கலகலப்பு 2 : வரலாற்றின் சிறந்த நகைச்சுவை

Image may contain: 5 people, people smiling, text

விடுமுறை என்றால் குஷ்பு படம் பார்க்கவேண்டும், இம்முறை குஷ்பு தயாரித்த படம் “கலகலப்பு 2” வந்திருப்பதால் சங்கத்து தீர்மானபடி ஓடிசென்று நள்ளிரவிலே பெரும்படையுடன் சென்று பார்த்தாயிற்று.

தியேட்டர் நிரம்பியிருந்தது குஷ்பு வழங்கும் என்ற டைட்டில் பார்த்தவுடன் தியேட்டர் அதிர்ந்தது, ஆம் உலகிலே ஒரு தயாரிப்பாளர் பெயருக்கு அவ்வளவு வரவேற்பு இருந்த அதிசயத்தை அங்குதான் காணமுடிந்தது

படம் 20 வருடத்திற்கு முன்பு வந்த “உள்ளத்தை அள்ளித்தா” “மேட்டுகுடி” “ஜாணகி ராமன்” சாயல், ஆனால் கச்சிதம் என்பது மிக சரியாக வந்திருக்கின்றது

மிக நீண்ட நகைச்சுவை படம் , வழக்கமான சுந்தர்.சி படத்திலிருந்து கொஞ்சம் அதிகமாகவே சிரிக்க வைக்கின்றது. கடைசி நொடிவரை அட்டகாசமான காமெடி

தமிழக சினிமா வரலாற்றின் சிறந்த நகைச்சுவை படம் ஒன்று வந்திருக்கின்றது

யோகிபாபு முதல் ரோபோ சங்கர் வரை ஒவ்வொரு பாத்திரமும் தூள்பறத்தும் ரகம்

2.5 மணிநேரம் எந்த சிந்தனையுமின்றி சிரித்து வரவேண்டும் என விரும்புவர்கள் செல்லலாம், குடும்பத்தோடு சிரிக்க வேண்டுமென்றால் கண்டிப்பாக செல்லவும்

படத்தில் குறிப்பிட்டு சொல்லவேண்டிய அம்சம் தயாரிப்பு. மிக நுணுக்கமாக மக்கள் ரசித்து மகிழ வேண்டும் என்பதற்காக தலைவி அருமையாக தயாரித்திருகின்றார்

படம் வெற்றிபெற்றிருக்கின்றது , தலைவிக்கு வாழ்த்து சொல்லி சங்கம் மகிழ்கின்றது

2.5 மணிநேரம் கண்ணில் நீர்வழிய, வயிறு வலிக்க சிரித்துவிட்டு படம் முடிந்ததும் ஒரு கேள்வி எழுகின்றது

தலைவி ஒரு காட்சிக்காவது வந்திருக்கலாமே? எனும் சோகம் மனதை நிரப்பிவிட்டது

ஏன் வரவில்லை தலைவி? ஒரு காட்சியில் வந்து சென்றிருந்தால் எவ்வளவு மகிழ்வாக இருந்திருக்கும்

மலேசிய மக்களுக்கு குஷ்புவினை நிரம்ப பிடிக்கும் என்பதால், இந்த கேள்வி திரையரங்கத்திலே பலர் சொல்வதை கேட்க முடிந்தது

இனி அடுத்த வெற்றிபடத்தை தயாரிக்க போகும் தலைவி, ரசிகர்களின் வேண்டுகோளை நிறைவேற்றட்டும்,

நிச்சயம் படம் வெற்றி, அதனை மாபெரும் வெற்றியாக்கி மலேசிய திரையரங்கில் தலைவியின் படம் கொண்டாடபடும் சிறப்பை
அறிந்து கொள்ள, சங்கம் பலமுறை இப்படம் பார்க்க முடிவு செய்துள்ளது