கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை
அந்த பேராசிரியருக்கு கவிஞர் என்பதை தாண்டி பல முகங்கள் உண்டு
வரலாற்று கல்வெட்டு ஆய்வாளர், குழந்தைகளுக்கான தமிழ் பாடல்களை எழுதியவர், ஏராளமான உரைகளை கொடுத்தவர், நூல்களை கொடுத்தவர் என்றேல்லாம் சிறப்புகள் உண்டு.
உலகெல்லாம் இருந்த பல நூல்களை தமிழுக்கு மொழிபெயர்த்து கொடுத்தவர், அதில் உமர்கய்யாமின் பாடல்களும் உண்டு
தமிழுக்கும், தமிழர் வரலாற்றிற்கும் , கல்வெட்டு ஆராய்ச்சிகள் அவர் செய்தது ஏராளம்
இந்த நூற்றாண்டின் சிறந்த தமிழ் கவிஞர்களில் அவரும் ஒருவர், அதில் சந்தேகமே இல்லை.
பல மொழிகள் படித்திருந்தாலும், தமிழுக்கு அவர் ஆற்றிய தொண்டு மறக்க கூடாதது.
தமிழ் அகராதி உருவாக்கத்திலும் அவர் பங்கு இருந்தது.
அவர் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை. அவரின் தமிழ் அப்படி ஒரு அழகு.
தமிழ் என்பது அண்ணா காலத்தில் உருவாகி, கலைஞர் காலத்தில் உச்சம்பெற்ற மொழி அல்ல. திராவிட கட்சிகள் மட்டும் தமிழுக்கு பாடுபட்டது என்பதெல்லாம் அரசியல் கோஷம்
சைவ சித்தாந்த கழகம், தனிதமிழ் இயக்கம், இன்னும் ஏராளமான இயக்கங்கங்கள் தமிழ் வளர்த்தன
கடந்த 50 ஆண்டுகளில் தமிழ் வளர்ப்போர் யாரென்பதை மாநில அரசே முடிவு செய்தது, அதில் அரசியலும் கலந்து இன்று 4 வார்த்தை தமிழில் சரியாக பேச தெரியாதவனெல்லாம், 10 பக்கம் எழுதிவிட்டு கவிஞன் என்கின்றான்
கவிமணி தேசிய விநாயகம் பிள்ளைக்கு அவருக்கான இடத்த்தை தமிழகம் கொடுத்ததா என்றால் இல்லை
காரணம் அவரின் கொள்கை வேறு, அவர் சொன்னது இப்படித்தான்
“தமிழுக்கும் உ.வேசா முதல் ஏராளமான பிராமணர்கள் பாடுபட்டிருக்கின்றார்கள், அவர்கள் தமிழர்களுக்கு விரோதிகள் அல்ல”
அதில் உண்மையும் இருந்தது, இந்த உண்மைதான் கவிமணியினை ஓரங்கட்ட செய்தது.
பிராமணனை எதிர்ப்பதே உண்மையான தமிழ்பற்று எனும் மாய முழக்கத்தில் ஓரம் கட்டபட்டார் கவிமணி
திராவிட கட்சிகளால் பல நன்மைகள் விளைந்ததா என்பது வேறு விஷயம், ஆனால் பல நல்ல தமிழறிஞர்கள் மறக்கடிக்கபட்டார்கள் என்பது கசப்பான உண்மை.
இன்று கவிமணிக்கு நினைவுநாள். அந்த நாஞ்சில்நாட்டு அறிஞனுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்.