கிறுக்கு ராஜாக்கள் தொடர்

விகடனில் நண்பர் Mugil Siva கிறுக்கு ராஜாக்கள் தொடர் எழுதிகொண்டிருக்கின்றார், உலகமெல்லாம் இருந்த கிறுக்கு ராஜாக்களின் கதையினை எழுதுகின்றார்.

மிக நன்றாக, ஆழமாக வாசித்து எழுதுகின்றார், சூப்பரோ சூப்பர்.

உலகம் முழுக்க கிறுக்கா ராஜாக்கள் இன்றும் அதிபர்கள், பிரதமர்கள் என்ற வகையில் ஆண்டுகொண்டுதான் இருக்கின்றார்கள் என்பது வேறுவிஷயம்

இதுவரை Mugil Siva க்கு சிக்கல் இல்லை, இனி இந்திய கிறுக்கு ராஜாக்கள் என சொல்லபட்டவர்கள் மீது இவர் கை வைக்கும்பொழுதுதான் அவருக்கு சிக்கல் வரலாம்

இந்தியாவில் ஏகபட்ட கிறுக்கு ராஜாக்கள் உண்டு எனினும், மாவீரன் சிவாஜியின் வாரிசுகள், அவுரங்கசீப், முகமது பின் துக்ளக் என பல குறிப்பிடதக்கவர்கள் உண்டு

இவர்களை பற்றி எழுதினால், ஒருபக்கம் சங்பரிவார கும்பலிடமும் , இன்னொரு பக்கம் அந்த கும்பலிடமும் நண்பர் சிக்கலாம்

எப்படி கையாள போகின்றார் என்பது அவர் முடிவு, ஆனால் இந்நாளைய கிறுக்கு ராஜாக்களை பற்றி அவர் எழுதவேண்டிய அவசியமில்லை, அவர்களை நாமே பார்த்துகொண்டிருக்கின்றோம்