தம் கிட்டதட்ட ஒருவருடம் நீடித்தது.
அலெக்ஸாண்டரை மிக தீரமாக எதிர்த்து தண்ணிகாட்டிய மன்னன் அந்த டயர்தான். வரலாற்றில் முதலில் அலெக்ஸாண்டர் கொஞ்சம் அஞ்சியது அவனிடம்தான். கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறினான் அலெக்ஸாண்டர்.
பின் கோட்டையின் பலவீனங்களை படித்து, மிகுந்த சிரமபட்டு ஒரே நேரத்தில் இருபுறமும் உடைத்து ஒருவழியாக டயரை காலி செய்தான். அந்த டேரியஸ் இந்நேரம் திரும்பி வந்திருந்தால் நிச்சயம் அலெக்ஸாண்டர் அன்றே காலி, அப்படிபட்ட சிக்கல் அது.
ஆனால் அடிபட்ட பாம்பாக, காயம்பட்ட சிங்கமாக பாபிலோனில் உறுமிகொண்டிருந்த டேரியஸுக்கு அந்த சிந்தனை எல்லாம் இல்லை, இப்படி எதிரிகள் சேராமல் போனதில் அலெக்ஸாண்டருக்கு பெரும் சாதகம் உண்டு.
தீர் கோட்டையினை பிடித்துவிட்டு பின் இன்றைய இஸ்ரேலில் கால் வைத்தான் அலெக்ஸாண்டர்.
அப்பகுதியின் ஏக்ர் கோட்டை என்றொரு இடம் உண்டு, ஹைப்பா துறைமுகத்தையொட்டி வரும். அதனை கைபற்றினான், துறைமுக நகரம் என்பதால் அவனுக்கு பல லாபங்கள் இருந்தன. ஐரோப்பிய கப்பல்கள் தரித்து நிற்கும் இடம் என்பதால் அங்கிருந்து கிரீசுக்கும் கப்பலில் செல்லலாம் என்பதால் அவனுக்கு பலத்த அனுகூலம்
ஆம், அவன் அரசு இப்பொழுது கிரேக்கம் முதல் இஸ்ரேல் வரை வந்தாயிற்று, நிர்வாகம் முதல் பல விஷயங்களுக்கு கப்பல் போக்குவரத்து பெரும் பலம்.
அன்று இன்றைய காசாவில் பாலஸ்தீனிய கோட்டையொன்று இருந்தது, அதனை பிடித்தான், பின் ஜெரிக்கோ, எருசலேம் என அவன் கையில் எல்லா நகரங்களும் விழுந்தன
அன்றைய ஜெருசலேமினை பார்வையிட்டான், சாலமோன் ஆலயம் இடிந்து கிடந்தது, இதுதான் யூதரின் ஒரே ஆலயமோ என கேட்டுகொண்டான். அவனை பொறுத்தவரை கிரேக்க கடவுள்களே பிராதானம், கிரேக்க கலாச்சாரமே பெரிது. ஜெருசலேமை அவன் பெரிதாக கருதவில்லை என்பதில் ஆச்சரியமில்லை ஆனால் சாலமோன் எனும் ஞானி வாழ்ந்த இடம் என்பதை அவன் தெரிந்திருந்ததால் அம்மண்ணை வணங்கினான்.
அதனை தொடர்ந்து எகிப்து சென்றான். எகிப்தின் தொன்மையும் அவர்களின் தனிதன்மையும் அலெக்ஸாண்டருகக்கு தெரியும். எகிப்தினை அப்பொழுது பாரோக்கள் ஆண்டனர்.
பைபிள், குரானில் வரும் பாரோக்களின் தொடர்ச்சி அவர்கள். தேர்படை முதல் பல படைகள் வைத்திருந்தவர்கள்தான் ஆனால் அலெக்ஸாண்டர் முன் முடியவில்லை, பாரோக்களை வீழ்த்தி ஆட்சியினை கைபற்றினான் அலெக்ஸாண்டர்.
பலநூறுவருட பாரம்பரியம் கொண்ட, பைபிள் காலமெல்லாம் பெரும் பலத்தோடு இருந்த பாரோக்கள் அலெக்ஸாண்டர் காலத்தோடு சரி. அதன் பின் அவர்கள் எழும்பவில்லை அதனால் பிரமிடுகளும் இல்லை, எகிப்தின் தலையெழுத்தை திருத்தி எழுதினான் அலெக்ஸாண்டர்.
எகிப்திய மக்களுக்கு அரசனே கடவுள், அவ்வகையில் அலெக்ஸாண்டரும் கடவுள் ஆனான். கடவுள் அலெக்ஸாண்டர் வாழ்க எனும் கோஷம் எகிப்து எங்கும் ஒலித்தது.
எகிப்தியர்கள் தங்கம் சேர்ப்பதில் வெறியர்கள். அவர்கள் தேர் முதல் பிரமீடு வரை தங்கமும் வைரமும் குவிந்திருக்கும். அப்படி பல கொள்ளையர்கள் பிரமீடை தோண்டும்பொழுது அலெக்ஸாண்டர் விடுவானா? சில பிரமீடுகளை தோண்டிபார்த்தான், பல பொக்கிஷம் கிடைத்தது.
அவனுக்கு தங்கத்தில் எல்லாம் விருப்பம் இல்லாததால் அவற்றை கொண்டு தன் புகழ் அழியாமல் எகிப்தில் நீடித்திருக்க அங்கு ஒரு நகரை நிர்மாணம் செய்தான் அலெக்ஸாண்டர். கிரேக்க பாணியில் அமைத்து அதற்கு தன் பெயரினை இட்டான். இன்றுவரை அந்த அலெக்ஸாண்டிரியா நகரம் அவன் அடையாளத்தை தாங்கி எகிப்தில் நிற்கின்றது.
வந்தாயிற்று வென்றாயிற்று. எகிப்து கடவுளாகவும் ஆயிற்று ஆனால் கனவு என்ன? இந்தியாவினை காணவேண்டும் இந்தியாவினை வெல்லவேண்டும், ம்ம் கிளம்பலாம் என இந்தியா நோக்கி கிளம்பினான்
இதே எகிப்தில் பின்னாளில் கிரேக்க வம்சத்தில் ஒரு கிளியோபாட்ரா வருவாள் என்றும், தன் தந்தை ஒரு கிளியோபாட்ராவால் கொல்லபட்டது போல பின்னொரு மாவீரன் அந்த கிளியோபாட்ராவால் கொல்லபடுவான் என்றோ அலெக்ஸாண்டருக்கு தெரிந்திருக்க நியாயமில்லை
இந்தியா நோக்கி கிளம்பினான் அலெக்ஸாண்டர், ஆனால் போகும் முன் மாபெரும் பாபிலோனை கடந்தாக வேண்டும்.
அடிபட்ட டேரியஸ் அங்குதான் இருக்கின்றான், அவனை களத்தில் முடித்திருந்தால் இப்பொழுது சிக்கல் இல்லை. என்ன செய்ய? தப்பி ஓடிவிட்டான், ஆனால் என்ன சென்று அடித்தாக வேண்டும், இல்லாவிட்டால் இந்தியாவிற்கு எப்படி செல்ல?
அலெக்ஸாண்டர் எகிப்து கடவுளாகிவிட்டு பாபிலோன் நோக்கி வரும் செய்தி பரவியது. வழியில் இருந்த மன்னர்கள் எல்லாம் இம்சை அரசன் வடிவேலு போல வெள்ளைகொடியோடு நடனமாடி சரண்டர் ஆனார்கள்.
செய்தி டேரியசுக்கும் சென்றது
“என்னது சிங்கத்தை அதன் குகைக்கே வந்து சந்திப்பானா? அலெக்ஸாண்டார்?
வா.. வா மாபெரும் படையினை திரட்டி வைத்திருக்கின்றேன், உன்னை கொன்று அந்த தலையினை மாவீரன் நெபுகாத் நேச்சர் சிலை முன் குத்தி வைக்கின்றேன், உன் ரத்தம் பாக்தாத் மண்ணில் பாயவேண்டும் என விதி இருந்தால் யார் தடுக்க முடியும்?”
பெரும் வீரர்களும், கள வித்தகர்களும் ஆலோசனை வழங்க மொத்த பாபிலோனுமே அலெக்ஸாண்டரை விரட்ட பொங்கி எழுந்தது
அன்றைய உலகின் மிகபெரும் வல்லரசுடன், புதிதாக எழும்பிய 24 வயது அலெக்ஸாண்டர் மோத வந்துகொண்டிருந்தான்
தொடரும்…