இன்று சவேரியாரின் நினைவு நாள்
விவசாயியும் மீணவனும்
இந்தியாவில் சில தொழிலாள இனங்களுக்கு கால காலமும் சிக்கல், பண்டைய காலமுதல் அப்படித்தான் இருந்திருக்கின்றது. சில தொழிலாள இனங்கள் அடக்கபட்டு, புறக்கணிக்கபட்டு இருந்தன, அதிலொரு இனம் ஆடுமாடு மேய்ப்பவர்கள். அவர்கள் மிக ஒடுக்கபட்டகாலத்தில் பகவான் கிருஷ்ணனே அவதரித்து அவர்களை காப்பாற்றி இருக்கின்றார்.
இன்று விவசாயமும் அந்த புறக்கணிக்கபட்ட படியலில் இணைந்தாயிற்று ஆனால் காப்பாற்ற இன்னும் அவதாரம் வரவில்லை. ஆனால் இந்தியதொழிலாள இனங்களில் குறிப்பாக தென் தமிழகத்தில் அன்றிலிருந்து இன்றுவரை ஒரு தொழிலாள இனத்தின் சிக்கல் சரிவர புரிந்துகொள்ளமுடியவில்லை என்றால் நிச்சயமாக மீணவர் இனம், அவர்களின் நிலை இன்றுவரை அப்படித்தான்
“மச்சம் பிடிப்பவர் வாழ்வில் மிச்சம் இல்லை” என்பது பழமொழி
கடல் தொழில் ஒரு தனி உலகம், அவசரத்திற்கு படகில் இருந்து இளைப்பாற இறங்ககூட முடியாத தொழில் அது, மகா விழிப்பு, உழைப்பு, நொடிப்பொழுதும் அயராத எச்சரிக்கை, உயிரை பணயம் வைக்கும் சவால் இவை எல்லாம் இல்லாமல் மீணவதொழில் இல்லை.
அக்காலத்தில் இன்று உள்ளதுபோல போக்குவரத்து இல்லை, பிடிக்கும் மீன்களை விற்பனை செய்ய அவர்களின் சவால் மிக பெரிது. அதனால் முத்துகுளித்தல், கடல்பொருள் சேகரித்தல் என கடல்சார் தொழில் செய்துவந்தனர்.
இடி,மழை,புயல்,கடல் சீற்றம் என இயற்கை எதிர்ப்புகளை தாங்கினர், ஆற்றுப்ப்பாசன பகுதியில் மட்டும் கவனம் செலுத்திம் வரி விதித்து, இன்றைய அரசினை போலவே அன்றும் புறந்தள்ளிய அரசுகளையும் மீறி வாழ்ந்தனர், 15ம் நூற்றாண்டில் இன்னொரு பெரும் சவால் அவர்களுக்கு வந்தது.
அது கடற்கொள்ளை, இன்றைய ஏடன் வளைகுடா கொள்ளையர்களை போல அவர்களின் அட்டகாசம் சொல்லி மாளாது, சமயங்களில் ஊருக்குள் புகுந்து கொள்ளை அடிப்பது வரை நீண்டது. தமிழக நாயக்க அரசுக்கு தரையுத்தம் தெரியும், கடற்கரைக்கு சென்றால் ஏதோ மீன் சுட்டு சாப்பிட தெரியும் கடல்யுத்தம் அறவே தெரியாது.
அதாவது மிக மிக பாமர மக்களாய், மிக மிக இக்கட்டான சூழலில் அவர்கள் இருந்த நேரம். அதாவது சிங்கள கடற்படையும் ராமேஸ்வர மீணவர்களையும் நினைத்துகொள்ளலாம்.
இந்த காலகட்டத்தில்தான் ஒரு கிறிஸ்தவ துறவி இந்தியா வருகிறார். கோவாவில் வந்து இறங்குகிறார். அது போர்த்துகீசிய கட்டுப்பாடு பகுதி, அவர்களின் தலமை அலுவலகம். அங்கிருந்து தென் தமிழ்நாட்டிற்கு வருகிறார். அங்கிருந்து கடல்பகுதிகளை சுற்றி பார்க்கிறார்.
ஒரு விஷயம் சொல்ல வேண்டும், அதாவது இயேசுவின் சீடர் தாமஸ் இந்தியா வந்தார் என்பது இன்னும் உறுதிபடுத்தபடா விஷயம், அவர் வந்திருக்க வாய்ப்பே இல்லை
முதன் முதலில் கிறிஸ்துவத்தை சுமந்து வந்தவர் புனித பிரான்ஸிஸ் செவியர்தான், வரலாறு அதனைத்தான் பதிந்திருக்கின்றது
செல்வவளம் உள்ள நாடு இந்தியா, அதனால்தான் ஐரோப்பியர் இந்திய கனவில் மிதக்கின்றனர், மிளகும்,சந்தணமும்,அரிசியும் ஓடும் என்ற நினைப்பில் வந்தவருக்கு மகா அதிர்ச்சி காத்திருந்தது.
தென் தமிழக மீணவர் நிலையும், அவர்கள் சந்திக்கும் சிக்கலும், உயிர்வாழ தினம் நடத்தும் போராட்டமும் அவரை கலங்க செய்கிறது. மதுரையோ திருவிதாங்கூரோ யாருக்கும் கடல்சண்டை பழக்கமில்லை. அம்மன்னர்களின் அனுமதியோடு போர்த்துகீசிய உதவி பெற்று, கடல்கொள்ளையர்களை விரட்ட வைக்கின்றார். போர்த்துகீசியரும் கடற்கொள்ளையரை விரட்டிவிட்டு கோவா சென்றனர், இங்கு ஆள எல்லாம் விரும்பவில்லை.
அதோடு விடவில்லை அந்த துறவி, மீணவர்களோடு தங்கி கிட்டதட்ட 3 ஆண்டுகள் பணியாற்றி, கிறிஸ்துவத்தையும் போதிக்கின்றார். அவருக்காகவே அம்மக்கள் கிறிஸ்தவராக மாறினர், அதாவது தங்களை வாழவைக்க வந்த மகானாகவே அவரை கண்டனர், அதுவரை மிக மிக தூரமாக ஒதுக்கிவைக்கபட்டிருந்த சமூகம் அது.
அன்றிலிருந்து தென்னக கடற்கரை மக்களின் பிரதான தெய்வநிலைக்கு அவர் உயர்த்தபட்டார், அவர் தான் புனித பிரான்ஸிஸ் ஆப் சவேரி. தமிழில் சவேரியார். அக்காலத்திலே கல்லூரி பேராசிரியர்.
தமிழகத்தில் அவரின் பணி அதோடு நிற்கவில்லை, தென்னக மக்களின் துயரம் தீர்க்க கல்வியே மாபெரும் ஆயுதம் என்பது அவரின் கொள்கை. தனது சபைக்கு அவர் எழுதிய கடிதங்களில் எல்லாம் தென்னக மக்களுக்கு கல்வி எவ்வளவு முக்கியம் என எழுதுகிறார், அதன்படியே தமிழகத்தில் பல புகழ்மிக்க கல்வி நிலையங்கள் அவர் சார்ந்த சபையால் நடத்தபடுகின்றது.
தமிழக மீணவர்களின் உண்மையான துயரை உணர்ந்துகொண்டவர் அவர், அதற்கான துயர்துடைப்பு முயற்சியில் ஈடுபட்டார், எங்கோ இருந்து வந்து தங்களுக்காக உழைத்த அவரை இன்றுவரை அச்சமூகம் நன்றியோடு நினைக்கின்றது.
500 ஆண்டுகாலம் கடந்த பின்னும் என்ன நடக்கின்றது? இன்னும் மீணவ சமூகம் அதே புறக்கணிப்பில்தான் இருக்கின்றது, அது கல்பாக்கம்,மெரீனா,ராமேஸ்வரம்,மண்டபம், வேதாரண்யம்,இடிந்தகரை, கூடுதாழை, குளச்சல், என அந்த கடற்கரையில் மிக நிம்மதியாக சந்தோஷமாக கடல்தொழில் செய்யும் கிராமங்கள் உண்டா? பாதுகாப்பாக இருப்பதாக நினைக்கும் மீணவ குடும்பம் உண்டா?
அல்லது அவர்களின் கோரிக்கைக்கோ அல்லது நியமான உணர்விற்கோ ஒரு ஆதராவது உண்டா? இடிந்தகரை அல்ல தினம் தினம் இடிந்துகொண்டிருக்கும் ராமேஸ்வர மீணவர்களுக்கு என்ன ஆறுதல் கிடைத்துவிட்டது?
காரணம் அவர்களின் துன்பத்தை, துயரத்தை ஒரு ஐரோப்பிய துறவி உணர்ந்த அளவிற்கு இன்னும் யாரும் உணரவில்லை.
அவரை போலவே தேனி, மதுரை, ராமநாதபுர விவசாயிகளின் கஷ்டத்தை உணர்ந்து கண்ணீர் விட்டவர் பெருமகன் பென்னிகுயிக். பிரிட்டிஷ அரசாங்கமே பின்வாங்கிய நிலையில், தனது சொத்துக்களை எல்லாம் விற்று இங்கு வந்து பெரியார் அணையை கட்டினார், ஏராளமான விவசாயிகளை வாழவைத்தார்.
இன்று விவசாயியும், மீணவனும் இந்திய அரசிற்கு மகிழ்ச்சியானவர் அல்ல, இரு இனமும் தனது சொந்த உழைப்பிற்கு விலைவைக்கமுடியாத பரிதாப ஜீவன்கள், யாரோ எங்கிருந்தோ வந்து விலை வைப்பார்கள். கட்டுபடுவதை தவிர இவர்கள் என்ன செய்ய முடியும்??
பல விவசாயிகளின் தற்கொலை அல்லது ராமேஸ்வர மீணவர்களின் துயரம், எங்கள் வாழ்விடத்தில் எங்களை அச்சமில்லாமல் வாழவிடுங்கள் என கைஎடுத்து கும்பிட்டு கதறும் இடிந்தகரை மக்கள். இவர்களை நினைக்கும் பொழுதெல்லாம் பென்னிகுயிக்கும் சவேரியாரும் கண்ணுக்குள் வந்து வந்து செல்கின்றார்கள்.
இன்னும் இவர்களை போன்ற பெரும் மனிதநேயமிக்க மனிததெய்வங்கள் பிறந்து வந்து காப்பாற்றும் வரை விவசாயி மற்றும் மீணவர்களின் துயரம் நீங்கபோவதே இல்லை.
பெரியார் அணைக்கு கேரளமும், தமிழ்நாடும் சண்டையிட்டு கொண்டிருக்க் தமிழகத்தின் பெரும் வியாதியான சினிமாவில், விரைவில் வெளிவரும் சினிமாவின் கதைக்கு இருவர் சண்டையிடுகின்றார்களாம், ஆனால் கதை பென்னிகுயிக் அணைகட்டிய கதையோடு சம்பந்தபட்டதாம், கோடிகளில் சமரசம் நடக்கும்.
அந்தோ பரிதாபம். ஐரோப்பிய பென்னிகுயிக் தனது சொந்த சொத்துக்களை விற்று தமிழக அணைகட்டியவர்
சவேரியாருக்கு இறுதிவரை இருந்த சொத்து 3 செட் ஆடையும் கையில் ஒரு சிலுவையும் மட்டுமே, அவரும் பேராசிரியர்தான், ஆனால் கடினபட்டு தமிழ்படித்து அரைகுறை தமிழில் பேசினார். ஆனால்இன்றுள்ள கிறிஸ்தவ போதகர்களின் உடை அலங்காரமும், உல்லாச வாழ்வும்,சொத்துமதிப்பும் விரைவில் பில்கேட்ஸ்கே சவால் விட கூடியவை.
இன்று சவேரியாரின் நினைவு நாள், தமிழக மீணவர்களுக்காக அவர் செய்த சேவையும்,உழைப்பும் பின்னர் அவர் மூலமாக வந்த கல்வி நிலையங்களும் அதன் சேவையும் மதம் கடந்து நிச்சயம் பாராட்டதக்கது, தென்னிந்திய வரலாற்றில் அவருக்கு தனி இடம் உண்டு, அது அவரது உடலை போலவே அழியாதது
அவர் எந்த மக்களுக்கு போதித்தாரோ அந்த தென்னக கடற்கரையோர மக்கள், மீணவ மக்கள் கதிகலங்கி நிற்கின்றனர்
காணாமல் போன 250 மீணவர்களை காணவில்லையாம், அந்த கடற்கரையே கலங்கி நிற்கின்றது
அம்மக்களை முன்பு எத்தனையோ முறை காத்த அந்த புனிதர் இம்முறையும் தன் வல்லமையான ஜெபத்தால் கொண்டுவரட்டும்
தன்னலமற்றவர்களின் ஜெபத்தை எந்த கடவுளும் மறுப்பதில்லை