வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் இன்று

Image may contain: 1 person, indoor

எங்கிருந்தோ வந்த வெள்ளையனுக்கு எம் தாமிரபரணி கரையில் விளையும் நெல் மீது என்ன உரிமை என கேட்டவன் கட்டபொம்மன்

அதற்காகவே தூக்கிலும் இடபட்டான், இன்று அவனின் பிறந்தநாள்

அவனை பற்றி ஏராளம் எழுதியாயிற்று.

கட்டபொம்மனும் அவனின் வீரமான போராட்டமும், புதுகோட்டை மன்னனின் துரோகம் வரலாற்றில் நிலைத்தவை

நாட்டுபுறபாடலாக இருந்த கட்டபொம்மன் வாழ்க்கையினை புத்தகமாக எழுதிய மாபொசி, கட்டபொம்மனுக்கு வேடம் கொடுத்த சிவாஜி கணேசன், பாஞ்சாலங்குறிச்சியில் கோட்டை எழுப்பிய கலைஞர் எல்லாம் அவனை கொண்டாடியவர்களில் குறிப்பிடதக்கோர்

ஒருவிஷயத்தில் வரலாறு நம்மை கேள்விகேட்கின்றது

Image may contain: sky, cloud and outdoorஅன்று எமது ஆற்றுநீரில் விளையும் நெல் எம் உரிமை, யாரை கேட்கவேண்டும் நாங்கள்? என சீறி நின்றான் கட்டபொம்மன்

இன்று அதே தாமிரபரணி அந்நிய குளிர்பான கம்பெனிகளாலும், இன்னும் ஏராளமான அந்நியர்களால் மண் வரை சுரண்டபடுகின்றது

யாரும் எதிர்த்து ஒருவார்த்தை கேட்கவில்லை, கட்டபொம்மனுக்கும் பாரதிக்கும் பின் நெல்லைகாரனுக்கு உணர்ச்சி அற்று போயிற்று

இன்று கட்டபொம்மனின் பிறந்த நாள், வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும் அம்மாவீரனுக்கு வீரவணக்கம்

இன்று அவனின் கோட்டை அழிந்து கிடக்கலாம், ஆனால் இந்நாட்டில் வெள்ளையனுக்கு அடங்கி இருந்து மன்னர்கள் வாழ்ந்த பெரும் மாட மாளிகைகளை விட, அழிந்து கிடக்கும் வீரபாண்டிய கட்டபொம்மனின் கோட்டையே இந்தியருக்கு சிறந்தது