ஜின்னாவின் மகள் தினா வாடியா காலமானார்
பாகிஸ்தானை உருவாக்கிய ஜின்னாவின் மகள் தினா வாடியா காலமானார்
அந்த ஜின்னா அப்பொழுது பிரிட்டிஷ் இந்தியாவின் சுதந்திரத்திற்காக போராடியவர்களில் ஒருவராக அறியபட்டார், அவர் நன்கு படித்தவர், வழக்கறிஞர் மிக சிறந்த வாததிறமை மிக்கவர்
அவருக்கு ஒரு நண்பர் இருந்தார் அவர் பெயர் தின்ஷா பேட்டி, அவர் பார்சி, டாட்டாவின் உறவினர். ஜின்னாவோடு நண்பரான அவர், ஜின்னாவினை தன் சிம்லா மாளிகைக்கு விருந்துக்கு அழைத்தார்
அந்த தின்ஷாபேட்டிக்கு ஒரு மகள் இருந்தாள் அவள் பெயர் ரத்னாபாய் தின்ஷா, 16 வயதுதான் ஆகியிருந்தது. செல்லபெயர் ருட்டி
மிக சிறந்த அழகி என வரலாறு சொல்கின்றது, அதாவது வருஷம் 16 குஷ்பூ போல இருந்திருக்கலாம், அதனை மிஞ்சி எல்லாம் இன்னொரு அழகி வந்துவிட முடியாது
அந்த மிக அழகான ரத்னபாய் தன் வீட்டுக்கு விருந்துக்கு வந்த ஜின்னாவுடன் பழகுகின்றாள், அது காதலாகின்றது
தின்ஷா மறுக்கின்றார், அதற்கு மிக பெரும் காரணம் ரத்னாபாய்க்கும் ஜின்னாவிற்கும் 25 வயது வித்தியாசம்
மைனர் என் மகள், இனி என் முகத்தில் விழிக்காதே என சொல்லி ஜின்னாவினை விரட்டினார் தின்ஷா
ஆனால் காதல் வலுபட்டது, ஜின்னாவின் அறிவும் இன்னபிற விஷயங்களும் காதலை வலுபடுத்தின
உலகில் அழகினை கண்டு வரும் காதல் உண்டு, பணத்தினை கணடுவரும் காதல் உண்டு,
ஆனால் அறிவினை கண்டு வரும் மிக சில காதல்கள் உண்டு
மார்க்ஸ் ஜென்னி அந்த வகை, கலைஞரும் ராசாத்தியம்மாளும் அதே வகை.
கலைஞரிடம் பழகிய பின்னும் ராசாத்திக்கு காதல் வரவில்லை என்றால்தான் ஆச்சரியம், வந்ததில் ஆச்சரியமில்லை
ஜின்னா மீது பல பெண்கள் காதல்வயபட்டிருக்கின்றனர், மனிதரின் பேச்சும் படிப்பும் அப்படி இருந்திருக்கின்றது, கவிகுயில் சரோஜினி தேவி எல்லாம் காதல் விண்ணப்பம் அனுப்பியிருக்கின்றார், ஆனால் ஜின்னா சிக்கவில்லை
எங்கெங்கோ தப்பிய ஜின்னா ருட்டியிடம் சிக்கிகொண்டார்.
இரு வருடம் வளர்ந்த ருட்டி ஜின்னா காதல் அவளுக்கு 18ம் வயதுவரை காத்திருந்தது, தின்ஷாவின் கட்டுபாடையும் மீறி, உடுத்த உடையோடு சுவர் ஏறி தாண்டி ஜின்னாவினை அடைந்தாள் ருட்டி
ஜின்னா அப்பொழுது பாகிஸ்தான் எல்லாம் கேட்கவில்லை, ஆனால் இஸ்லாமியர் பிரதிநிதியாக இருந்தார், அதனால் சிவில் சட்ட திருமணம் செய்யவில்லை. செய்திருந்தால் இஸ்லாமிய பிரதிநிதி எனும் தகுதியினை இழந்திருப்பார்
அதனால் ரூட்டியினை இஸ்லாமியராக்கி திருமணம் செய்துகொண்டார், வருடம் 1918. அன்று ருட்டியின் 18ம் பிறந்தநாள், ஜின்னாவிற்கு வயது 42.
அன்றே 1 லட்சம் வரதட்சனை கொடுத்து ருட்டியினை இஸ்லாமிய முறைபடி மனைவியாக்கினார் ஜின்னா , அது பெரும் பணம், இன்று சிலநூறு கோடிகளுக்கு சமம்
(ஆனால் யாரிடம் கொடுத்திருப்பார், மாமனார் வரவில்லை அதனால் ருட்டியிடம் கொடுத்துவிட்டு திரும்ப வாங்கியிருப்பார்)
இந்த ஜின்னா ருட்டிக்கு பிறந்தவர்தான் இந்த தினா
காதலுக்கு கண் இல்லை , ஆனால் யதார்த்த வாழ்விற்கு உண்டல்லவா? காலம் செல்ல செல்ல ஜின்னாவிற்கும் தினாவிற்கும் பொருந்தவில்லை,
வயது வித்தியாசம் பெரும் தடை, ஜின்னாவின் சிந்தனைகளுக்கும் செயல்களுக்கும் 20களில் கணவனின் அரவணைப்பினை ஏங்கி நின்ற ருட்டியால் ஈடுகொடுக்க முடியவில்லை
அவள் நினைத்திருந்தால் இன்னொரு மணம் செய்திருக்கலாம், ஆனால் ஜின்னா திருந்துவார் என காத்திருந்தாள்
ஜின்னாவோ பாகிஸ்தான் கேட்கும் அளவிற்கு திருந்தியிருந்தார்
தான் தவறு செய்துவிட்டோம் என்ற பெரும் வருத்தத்தில் மனம் நொடிந்து, நோயுற்று தன் 29ம் வயதிலே இறந்தாள் ருட்டி
12 வருடத்திற்கு பின் வந்து மகளின் உடலை பார்த்து கதறினார் தின்ஷா, ஆம் டாட்டாவின் சொத்துக்களுக்கு பாதுகாவலாய் இருந்த அந்த தின்ஷா
தன் ஒரே மகளின் சிறியவயது மரணம் அவருக்கு பெரும் பாதிப்பினை கொடுத்தது, ஒரு வார்த்தை சொல்லியிருந்தால் எத்தனை கோடி கொடுத்தாவது பார்த்திருப்பேனே என அவர் கதறியபொழுது காலம் கடந்திருந்தது
செய்திகேட்டு ஜின்னா வருவதற்குள் ருட்டிக்கு கல்லறை கட்டியிருந்தார்கள்
வந்த ஜின்னா வாய்விட்டு கதறி அழுதார், ஜின்னாவும் சாமான்யம் அல்ல, எங்கும் தன் உணர்ச்சியினினை காட்டாத ஜெயலலிதா போன்ற இறுக்கமான மனது உடையவர் அவர்
அவர் அழுத முதல் சம்பவம் அது, இரண்டாம் சம்பவம் தன் இறுதிநாளில் பாகிஸ்தானை பிரித்தது தவறு என சொல்லி அழுதது
ருட்டி சாகும்பொழுது தினாவின் வயது 10, அந்த ருட்டி ஜின்னாவின் மகளான தினா தந்தையோடுதான் வளர்ந்தாள், இஸ்லாமியராகத்தான் இருந்தார்.
அப்பொழுதெல்லாம் பிரியாத காலங்கள், மும்பையும் கராச்சியும் மிக பெரும் தொழில்நகரங்கள். இரு நகரங்களிலும் பணக்காரர் எல்லோரும் தொழில் நடத்தினர்
அப்படி ஒரு பணக்கார வீட்டு பிள்ளையின் உறவு அவளுக்கு கிடைத்தது அவர் நுவல்லி வாடியா, பெரும் பணக்காரர் பாம்பே டையிங் உட்பட பல தொழிற்சாலைகள் கொண்ட வாடிய குழும தலைவர்
தினா நுவல்லி திருமணம் 1938ல் நடந்தது, அன்று தின்ஷாவிற்கு மகள் கொடுத்த வலியினை ஜின்னாவிற்கு தினா கொடுத்தாள்
அன்று ஜின்னா தின்ஷாவின் நட்புக்கு செய்த துரோகத்திற்கு வாடியா உருவில் அதே வலியினை திருப்பி கொடுத்தது காலம்.
ஆம் பார்சி பெண்ணான ருட்டியினை மணந்த ஜின்னாவிற்கு தன் மகள் இன்னொரு பார்சியினை மணப்பது பிடிக்கவில்லை, பாகிஸ்தான் எனும் கனவினை நோக்கி செல்லும் தன்னுடைய மகளும் மருமகனும் இஸ்லாமாக இருக்க வேண்டும் என்பதுதான் அவர் எண்ணம்
காதலுக்கு முன் அதெல்லாம் செல்லவில்லை, அதன் பின் தன் மும்பை பங்களாவினை காலிசெய்த ஜின்னா கராச்சிக்கு சென்றார் அதன்பின் வரவே இல்லை
தாய்மதம் திரும்பினார் தினா, அதாவது தாய் ருட்டியின் மதமான பார்சி மதத்திற்கே திரும்பி வந்தார். வரலாற்றில் உண்மையாக தாய் மதம் திரும்பியது தினா தான்.
ஜின்னாவும் ருட்டியும் வாழ்ந்த, தினா பிறந்த அந்த பங்களாதான் மும்பையில் சர்ச்சையாக கிடக்கின்றது, பாகிஸ்தான் கேட்டுகொண்டிருக்கின்றது, நாம் கொடுப்போமா? நெவர்.
தினா வாடியாவினை திருமணம் செய்தபின் பாகிஸ்தான் உதித்தது, தினாவின் தந்தை பாகிஸ்தான் தேச தந்தையானார்
ஆனால் தினா இந்திய குடிமகளாக தொடர்ந்தார், இரு முறை பாகிஸ்தானுக்கு சென்றுவந்தார் , தன் மகனிடமும் பேரகுழந்தைகளிடமும் இதுதான் உங்கள் பாட்டனார் கல்லறை என ஜின்னாவின் அழகு கல்லறையினை காட்டினார், வந்துவிட்டார் அவ்வளவுதான்
தாயினை போலவே தினாவிற்கும் திருமண வாழ்வு கசந்தது, ஆனால் மகன் நுஸ்லி வாடியாவின் அரவணைப்பில் வாழ்ந்து வந்தார்
அந்த தினாதான் நேற்று தன் 98ம் வயதில் இறந்திருக்கின்றார்
எவ்வளவு பெரும் குடும்பம் அது? தினாவின் பிறப்பும் வாழ்வும் எவ்வளவு கொடுத்து வைத்த வரம்?
இப்பக்கத்தில் தினா டாட்டாவின் வாரிசு, வாடியாவின் நேரடி வாரிசு
( வாடியா குழும்பம் இன்றும் ஜாம்பவான்கள், அம்பானிக்கு முன்பு அவர்கள்தான் வியாபார ஜாம்பவான், அம்பானியின் எழுச்சியும் அவர்களை பெரிதாக பாதித்துவிடவில்லை)
அப்பக்கம் பாகிஸ்தானின் தேச தந்தையின் மகள், கொஞ்சம் அப்பக்கம் சரிந்திருந்தால் பெனசீர் பூட்டோ எல்லாம் வந்திருக்க முடியாது
ஆனால் தினா இந்தியராக வாழ்ந்தார், மகா முக்கியமான விஷயம் தன் தந்தையினை பற்றி எங்கும் பெரிதாக சொல்லவில்லை, அவரை பற்றிய பெரும் அபிமானம் ஏதும் இருந்ததாக தெரியவில்லை
அமெரிக்காவில் இறுதிகாலத்தில் வசித்தாலும் பாகிஸ்தான் பற்றி ஒன்றும் சொல்லவே இல்லை
எவ்வளவு பணம் செல்வாக்கு இருந்தாலும் காலம் பல விசித்திர விளையாட்டினை உறவுகளில் நடத்தும்
அது ரூட்டி, ஜின்னா, தினா வாழ்வுகளில் அதிகமாகவே நடத்தியிருக்கின்றது