ஜெயமோகன் ஒருவரே இலக்கியவாதி????

கம்பன் முதல் இந்த நூற்றாண்டில் செத்துபோன பாரதி, பாரதி தாசன், அகிலன் , மு.வரதராசனார், கல்கி, ஜெயகாந்தன் , அண்ணா, சுஜாதா, கண்ணதாசன் உட்பட பலரை எழுப்பி வைத்து ஒரு விஷயம் சொல்லவேண்டி இருக்கின்றது

இந்த உலகில் கவிஞன் என்றால் மனுஷ்யபுத்திரன், எழுத்தாளன் என்றால் ஜெயமோகனும் அவர் குரு சுந்தர ராமசாமியும்.

நீங்கள் எல்லாம் அவர்கள் முன் அற்ப பதர்கள். புரிகின்றதா? ஒழுங்காக ஒருமுறை வந்து நாங்கள் எல்லாம் கவிஞனோ எழுத்தாளனோ இல்லை ஜெயமோகன் ஒருவரே இலக்கியவாதி என சொல்லிவிட்டு செத்துபோங்கள்….


விஷ்ணுபுரம் விருதினை விட அந்த ஞானபீடம் என்ன பெரிய விருதா?

வேண்டுமென்றால் அந்த விஷ்ணுபுர விருதினை வைரமுத்துவிற்கு அளிக்காமல் அவரை பழிவாங்கலாம் சுயமோகன் சார்

இந்தமாதிரி ஆட்கள் இருந்தால் கன்னியாகுமரி பக்கம் ஒக்கி புயல் ஏன் வராது?

இந்த சீமான் கோஷ்டிகள் ஒரு பக்கம் வெறிநாய் தொந்தரவு என்றால் இந்த சுயமோகன் & விஷ்ணுபுர‌ இலக்கிய கொசுகடி இன்னொருபுறம், பாவம் தமிழன்