வாமணன் : நெப்போலியன் வரலாறு : 13
நெப்போலியன் ரஷ்யாவில் இருந்து பின்வாங்க பல காரணங்கள் இருந்தன, கடும் குளிர் , ரஷ்யர்களின் பின்வாங்கி தாக்கும் தந்திரம் என ஏராளம், முக்கியமாக உணவு தட்டுப்பாடு
நெப்போலியன் ஐரோப்பா முழுக்க தனக்கு எதிரியார் என தேடி திரிந்தாலும் தன் காலடியில் இருந்த எதிரிகளை கண்டுபிடிக்காமல் விட்டுவிட்டான்,
அவர்கள் பிரான்ஸ் நிலபிரபுக்கள் அந்நாளைய தொழிலதிபர்கள்
நெப்போலினின் சீர்திருத்த நடவடிக்கையில் அவர்கள் பெரிதாக பாதிக்கபட்டிருந்தனர் அவர்கள்தான் நெப்போலியன் இல்லாத நேரத்தில் புதிதாக ஒருவனை பதவியில் வைத்து புரட்சி செய்தனர்
இப்படி பல சிக்கல்களால் நெப்போலியன் ரஷ்யாவினை விட்டு பிரான்சுக்கு திரும்பவேண்டியதாயிற்று, அவன் திரும்பியபின் அவன் படைகளும் திரும்பின
7 லட்சம்பேரோடு சென்ற நெப்போலியன் 30 ஆயிரம்பேரோடுதான் திரும்பினான், ரஷ்யபோர் அவ்வளவு அழிவினை கொடுத்தது
ஆனால் ரஷ்யாவிலும் பெரும் அழிவு , குருச்சேவ் சொல்கேட்டு பின்வாங்கும் உத்திக்காக வீட்டை விட்டு சென்றவர்கள் வரவே இல்லை, அரசும் அவர்களை பற்றி கவலைபடவில்லை, நமது அரசு போல் இருந்திருக்கின்றது.
ரஷ்யாவிற்கும் ஏகபட்ட அழிவு
நாடு திரும்பிய நெப்போலியனை கண்டு பிரான்ஸ் அடங்கியது, டூப்ளிகேட் அரசனை தள்ளிவிட்டு தானே அரசன் என அமர்ந்துகொண்டான்
அவனுக்கொரு மகா அவசியம் வந்தது, அது நெருக்கடியும் கூட அவனது ஆதிக்கத்தில் இருந்த பல நாடுகள் அவன் தோல்விமுகம் காட்டியதும் எகிறின
ஒருவன் வெல்வது வரை அடங்கி இருக்கும் எதிரிகள், அவன் தோற்க ஆரம்பித்தபின் அடிக்க முயற்சிப்பர்கள். யுத்தத்தில் வெல்பவன் வென்றுகொண்டே இருக்கவேண்டும் , எதிரிகளை மிச்சம் வைத்துவிட்டு எங்கோ தோற்றால் அது எதிரிகளுக்கு பலம் கொடுத்துவிடும்
இதனை ஆழயோசித்தான் நெப்போலியன், நாம் தோற்றுவிட்டோம் படையினை இழந்துவிட்டோம் அப்படியே இருந்துவிட்டால் பிரிட்டன் வந்துவிடும், ஏதாவது செய்து தன் பலத்தை காட்டிவிட்டால்தான் சரி
மறுபடியும் படை திரட்டினான், பிரிந்த நாடுகளை மிரட்டி தன்னோடு சேர்த்துகொண்டான், ஸ்பெயின், பிரிட்டன், பிரஷ்யா, ஆஸ்திரியா நாட்டு கூட்டுபடைகளை 1813ல் அசால்ட்டாக வென்றான்
ரஷ்ய தோல்விக்கு பின்னும் எழுந்து நின்றான் அவன், அத்தோல்வி அவனை பாதிக்கவில்லை
ரஷ்ய படுதோல்விக்கு பின் அவனை எளிதாக அடித்துவிடலாம் என வந்தவர்களுக்கு பெரும் ஏமாற்றம் ஏற்பட்டது, தான் புலி என்பதை நிரூபித்து பெரு வெற்றி பெற்றான் நெப்போலியன்
எதிரிகள் வியூகம் வகுத்தனர், அவர்களோடு பிரான்ஸின் உள்நாட்டு எதிரிகளும் கைகோர்த்தனர்
நெப்போலியனின் பலம் அவனின் படையும் அவனின் வியூகமும், அதில் வெற்றிகொள்ளமுடியாவிட்டால் அவன் பலவீனம் என்ன என யோசித்தனர்
நெப்போலியனின் அப்போதைய பலவீனமாக அவனின் ஆஸ்திரேய மனைவி இருந்தாள், அவளை அப்படி நம்பினான் அவன்
அவளோ நெப்போலியனின் படை முதல் ராணுவ ரகசியம் வரை எல்லாம் ஒற்றறிந்து ஆஸ்திரியாவிற்கு அனுப்பிவிட்டாள்
இது நெப்போலியன் எதிர்பாராதது, அவனுக்கு அது தெரியவே தெரியாது
கூடவே பிரான்ஸ் பிரபுக்களும் புதிதாக இணைந்த ராணுவத்தினருக்கும் அவன் தளபதிகளுக்கும் கையூட்டு கொடுத்து அவன் ராணுவத்தில் ஊடுருவியிருந்தனர்
ஒரு நல்ல அரசன் பணக்காரர்களை மீறி அரசு நடத்தமுடியாது என்பதற்கு நெப்போலியனே எடுத்துகாட்டு
இப்படியாக அவனுக்கே தெரியாமல் பெரும் சதிவலை பின்னபட்ட நிலையில் அவன் போருக்கு அழைக்கபட்டான்
அன்றைய பிரஷ்யாவின் லெப்சிக் என்ற இடத்தில் நெப்போலியன் படைகளும் எதிர் கூட்டணி படைகளும் மோதின, அதற்கு அலெக்ஸாண்டர் என்பவன் தளபதி
வழக்கம் போல யுத்தத்தில் தூள்கிளப்ப தொடங்கிய நெப்போலியனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது, ஆம் அவன்படை அவன் சொல்லியபடி இயங்கவில்லை
எதிரிகளோ எது நெப்போலியன் படையின் பலகீனமோ அதை துல்லியமாக தாக்கின
நெப்போலியன் உத்தரவிட்டாலும் அவன் படைகள் ஏறுக்குமாறாக செயல்பட்டன, நிலபிரபுக்களின் உத்தி அது
ஆயுதம் உற்ற நேரத்தில் கைவிட்டால் எப்படி இருக்கும்? அப்படி நின்றான் நெப்போலியன்
ஒரு கட்டத்தில் அவன் போர் செய்வதை மறந்து அதிர்ச்சியில் நின்றுவிட்டான், அப்பொழுதுதான் சுற்றி வளைத்தார்கள்
யாராலும் வெல்லமுடியா அவனை குளிர் வென்றது அதன் பின் சூது வஞ்சகமாக வென்றது
அவன் காத்து நின்ற பிரான்சில் அந்நிய படைகள் நுழைந்தன, நெப்போலியன் குற்றவாளி கூண்டில் நிறுத்தபட்டான்
ஐரோப்பாவினை அலறவைத்த மாவீரனை கண்டு உண்மையில் அவர்கள் அதிசயத்தார்கள், அவனை கொல்ல யாருக்கும் மனம் வரவில்லை மாறாக பதவி நீக்கம் செய்து பிரான்சில் இருக்க கூடாது என சொல்லி ஒரு தீவுக்கு அனுப்பினார்கள்
அது பிரான்ஸ்பக்கம் இருந்த எல்பா தீவு
தோற்றபின்பே தனக்கு எப்படி எல்லாம் வலை விரிக்கபட்டிருந்தது, யாரெல்லாம் தன்னை முதுகில் குத்தினார்கள் என உணர்ந்தான் நெப்போலியன் ஆனாலும் அப்பொழுதும் ஆஸ்திரிய மனைவி மீது சந்தேகம் வரவில்லை
பிரான்ஸை உயரிய இடத்திற்கு கொண்டு செல்ல போராடிய அந்த மாவீரன் எல்பா தீவுக்கு சென்றான்
அங்கு மக்கள் இருந்தனர், சிறிய நகரம்போல் அது இயங்கியது
ஐரோப்பாவினை ஆட்டிபடைத்த சூறாவளி அங்கு ஓய்வில் இருந்தது , ஆனால் உள்ளம் எரிந்துகொண்டிருந்தது
வாமணன் வருவான்…