அண்ணாமலை : மறு விமர்சனம்

Image may contain: 2 people, sunglasses, selfie, child, close-up and text

பொங்கலுக்கு என்னதான் சிறப்பு படங்கள் பார்த்தாலும் “அண்ணாமலை” படம் பார்த்தபின்புதான் பொங்கல் கொண்டாடிய திருப்தி இருந்தது

அந்த படத்தின் கதை என்னவென்றால், நவநாகரீக இளம்பெண் ஒருத்தி ப்ரு அப்பாவி பால்காரனை காதலால் மணம் செய்து கொள்கின்றாள். அவன் குடிசையில் தயக்கமின்றி வாழ்கின்றாள்மா.

மாடும் பாலுமாக சுற்றிகொண்டிருந்த அவள் கணவன் நண்பனால் ஏமாற்றபட்டு நடுதெருவிற்கு வந்தபின்னால் அவனோடு இருந்து அவனின் முன்னேற்றத்திற்கு பாடுபட்டு அவனை தொழிலதிபர் ஆக்கி அவன் சவாலில் வெல்ல வைக்கின்றாள் என்பதுதான்

அந்த இளம்பெண்ணை சுற்றித்தான் கதை களம், அவள் பெரும் படிப்பு படித்தவள் ஆனால் ஒரு அப்பாவியினை காதலித்த பாவத்திற்காக அவனோடு மாடு மேய்கின்றாள், பால் கறக்கின்றாள், சாணி அள்ளுகின்றாள், வறட்டி தட்டுகின்றாள், பால் கோவா கிண்டுகின்றாள்

அதுவல்லாமல் தன் மகள் எதிரியின் மகனை காதலிக்கின்றாள் என்றவுடன் அந்த பால்கார கணவன் பக்கமே நிற்கின்றாள்

அவன் ஊதிதள்ளும் சிகரெட்டில் அவளின் உழைப்பும் இருக்கின்றது, ஆனால் கொஞ்சமும் அந்த காசு புகையாய் போவதில் அவள் கவலையடவில்லை, கண்டிக்கவில்லை.

அவனின் மகிழ்சி அவளுக்கு அவ்வளவு முக்கியம்

கணவனின் சவால் போராட்டத்தில் கனவில் மட்டுமே பழம் நினைவுகளுடன் தன்னை சமாதானபடுத்துகின்றாள், இப்படியாக அப்பெண்ணின் பாத்திரத்தை சுற்றியே கதை நகர்கின்றது.

இந்த பால்காரன் வேடத்தில் ரஜினி என்பவர் நடித்திருந்தார், நிச்சயமாக அது ராமராஜனுக்கு பொருத்தமான வேடம் அவர்தான் நடித்திருக்க வேண்டும், ஆனால் ரஜினிக்கு கொடுத்துவிட்டார்கள்

அந்த கதையினை தாங்கி நிற்கும் இளம்பெண் வேடத்தில் தலைவி குஷ்பு பின்னியிருந்தார். அவரை தவிர யாரும் அந்த கனமான வேடத்தை சுமக்க முடியாது.

காதலில் விழுவது, அவன் பால்காரன் என ஏமாற்றம் அடைந்தாலும் தமிழர் பண்பாட்டுபடி அவனே கணவன் என ஏற்று கொள்வது, மாட்டு பண்ணையில் கஷ்டபடுவது, மாமியாரை மதிப்பது, கணவனின் லட்சியம் நிறைவேற உழைப்பது என அத்தனை வேடங்களிலும் பின்னி இருந்தார்

அதுவும் கிளைமேக்ஸில் கணவன் தன் சவாலில் வென்றுவிட்ட பின்னாலும், நண்பனின் சொத்துக்களை ஒப்படைக்கும்பொழுது அவனின் நல்ல‌ குணத்தையும் அவன் வென்றுவிட்ட கர்வத்தையும் அப்படியே தன் முகத்தில் காட்டும் போது மிக சிறந்த நடிப்பினை கொடுத்திருந்தார்.

விருது கொடுக்க வேண்டிய நடிப்பு, ஆனால் பாவி உலகம் கொடுக்கவில்லை.

நிச்சயம் அது குஷ்பு படம், பல காட்சிகள் அவரை சுற்றி இன்னும் வைத்திருக்க வேண்டும், அவர் மாட்டுபண்ணையில் கஷ்டபடும் காட்சி, குழந்தை வளர்க்க சிரமபடும் காட்சி எல்லாம் டைரக்டர் காட்டவில்லை

அந்த பாவத்திற்கு பின்னால் பாபா படத்தில் மொத்தமாக வாங்கி கட்டினார் சுரேஷ் கிருஷ்ணா, பின் ஆண்டவன் என ஒருவன் இருக்கின்றான் அல்லவா? விடுவானா?

தலைவி படம் பார்த்தால்தான் பொங்கல் கொண்டாடிய திருப்தியே வந்தது

அதில் ஒரு பாடலில் இஸ்ரேலிய மோஷே தயான் ஸ்டைலில் ஒற்றை கண்ணோடு வந்து நின்றார் ரஜினி கொஞ்சமும் ஒட்டவில்லை

ஆனால் வெள்ளை ஆடையில் குஷ்பு வந்தபொழுது சாட்சாத் யூத பெண்களின் தெய்வீக அழகு தெரிந்தது

ஆக இந்த படத்தை பலமுறை பார்த்து மகிழ்ந்து பொங்கல் நாட்களை மகா சிறப்பாக கொண்டாட சங்கம் முடிவெடுத்திருக்கின்றது.