வேங்கை மங்கை ஜான்சிராணி பிறந்த நாள்
சுதந்திர போராட்டத்தில் அந்த பெண்மணி அபூர்வமானவர்ள், தமிழச்சிகளுக்குரிய வீரம் அவளிடம் குவிந்திருந்தது
அவள் வெள்ளையனை எதிர்த்து வெற்றிமேல் வெற்றிபெற்ற பொழுது இந்த ஜான்சிராணி எல்லாம் பிறந்திருக்கவேயில்லை
ஜோன் ஆப் ஆர்க், ராணி மங்கம்மா போன்ற தீரபெண்மணி வரிசையில் வந்தவர் அந்த வேலுநாச்சியார்.
அவளுக்கு 10 மொழிகள் பேச தெரிந்திருந்தது, நிர்வாகத்திலும் வீரத்திலும் பெரும் நுணுக்கம் கொண்டிருந்தார். வாள்வீச்சு முதல் எல்லா கலைகளும் அவளுக்கு அத்துபடி.
இந்திய சுதந்திரபோராட்டத்தில் முதல் பெண் போராளி அவளே. அவளின் போராட்ட வாழ்வு மெய்சிலிர்க்க வைப்பது
கணவன் முத்துவடுகநாதர் இறந்தபின் களம் கண்டாள். மருதுபாண்டியரை தளபதியாக கொண்டு அவள் காட்டிய போராட்டம் வெள்ளையருக்கு அச்சத்தை கொடுத்தது.
திப்புவின் படை உதவியுடன் வெள்ளையனை தென்னகத்தை விட்டே விரட்ட பெரும் முயற்சி எடுத்தவள் அவள். நெப்போலியன் மட்டும் கொஞ்ச காலத்திற்கு முன் எழும்பியிருப்பானால் இந்தியாவில் அவன் திட்டம் நிறைவேறியிருக்குமானால்
உலகின் மிகசிறந்த வீரபெண்மணி என ஐரோப்பா அவளை அடையாளம் காட்டி கொண்டாடியிருக்கும்
அதுவும் 12 நாச்சியாருக்கு விசுவாசமான பெண் போராளிகள், விளக்கு எடுத்துசெல்வது போல் சென்று, பின் அதில் ஒரு பெண்ண்ணன குயிலி என்பவர் மீது விளக்கின் மொத்த எண்ணெயும் ஊற்றி, அந்த குயிலி எரியும் தீபந்தாக ஆங்கில ஆயுதகுடோனில் பாய்ந்ததெல்லாம் தமிழகம் கொடுத்த தியாக காட்சிகள்.
இந்திய சுதந்திர போராட்டத்தின் முதல் தற்கொடை போராளி அவளே, அவளின் ஆதர்சம் அந்த வீரமங்கை வேலு நாச்சியார்.
அவளின் வீரமும் போரும் நுண்ணிய வியூகமும் பலமுறை வெள்ளையனை ஓட விரட்டின, பின் துரோகத்தால் சாய்க்கபட்டார்.
ஒரு களங்கமும், வன்மமும் குற்றமும் சொல்லமுடியா வீரமங்கை.
இந்திய பெண்கள் வீரத்தில் சிறந்தவர்கள் என முதன் முதலில் வெள்ளையனுக்கு சொல்லி பல இடங்களில் அவனை வென்று காட்டிய வீரபெண்மணி அந்த வேலு நாச்சியார்
கைகுழந்தையின் தாயான போதும் அவர் காட்டிய வீரத்தில் அதிர்ந்து நின்றது பிரிட்டிஷ் படை. அன்றுமட்டும் பிரிட்டன் ராணி விக்டோரியாவாக இருந்திருந்தால் நிச்சயம் அலெக்ஸாண்டர் புருஷோத்தமன் வரலாறுதான் திரும்பி இருக்கும்
ஆனால் காலம் முந்திகொண்டது
அந்த வேங்கை மங்கைக்கு இன்று பிறந்த நாள், தமிழச்சி வீரத்தை உலகிற்கு சொன்ன , இந்தியாவின் முதல் பெண் சுதந்திரபோராளியான அவருக்கு வீரவணக்கம்