வாமணன் : நெப்போலியன் வரலாறு : 2

Image may contain: 1 person, standingநெப்போலியனுக்கு 20 வயதாயிருக்கும் பொழுது, அதாவது அவன் ராணுவத்தில் இருக்கும்பொழுதுதான் பிரென்ஞ் புரட்சி வெடித்தது.

அமெரிக்க விடுதலைக்கு பிரான்ஸ் உதவி செய்தது ஒன்றும் ரகசியமல்ல, மக்களாட்சி அங்கு மலரவேண்டும் என்பதை விட பிரிட்டன் ஒழியவேண்டும் என்ற எண்ணத்தில் பிரான்ஸ் அமெரிக்கர்களுக்கு உதவியது.

அமெரிக்கா விடுதலை அடைந்த 10ம் வருடத்தில் பிரான்ஸ் மக்களுக்கும் மக்களாட்சி ஆசைவந்தது, மன்னனின் கொடுங்கோல் ஆட்சியும் ஒரு காரணம்.

மன்னன் மக்களை அடக்கி பார்த்தாலும், கில்லட்டின் எல்ல்லாம் வைத்து மிரட்டி பார்த்தாலும் மக்கள் அசையவில்லை, பெரும் கிளர்ச்சி வெடித்தது, மன்னராட்சி முடிந்தது

மன்னை விரட்டினார்களே தவிர, அடுத்து எப்படி ஆளவேண்டும், எப்படிபட்ட ஆட்சி என யாருக்கும் சிந்தனையில்லை, குழப்பம் அதிகரித்தது. மிச்ச மீதி இருந்த அரசவிசுவாசிகள், புரட்சியாளர்கள் அந்த புரட்சியாளர்களுக்குள்ளான குழப்பம் என சிக்கி தவித்தது பிரான்ஸ்

சுருக்கமாக சொன்னால் ஜெயாவிற்கு பின்னரான அதிமுக நிலையில் இருந்தது. ஒருவேளை தமிழ்நாடு தனிநாடாக இருந்து ஜெயா அதன் அதிபராக இருந்து மரித்திருந்தால் இன்று தமிழகத்தில் யாராவது நிம்மதியாக வாழமுடியும்?

இந்தியா எனும் பெருநாட்டில் ஒரு மாநிலமாக இருப்பதால் சிக்கல் இல்லை, அதிமுக‌ விளையாட்டுகளை ரசிக்க முடிகின்றது, இல்லாவிட்டால் முடிந்தது விஷயம், சோமாலியா அளவிற்கு ஆகியிருப்போம்

அந்த குழப்பமான பிரான்ஸ்லில் இன்னொரு சிக்கலும் தொடங்கியது, அதாவது சில பகுதிகள் பிரிவினை கோரின, இதுதான் வாய்ப்பு என பொங்கின. அவற்றிற்கு அண்டை நாடுகளின் தூண்டுதலும் இருந்தது.

இதில் நெப்போலியன் பிறந்த கார்சியா தீவும் சிக்கிகொண்டது. அது கச்சதீவு மாதிரியான சிக்கலில் இருந்தது, ஜெனோவா குடியரசால் பிரான்சுக்கு கொடுக்கபட்ட தீவு அது, தீவுவாசிகள் தனிகொடி தூக்கினர்.

பிரான்ஸ் ராணுவத்தில் இருந்தாலும், சொந்த ரத்தம் கார்சியா என்பதால் நெப்போலியன் பிரிவினைவாதிகளுடன் சேர்ந்து பிரென்ஞ் ராணுவத்தை எதிர்த்தான்

அது கொஞ்சகாலம் சென்றது, அவனுக்கும் அந்த பிரிவினை போராளிகளின் போர் திட்டத்திற்கும் ஒத்துவரவில்லை, அவர்கள் வெற்றிபெறுவதாகவும் தெரியவில்லை.

மறுபடியும் பாரீசுக்கு வந்தான் நெப்போலியன், எங்கும் குழப்பம் ஆளாளுக்கு அதிகாரம் செய்துகொண்டிருந்தார்கள், கலவரம் குழப்பம் என பாரீஸ் குழம்பியிருந்தது

அலுவலகம் சென்ற நெப்போலியனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது, நிச்சயம் அது பேரதிர்ச்சி

அவன் ராணுவத்தை எதிர்த்து போராடிகொண்டிருந்தபொழுது, இங்கு யாரோ அவனுக்கு ராணுவத்தில் பதவி உயர்வு அளித்திருந்தார்கள். அந்த அளவு குழப்பத்தின் உச்சியில் இருந்தது பிரான்ஸ் ராணுவம்.

மறுபடியும் அதிர்ச்சி அளித்தார்கள், நீ உடனே சென்று கார்சியாவில் போராடும் கிளர்ச்சிகாரர்களை அடக்கு என உத்தரவிட்டார்கள்.

இதுவரை அவன் யாரோடு இணைந்து கார்சியா விடுதலைக்காக போராடினானோ, இனி அவர்களை கொல்லவேண்டும் என கட்டளை பிறப்பிக்கபட்டது.

1793ல் கார்சியோ கலவரகாரர்களை அதாவது தன் சொந்த ரத்தத்துடன் யுத்தம் புரிய கார்சியோ சென்றான் நெப்போலியன், அவன் மனம் முழுக்க யுத்தத்தில் லயிக்கவில்லை

ஏதோ ஒப்புக்கு செய்தான், அவனால் அந்த கலககாரர்களை நொடியில் அடக்கியிருக்க முடியும். ஆனால் ஏதோ ஒரு பாசம் அவனை தடுத்தது. அவன் தான் பினவாங்கினானேயன்றி கலவரக்காரர்கள் அவனை கொல்லும் முடிவுக்கு வந்தனர்.

இதனையறிந்த நெப்போலியன் கொஞ்சநாளில் தன் திட்டம் தோல்வி என சொல்லி பாரீசுக்கு திரும்பினான், “ச்சே நீ இவ்வளவுதானா, சரி இந்த பெஞ்சில் உட்கார் நீ ஒன்றுக்கும் தேறமாட்டாய்..” என சொல்லிவிட்டார்கள் உயரதிகாரிகள்

அவனுக்கோ தன் நிலையினை சொல்லமுடியாத நிலை, பொறுப்புக்கும் பாசத்திற்கும் இடையே ஊசலாடிகொண்டிருந்த குழப்பத்தில் இருந்தான்.

தான் யார் என நிரூபிக்கவேண்டிய கட்டாயம் அவனுக்கு மனதில் வைராக்கியமாக இருந்தது. மனதால் விம்மிகொண்டிருந்தான்

வாய்ப்பு பிரிட்டிசார் வடிவில் வந்தது.

பிரான்ஸின் தென் கடற்கையோர நகரம் டுலன், துறைமுக நகரம் அது. கோட்டையும் துறைமுகமும் இருந்தது. ஆங்கில கால்வாய் வழியாக வரும் பிரிட்டானிய கப்பல்கள் அங்குதான் தரிக்கும்.

பிரான்சின் அரசியல் குழப்பத்தை கண்ட பிரிட்டன், இனி இந்த டுலன் நகரம் எங்களுக்கு என ஜம்மென்று அமர்ந்துகொண்டது, போயஸ் கார்டன் வீட்டில் சசிகலா குடும்பம் அமர்ந்தது போல சம்மணமிட்டு அமர்ந்தது.

சும்மாவே பிரான்சுக்கும், பிரிட்டனுக்கும் ஈகோ பிரச்சினை அதில் பிரிட்டன் தன் மீதே கைவைப்பதை பிரான்ஸின் மக்களாட்சி மன்றம் பொறுப்பதற்கில்லை

ஒரு சிறியபடையினை அனுப்பி அதனை மீட்க சொன்னால் பிரிட்டனின் அடியில் அது சிதறி கலைந்தது. திரும்ப கூட வரவில்லை

இனி யாரை அனுப்பலாம் என ராணுவத்தார் சிந்தித்தபொழுதுதான் அவர்கள் முன்னால் நெப்போலியன் இருந்தான்.

பேச்சு அந்த நகரை எப்படி மீட்பது என சென்றபொழுது என்னால் முடியும் என துணிந்து சொன்னான், அவனை யாரும் நம்பவில்லை

ஆனால் பல படைகள் தோற்ற நிலையில் இவனை அனுப்பித்தான் பார்ப்போமே, அவனும் தோற்கத்தான் போகின்றான் என முடிவு செய்த குழு அவனுக்கு பச்சை கொடி காட்டியது.

நெப்போலியன் என்றால் யார்? என உலகிற்கு முதன் முதலில் காட்ட கிளம்பினான் அவன்.

அவன் எதிர்க்க போவது பெரும் அனுபவமும் துல்லியமும் பலமும் வாய்ந்த பிரிட்டிசாரை என்பது அவனுக்கு தெரிந்தது, தன் படையினருக்கு தெரியாமல் இன்னொரு காரியத்தை செய்தான்.

அதாவது நாட்டில் புரட்சிபடை ஒன்று இந்த மக்களாட்சி சரியில்லை என சுற்றிகொண்டிருந்தது , ரேப்பியர்ஸ் பிரதர்ஸ் என்பவர்கள் அதனை வழிநடத்தினர். அவர்களிடம் பேசினான் நெப்போலியன்

“இங்கே பாருங்கள் நீங்களோ, இல்லை மக்களாட்சியின் டைரகடர்களோ ஆள்வதற்கு இங்கு முதலில் பிரான்ஸ் வேண்டும், இந்த டுலன் நகரத்திற்கு பிரிட்டானியர் வந்தாயிற்று விட்டால் முழு பிரான்ஸையும் விழுங்குவார்கள், அதனால் முதலில் அவர்களை விரட்டலாம், நம் சண்டையினை பின்னால் வைத்துகொள்ளலாம்..”

அவர்களும் இணங்கினர் சில உதவிகளை செய்தனர்

தன் முதல் யுத்தத்தை நடத்த சென்ற அவனுக்கு சவால் பயங்கரமாக இருந்தது. அங்கு பிரிட்டன் படைகளோடு பிரான்ஸ் மன்னரின் படைகள், ஸ்பெயின் படைகள் என குவிந்திருந்தன‌

அவர்களும் பெரும் முடிவோடுதான் வந்திருந்தார்கள்.

இப்படி பிரான்சு மக்கள் பிரான்சை ஆள தொடங்கினால் தங்கள் நாட்டு மக்கள் தங்களை எதிர்ப்பார்கள், பின் மன்னன் எங்கே? மணி மகுடம் எங்கே? எவ்வளவு பெரிய ஆபத்து இது? இந்த சனியனை விட கூடாது. இந்த கிளர்ச்சியினை அடக்கி இன்னொரு மன்னனை இங்கு அமர்த்தாவிட்டால் நாம் அழிந்தே விடுவோம் என கங்கணம் கட்டி வந்திருந்தார்கள்.

இருவரும் அணிவகுத்து மோத தயாரானார்கள், அதுவரை பிரான்ஸ் வீரர்கள் எப்படி யுத்தம் புரிவர் என நன்றாக அறிந்திருந்த பிரிட்டன் படைகளும் தயாராயின‌

களத்தின் பூகோள அமைப்பினை மிக கவனமாக உள்வாங்கியிருந்த நெப்போலியன் புன்னகைத்தான்

அவனை முதன் முதலில் உலகிற்கு அடையாளம் காட்டிய அந்த டுலோன் யுத்தம் 1793ல் ஒரு டிசம்பரில் 
தொடங்கிற்று.

கட்டளைகளை பிறப்பித்தபடியே எதிரியின் நகர்வினை அவர்கள் பலவீனத்தை நோக்கிகொண்டிருந்தான் 23 வயது இளைஞனான நெப்போலியன்.

வருவான் மாவீரன் …