அரேபிய விருமாண்டி மாவீரன் சதாம் உசேன் : 03
தானாக ஆப்கானிஸ்தானில் போரிட்டுகொண்டிருந்த பின்லேடனுக்கு, அவர்களின் தலையீடும்,பின்னர் செய்த ஆர்ப்பாட்டங்களும் கடும் எரிச்சலை ஏற்படுத்தியது, பிரபாகரனுக்கு இந்தியா மீது வந்த அதே கோபம், கொஞ்ச காலம் அமெரிக்காவின் ஆசிய நிலையங்ளை தாக்கினார், பெரும் சேதங்கள் எனினும் அதிரவைக்கும் தாக்குதல் அல்ல.
ஒரு அடி, மறக்கவே முடியாத பலத்த அடியாக இருக்கவேண்டும்,தழும்பாக பார்த்து பார்த்து அழ வைக்க வேண்டும், அடிக்கடி ராமேஸ்வர மீணவர்களை இலங்கையர் அடிப்பதுபோல அடிக்க முடியாது. ஒரு முறை தான் முடியும், செய்வதை திருந்த செய்யவேண்டும்.
செய்தார், முதன் முறையாக சொந்த மக்களை சொந்த மண்ணில் இழந்தது அமெரிக்கா, உண்மையில் அலறித்தான் போனார்கள். யாரும் எதிர்பார்க்காத அடி அது, குப்புற விழுந்தாலும் முகத்தை துடைத்து கொண்டு திட்டமிட்டார்கள் இதனை வைத்து என்னசெய்யலாம்?
போர் செய்யலாம், இனி யாரும் வாலாட்டாதவாறு ஆழ அடிக்கலாம், இதை எல்லாம் வைத்து பணம் செய்யலாம், 2 என்ன 20 கோபுரங்கள் கட்டலாம், வாய்ப்பினை விடவே கூடாது.
இரட்டை கோபுர அடியில் 3000 பேர் இறந்து விட்டார்களா? பிரச்சினை இல்லை விசாக்களை வழங்கினால் அறிவாளிகள் முதல் அல்லக்கைகள் வரை குவியபோகின்றார்கள்
அதுவரை மேற்காசியாவில் காலூன்ற சரியான காரணம் கிட்டவில்லை, இதோ கிடைத்துவிட்டது இனி பலநாள் கனவான ஆசியாவில் ராணுவதளம் அமைக்கும் திட்டத்தை முடித்துவிடலாம், திரிகோணமலை தவிர கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்குள் புகுந்துவிடலாம், பிரபாகரனுக்கு பின் திரிகோண மலையை பார்த்துகொள்ளலாம்.
அமெரிக்காவை எதிர்ப்பவர்கள் இனி தீவிரவாதிகள், அவர்களின் அனுமதி இல்லாமல் துப்பாக்கி வைத்திருந்தால் அதிதீவிரவாதிகள், கொள்கைகள், நியாயங்கள்,அனுதாபப்க்கள் எல்லாம் இனி இல்லை, வல்லரசு வகுத்ததே நீதி.
உலகமே அதிர்ந்து குழம்பி, சாப்பிடுவதற்கே வாய்திறக்க அஞ்சிய நேரம், சதாம் மட்டும் சொன்னார் “இதை செய்தவர்களை நான் வரவேற்கிறேன்”, இதுதான் சதாம்.
கண்கள் சிவந்த ஜார்ஜ் புஷ் மனதில் வன்மத்தோடு சொன்னார், அமெரிக்க நீதி என்றால் என்ன என்பதை விரைவில் உலகம் தெரிந்துகொள்ளும், அந்த வாக்கியத்தில் சதாமின் தலைவிதி ஒளிந்திருந்தது.
பெரும் பொருட்செலவோடு களத்தில் இறங்கினார்கள், குற்றவாளி பின்லேடன் என்றார்கள்,ஆப்கன் மீது படையெடுத்தார்கள். அடுத்த தலைமுறை தொழில்நுட்ப ஆயுதங்களை ஆப்கனின் மண்வீடுகளிலும்,இந்துகுஷ் மலைகளிலும் சோதித்தார்கள், பின்லேடனை பிடிப்பதாக சொன்னாலும் அவர்களின் திட்டம் வேறு.
கிரிக்கெட்டில் ஒரு தந்திரம் உண்டு, ரன் எடுக்க திணறும் பேட்ஸ்மேனை ஆட்டம் தெரிந்த பவுலர் அவ்வளவு சீக்கிரம் விக்கெட்டை எடுக்கமாட்டார், அவனை வைத்தே ஒவரை கடத்துவார், ரன் சேராது ஆட்ட நேரம் முடிந்துவிடும். அதேதான் அங்கும் நடந்தது.
பின்லேடனை அன்று பிடிப்பது பெரும் நோக்கமில்லை, அவரது பின்புலங்களை உடைக்கும் நோக்கில் இறங்கினார்கள், ஆப்கானில் தாலிபான்களை தவிர என்ன இருக்கிறது, பணம்பண்ண வழி இல்லை.
பின்லேடனுக்கும்,சதாமுக்கும் தொடர்பு என்றார்கள், ஆதாரம் சிக்கவில்லை. இறுதியாக அஸ்திரத்தினை எடுத்தார்கள். சதாம் பேரழிவு ஆயுதங்கள் வைத்திருக்கிறார், ரசாயாண, அணு ஆய்தங்களும் உண்டு.
வரலாற்று முரண், தேடபட்டது பின்லேடன், அவர் இருந்தது ஆப்கானில், ஆனால் தீவிரவாதத்திற்கு எதிரான போரில் அடிபடபோவது சதாம் உசேன். ஒரு நாட்டின் அதிபர். மக்களின் அபிமான தலைவர். ஒரு வசந்த காலத்தில் அமெரிக்காவால் கொம்பு சீவபட்ட காளை, இன்று அடிமாடு.
சதாம் மறுத்தார், தன்னிடம் பேரழிவு ஆயுதங்கள் இல்லை என்றார், நீ வைத்திருக்காவிட்டாலும் உன்னுடைய தாத்தா வைத்திருக்கலாம் அல்லவா? என்று சொல்லி புகுந்தார்கள், ஈராக் வீழ்ந்தது, சதாம் அகதி ஆக்கபட்டார்.
ஈராக் எல்லாம் தேடினார்கள் பேரழிவு ஆயுதம் அல்ல, கச்சா எண்ணெயை. கிடைக்க கிடைக்க சந்தோஷ பட்டார்கள். ஆயுதம் என்று அரை பிளேடை கூட எடுக்கவில்லை. ஈராக் மக்களின் அவல வாழ்வு ஆரம்பமானது.
மக்களின் எதிர்ப்பு தீவிரவாதமாக மாறியது, தினசரி குண்டுவெடிப்புகள் வானிலை அறிக்கைபோல தினமும் வாசிக்கபட்டது. இன்று குண்டுவெடித்தது ஆனால் நாங்கள் சாகவில்லை என குழந்தைகள் அப்பாவியாக சொல்லுமளவு நிலமை மோசம்.
உணவு இல்லை,பள்ளிகள் இல்லை என பல கொடுமைகளுக்கு மத்தியில் ஒரே ஒரு தொழில் தடை இல்லாமல் நடந்தது, அது எண்ணெய் எடுப்பது.
இறுதியாக சதாமினை தாடியோடு பிடித்தார்கள், 250 பேரை கொன்றார் என அவரது நாட்டின் கோர்ட் அவருக்கு மரணதண்டனை விதித்தது, (பல லட்சம் பேரை கொன்ற ராஜபக்சே நடத்தியது உள்நாட்டுபோராம்)
“நான் ஈராக்கிய அதிபர் , என்றாவது ஒரு நாள் என்நாடு உணர்ச்சிபெறும்” என முழங்கிய சதாம் தூக்கிலடபட்டார். அவரது தூக்கு காட்சியும் ஒளிபரப்பபட்டது, மரண தண்டனையை ஒழித்துவிட்டதாக கூறும் அமெரிக்காவிலும் பலமுறை ஓளிபரப்பபட்டது. பழிவாங்கி விட்டார்களாம்.
அடிபட்டது அமெரிக்கா, அடித்தது பின்லேடன், அவர் இருந்தது ஆப்கன் மலைக்குகை, ஆனால் தண்டிக்கபட்டது சதாம், காரணம் அவரிடம் நியாயம் இருந்ததோ இல்லையோ எண்ணெய் நிறைய இருந்தது.
சதாம் மறைந்தாலும், மக்களின் கோபம் அடங்கவில்லை. முடிவில் பிரித்தாளும் சூழ்ச்சியில் ஷியா முஸ்லீம்களின் அரசு அமைக்கபட்டு, அமெரிக்க ராணுவம் வெளியேறியது. காரணம் எண்ணெய் எடுக்கும் பணியில் தடையில்லை, விலையில்லை, தமிழக பாணியில் சொல்வதென்றால்
“விலை இல்லாத எண்ணெய்”.
இதோடு விட முடியாதல்லாவா? கடைசி சொட்டு பெட்ரோல் கிடைக்கும் வரை அள்ளவேண்ட்டும் அல்லவா?, கப்பல்களில் கொண்டு செல்ல சங்கடபட்டு, குழாய் பதித்து கொண்டு செல்ல முடிவெடுத்தார்கள். இடையில் இருக்கும் நாடு சிரியா.
அந்த அதிபர் கடுமையானவர், அவ்வளவுதான் திடீர் குழுக்கள் உருவாயின, உள்நாட்டு கலவரம் உச்சம் அடைந்தது, ஆச்சர்யமாக அல்கய்தா தீவிரவாதிகளுக்கும் அமெரிக்க கிடைத்தது. நிலமை முற்றி அமெரிக்க படை உள்ளே புக முயற்சித்தபொழுது பகிரங்கமாக சவால் விட்டது ரஷ்யா. கொஞ்சம் சீரடைந்திருக்கும் ரஷ்யா. சிரியா அதிபருக்கு ஆயுள் கெட்டி.
ஆளில்லாத காட்டில் ஆட்டம் போடும் சண்டியர் பின்வாங்கினார், ஆனால் உக்ரைனுக்குள் ஆட்டம் ஆரம்பித்தார். ஈராக் எண்ணெய் பூமி என்றால், உக்ரைன், பஞ்சாப் போல கோதுமை பூமி. அதையும் உடைத்து பிடுங்கியது ரஷ்யா
இரும்பு மனிதனாய் ஈராக்கை கட்டியாண்டார் சதாம், ஒரு குண்டுவெடிப்போ பெரும் குழப்பங்களோ இல்லை. வெளிநாட்டு தூதர்களே தயங்கி வந்து சென்ற இரும்புகோட்டை ஈராக், இன்று கோயம்பேடு பஸ்நிலையம் போல ஆகிவிட்டது,யாரும் வரலாம்.
எல்லா நாட்டு ராணுவமும் பிக்னிக் செல்வது போல சென்று அடிக்கின்றார்கள், கேட்க ஆளில்லை, பிரதமரே அடுத்த நாட்டு ராணுவத்தை வெற்றிலை பாக்கு வைத்து வணங்கி அழைக்கின்றார். நல்ல தலைவன் இல்லாத நாடு என்ன ஆகும் என்பதற்கு ஈராக்கை தவிர சொல்ல நாடில்லை.
சதாமை அழிக்க உதவிய தேசங்கள் இன்று அஞ்சி நடுங்குகிறது, சவூதி அரசர் எகிப்தின் உதவியை நாடுகிறார் (அமெரிக்காவிடம் அவர் பட்டது அவருக்கே தெரியும்). ஈராக்கின் குழப்பத்தில் பெட்ரோல் விலை உயர்த்தவேண்டிய கட்டாயத்தில் இந்திய பிரதமரும். கையில் சரவெடியோடு முன்னாள் இந்திய அரசு சகாக்களும் தயாராக இருக்கின்றனர்.
உலகம்,குறிப்பாக அரபுலகம் கடும் பதட்டத்திலே இருக்கிறது, நாம் மட்டும் ஷெரோபாவை மாய்ந்து திட்டுகிறோம், அஜித் அனிஷ்கா பற்றி பெரும் கவலை கொள்கின்றோம். நாம் அப்படித்தான்.
வட எல்லையில் சவூதி காவல் காக்கும் பொழுது, தென் எல்லையில் இரு மனித குண்டிகள் வெடிப்பது சாதாரண அறிகுறி அல்ல.குண்டு வெடிப்பது ஈராக்கோடு நின்றுவிடும் என நினைத்தால் அது பெரும் கனவு மட்டும்.
காரணம் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் உலகின் 4 மற்றும் 5வது பெரும் எண்ணெய் உற்பத்தி நிலையம் உள்ளது, 2 வருடம் கைகளில் வைத்திருந்தால் 20 வருடம் சண்டையிடும் பணம் அவர்களிடம் சேர்ந்துவிடும். எண்ணெய் மார்க்கெட் அப்படி.
புரியவில்லையா? நம்ம ஊர் சேட் கதைதான், திருட்டு தங்கமோ இல்லை வீட்டுக்காரன் தங்கமோ , தங்கம் கிடைத்தால் சரி.
அதே தான் எண்ணெய் கம்பெனிகளும், சவூதி மன்னர் கொடுத்தாலும் சரி, சோமாலியா கொள்ளியர்கள் கொடுத்தாலும் சரி சந்தோசம், பின்னது மலிவு விலை.
“எங்கள் நாட்டில் விளையும் எண்ணைக்கு நாங்கள் விலை சொல்ல கூடாதா?” என்ற ஒரு மானமுள்ள மனிதனை வீழ்த்த நடந்த நாடகம், இன்று பெரும் சிக்கல்களை ஏற்படுத்திவிட்டது, தண்ணீருக்கு நடக்கும் கொலைகளே தீராத பொழுது, எண்ணெய்க்கு நடக்கும் போராட்டம் எரியத்தான் செய்யும்.
ஈராக்கில் வெளிப்படையாக சண்டை நடக்கிறது, மற்ற அரபுலகில் அரசாங்க உளவாளிகளும், தீவிரவாதிகளின் ஸ்லீப்பர் செல்களும் கண்ணாமூச்சி ஆடுகின்றனர், உறங்கும் எரிமலை அவ்வளவுதான், உறங்கியே விட்டால் யாருக்கும் பிரச்சினை இல்லை.
இயற்கையாலும், அரசாலும் புறக்கணிக்கபட்ட நமது பகுதிக்கு இன்று வாழ்வளிப்பவை அரபு நாடுகள். எத்தனையோ குடும்பங்களை வாழவைத்து கொண்டிருக்கும் பகுதிகள் அவை, அப்பகுதியில் அமைதியும் வளமும் நிலவ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவதை தவிர வேறு என்ன வழி இருக்கின்றது.
இன்று அந்த மாவீரன் இறந்த நாள், என் நெல் என் உரிமை என சொன்ன கட்டபொம்மனை போல, என் நாட்டு எண்ணை எங்கள் உரிமை என சொல்லி தூக்குமேடை ஏறிய அந்த மாவீரனின் நினைவு நாள்
அவன் அரேபிய கட்டபொம்மன், ஈரானை சாய்க்க அமெரிக்காவால் ஏமாற்றபட்ட விருமாண்டி
அவன் இல்லாத ஈராக் சிதைந்து கிடக்கின்றது, ஈராக்கின் ஒரு பகுதி ஈரானின் கட்டுபாட்டில் வந்தாயிற்று, வளமான யூப்ரட்டீஸ் நதி துருக்கி கட்டிய அணையால் வற்றும் போலிருருக்கின்றது
இதையெல்லாம் கேட்க ஆளில்லை , ஆனால் எண்ணெய் மட்டும் எடுத்துகொண்டே இருக்கின்றார்கள்
வடகொரியா போல் ஒரு அணுகுண்டோ, அன்று புட்டின் போல ஒரு அசாத்திய தலைவன் இருந்திருந்தாலோ சதாமின் தலைமுடியினை கூட அமெரிக்காவால் தொட்டிருக்க முடியாது, விதி அது அல்ல.
மாவீரன் சதாம் இறந்திருக்கலாம், ஆனால் அவன் ஆயிரம் சதாம் உசேனாக திரும்பி வருவார்கள், அத்தேசம் நிச்சயம் ஒரு நாள் புத்துயிர் பெரும்
நம் தலைமுறையில் கண்ட அந்த மாவீரனுக்கு வீரவணக்கம்