வங்கம் தந்த தங்க ஞானமகனுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்
அவர் பெயர் கதாதர், வங்கத்துக்காரர் சிலை செய்வதும், ஓவியமும் அவருக்கு பிடித்தமான விஷயங்கள் ஆனால் குடும்ப வறுமை அவரை வேறுவழியில் இழுத்து சென்றது
அவரின் அண்ணன் ஒரு புரோகிதர், அதனால் அவரும் ஆன்மீக வழியில் சென்றாயிற்று. ஆன்மீகத்தில் மூழ்கிய அவருக்கு பல சிந்தனைகள் எழுந்தன
கடவுள் என்பது சிலையா, இல்லை வானலோகத்தில் இருப்பவரா? எல்லாம் அறிந்த தெய்வம் கல்லில் இருக்குமா? இதற்கு ஏன் பூஜைகள் என்றேல்லாம் சிந்தனை சென்றது
கல்கத்தாவின் தெய்வம் அன்னை காளி, அவளிடமே முறையிட்டு சந்தேகம் தீர்க்க சொன்னார். தெய்வம் வரவில்லை
அழைத்தவுடன் எந்த தெய்வம் வரும்? வராது. முழுக்க சோதித்து அவன் விரக்தியின் எல்லைக்கு செல்லும்பொழுது வருவதே தெய்வத்தின் விளையாட்டு
அப்படி கடும் தவத்தில் மூழ்கினாலும் அவருக்கு கடவுள் தெரியவில்லை, இனி அன்னை முன்னாலே சாகபோகின்றேன் என வாளை எடுத்துகொண்டு காளி சிலை முன்னால் தன்னையே வெட்ட முயன்றபொழுதுதான் ஒரு ஒளி அவரை ஆட்கொண்டது
அதுமுதல் அவருக்கு ஞானம் விளங்கிற்று, அவருக்கு பெரும் பிரபஞ்ச ஞானம் வசபட்டது, கடவுள் என்பவரை மனதால் உணர தொடங்கினார். அந்த கதாதர் ராமகிருஷ்ண பரம்ம ஹம்சரும் ஆனார்
தான் பக்தியில் மூழ்கி ஞானத்தின் உச்சியில் எல்லா தெய்வங்களின் இயல்பினையும் கண்டதாக போதனை செய்ய தொடங்கினார்
அவருக்கு கூட்டம் கூடிற்று, பெரும் புகழ் உண்டாயிற்று. தாயின் வேண்டுகோளுக்கினங்க தான் முன்னறிவித்த பெண்ணான சாரதா தேவியினையே மணந்தார்.
எல்லா பெண்களும் தனக்கு காளியின் அடையாளம் என போதித்த அவர் , ஒருநாள் தன் மனைவியினை காளிவடிவமாக கருதி வணங்கவும் செய்தார்
ராமகிருஷ்ண பரமஹம்சரின் சிறப்பியல்பு எல்லா மத தாக்கங்களும் அவரில் இருந்தன. இயேசு, நபி போன்றோரின் உயர்ந்த சிந்தனைகளையும் போதித்தார், கடவுள் ஒருவரே எனும் பெரும் தத்துவத்தில் எந்த மதத்திற்கு எதிரான துவேஷ போக்கும் அவரிடம் இல்லை
இந்த பெரும் ஞானகடலில்தான் ஒரு முத்து விளைந்து உலகிற்கெல்லாம் இந்திய ஒளியினை கொடுத்தது, அவர்தான் விவேகானந்தர்
பெரும் அறிவாளியும், பெரும் ஆற்றல் வாய்ந்த திறனும் கொண்டிருந்த விவேகானந்தருக்கு இந்திய பெரும் ஞான மரபினை போதித்தவர் பரமஹம்சர்
அந்த பெரும் ஞான வெள்ளத்தில் வளர்ந்ததாலே விவேகானந்தர் பெரும் அசாத்திய ஞானியாக வளர்ந்து நின்றார்
இந்துமதத்தில் மிக சிறந்த ஞானிகள் வரிசையில் இடம்பிடிக்கும் ஞான பெருமகன் அந்த பரம்ம ஹம்சர்
அவர் மடத்தில் ஆரம்பரமில்லை, பெரும் ஆரவாரமில்லை , நள்ளிரவு கூத்துக்கள் இல்லை, எந்த சர்ச்சையுமில்லை
ஆனால் அவரிடமும் எல்லா தெய்வங்களும் பேசின, சிவன் முதல் காளி வரை, இயேசுவரை அவர் கண்டதாக அவரே சொல்லி இருக்கின்றார்
எல்லா பெண்களும் தனக்கு காளியின் அடையாளம் என போதித்த அவர் , ஒருநாள் தன் மனைவியினை காளிவடிவமாக கருதி வணங்கவும் செய்தார்
எந்த தெய்வமும் அவரை அடுத்தவன் சொத்த அபகரி என சொல்லாததாலும், அத்தனைக்கும் ஆசைபடு என்சாஜ் என சொல்லாததாலும் அவை உண்மை தெய்வங்கள் என நம்பலாம்
ஒரு நல்ல இந்து துறவி எப்படி இருக்க வேண்டும் என உலகிற்கு சொன்ன அந்த மகானுக்கு இன்று பிறந்தநாள்
வங்கம் தந்த அந்த தங்க ஞானமகனுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்