இந்த செய்தி ஈழ ஊடகங்களில் வந்தது

Image may contain: 3 people, people smiling, people standing, people sitting and text

இந்த செய்தி ஈழ ஊடகங்களில் வந்தது, இன்று ஆண்டன் பாலசிங்கம் நினைவு நாள் என்பதால் நினைவுக்கு வருகின்றது

புலிகளை ஒழித்து கட்டுவது அல்லது ஆயுதங்களை களைவது என்ற முடிவிற்கு வந்த அமெரிக்கா இலங்கைக்கான அமெரிக்க தூதர் மூலம் பகிரங்கமாக எச்சரித்தது, லஷ்மன் கதிர்காமர் கொலையினை தொடர்ந்த எச்சரிப்பு அது “இன்னொரு முறை யுத்தம் நடந்தால் புலிகள் சுவடே இல்லாமல் அழிவார்கள்” எனும் எச்சரிக்கை அது

இதன் பின் அமெரிக்காவின் சமாதான முகமூடியான நார்வே குழு ஒரு ஒப்பந்தத்தை தயாரித்து அவசரமாக பாலசிங்கத்தை அனுப்பியது

அவரும சென்றிருந்தார், சென்று ஒப்பந்தம் பற்றி முன்னோட்டம் சொன்னார், கேட்டுகொண்ட பிரபாகரன் “அப்புறமா வாருங்கோ பேசுவோம்” என சொல்லிவிட்டு சென்றுவிட்டார்

பின் பிரபாகரனை காண பாலசிங்கம் சென்றபொழுது அவர் ஆட்டோ கிராப் படம் பார்த்துகொண்டிருந்தாராம், இவரை கண்டதும் “அண்ணன் வாருங்கோ, அழவைக்கும் படம் இது, பாருங்கோ” என சொல்லி ஓடவிட்டாராம்

படம் முடிந்து, மிக அவசரமாக பாலசிங்கம் பேச தொடங்க “அண்ணன் இன்னொருமுறை பார்ப்போம் என்ன” என சொல்லிவிட்டு மறுபடியும் ஓடவிட்டிருக்கின்றார்

ஒரு வழியாக படம் முடிந்ததும் , ஒப்பந்தமும் அது பற்றிய விவரமும் பாலசிங்கம் சொல்ல, அண்ணன் அந்த படத்தை பற்றி என்ன நினைக்கிறியள்?, எப்படி படம்? அந்த டைரக்டரை பார்க்கவோணும் போலிருக்கு, இன்னொரு முறை படம் பார்ர்போம் வரியளே..” என சொல்ல பாலசிங்கத்திற்கு புரிந்தது

இவர் ஏதும் சிந்திக்க அல்ல, காதுகொடுத்து கேட்க கூட மனதில்லா நிலையில் இருக்கின்றார் என உணர்ந்த பாலசிங்கம் அதன் பின் கிளம்பிவிட்டார்

அதன் பின்னும் பிரபாகரன் யோசிக்கவே இல்லை, அவரின் சிந்தனை சேரனை பார்ப்பதிலே இருந்திருக்கின்றது, கூட இருந்த் யாரோ “அண்ணன் நாம் சேரனை வைத்து இயக்கத்தை பற்றி படம் எடுத்தால் என்ன?” என கொளுத்திவிட்டார்

அதன் பின்பே ஒரு படம் எடுக்க புலிகள் நினைத்த விஷயமும், எப்படியோ சேரன் தப்பிவிட அந்த சாக்கில் அங்கிள் சைமன் ஈழம் எல்லாம் சென்றுவிட்டு வந்த காட்சிகளும் நடந்தன‌

சைமன் மட்டுமல்ல, ஏராளமானோர் சென்றிருக்கின்றார்கள். ராஜ்கிரன் கூட இதுபற்றி பேசியிருக்கின்றார்

இப்படி ஆட்டோகிராப் பார்த்து சினிமா பக்கம் புலிகள் சுற்றிய காலத்தில்தான் அமெரிக்கா புலிகளுக்கு தப்ப முடியா ஆணி அடிக்க தொடங்கியிருந்தது, ராஜபகசே கவசம் எல்லாம் பூண்டு போருக்கு தயாரானார்,

பாலசிங்கம் இல்லா புலிகள் பிழைக்கமாட்டார்கள் என உணர்ந்த கருணாவும் ஓடிவிட்டார்.

இறுதியாக பாலசிங்கத்திடம் கருத்து கேட்டபொழுது இன்னொரு முறை ஆட்டோகிராப் படம் பார்க்க தான் தயாரில்லை என மறுத்துவிட்டார்

பின் யுத்தம் தொடங்கியதும், அது நடந்த விதமும் புலிகள் மிச்சமின்றி அழிக்கபட்டதும் எல்லோருக்கும் தெரிந்தது

ஆக மிக மிக முக்கிய முடிவினை, பல்லாயிரம் மக்கள் உயிர் தொடர்பான முடிவினை எடுக்க ஓடோடி வந்த பாலசிங்கத்திற்கு ஆட்டோகிராப் படம் பலமுறை காட்டபட்டிருகின்றது

அவரும் ஓடியிருக்கின்றார், யுத்தம் வெடித்திருக்கின்றது பாலசிங்கம் அஞ்சியது போலவே ஆயிரகணன்னான சனம் அழிந்திருக்கின்றது

ஆனால் இங்கு சொல்லபடும் பிரச்சாரம் என்ன?

“ஈழத்தை அழித்தது கலைஞர், சோனியா. திமுக காங்கிரஸ்”,

ஏன் அந்த ஆட்டோகிராப் படத்தையும் சேர்த்து சொன்னால் என்ன?