மாவீரன் பகத் சிங்கிற்கு வீர வணக்கம்…

மிக இளம்வயதிலே சுதந்திர இந்தியா பற்றி சிந்தித்து, போராடி வெறும் 23 வயதிலே தனது வாழ்க்கையை முடித்த அந்த தியாகி, நிச்சயம் நினைவுகூற தக்கவர்.
1919ம் ஆண்டு நடந்த ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்த பின்னால் 12 வயது சிறுவனாக, இரத்தம் சிந்தியமண்ணை எடுத்து தனது ஆடையில் முடிந்துகொண்டு போராட புறப்பட்ட ஒரு இளைஞன்,
அமைதியான முறையில் போராடிகொண்டிருந்த பஞ்சாப் சிங்கம் லாலா லஜபதிராயின் படுகொலை அவனை போராளியாக்கி கொலைகுற்றவாளி ஆக்கிற்று.
சாண்டர்ஸின் கொலையில் தேடபடும்பொழுதே ஆட்சியாளர் மன்றத்தில் ஒரு சட்டத்தை கண்டித்து குண்டுவீசி, அதன் நியாத்தை அமைதியாக வெளிகாட்டிய போராளி.
அக்குண்டுவீச்சில் யாரும் கொல்லபடவில்லை எனினும், இவரால் ஏற்பட்ட எழுச்சியினை கண்டு பயந்த அரசாங்கம் அவரை கொல்ல இது பெரும் வாய்ப்பாக கருதிற்ற, தூக்கு தண்டனை விதித்தது.
ஆசிரமம்,சத்தியாகிரகம்,ஆண்மீக சோதனை இன்னும் என்னவெல்லாமோ செய்துகொண்டிருந்த காந்தி, பகத்சிங்கினை காப்பாற்ற எந்த முயற்சியும் எடுக்கவில்லை, வன்முறைக்கு நான் எதிரி என சொல்லிவிட்டு “ரகுபதிராகவ ராஜாராம்” என பாட சென்றுவிட்டார் காந்தி,
அப்படியானால் லாலா லஜபதிராய் தானே தலையில் அடித்து செத்துவிட்டாரா என கேட்டால் அமைதியாக ஆட்டுப்பால் குடித்துகொண்டிருந்தார்.
வன்முறைக்கு வன்முறை தீர்வாகாது என சொன்னார் காந்தி, பகத்சிங்கினை அவர் ஆதரிக்கவில்லை.
அதே நேரம் பகத்சிங்கிற்கும் நாட்டுக்காக சாவதில் தயக்கமேதுமில்லை.
24 வயதில் சர்ச்சைக்குள்ளான முறையில் தூக்கிலபட்டதாக அறிவிக்கபட்ட பகத்சிங்கின் மரணம் மிகுந்த சர்ச்சைக்குள்ளானது, அதில் மறைக்கபட்ட பல விஷயங்கள் உண்டு.
குறுகிய காலம் வாழ்ந்தாலும் மாபெரும் எழுச்சியினை அவரின் மரணம் தோற்றுவித்து அடுத்த 15 ஆண்டுகளில் விடுதலை கொடுக்கும் அளவிற்கு பிரிட்டன் நாடாளுமன்றத்தில் மாற்றம் கொண்டுவந்தது.
பகதிசிங்கும் அவன் கூட்டாளிகளும் மிக சிறுவயதிலே தங்களை தியாகம் செய்து எழுப்பிய எழுச்சி இந்தியாவின் விடிவாகவே அமைந்தது
மாபெரும் உணர்ச்சியினை இந்நாட்டில் ஏற்றி வைத்தவன் பகத்சிங், தன் உயிரை கொடுத்து ஏற்றிவைத்தான்
ஆனால் ஒரு வகையில் பகத்சிங் அதிர்ஷ்டசாலி, அவன் விரும்பிய சுதந்திரத்தினை காணாவிட்டாலும், அவனால் தாங்கமுடியாத இந்திய பிரிவினையும்,அதுவும் சொந்த பஞ்சாப் 3 துண்டாக உடைக்கபட்ட கொடுமையும் காண அவன் இல்லை.
அன்று
சாண்டர்ஸ் கொல்லபட்டபொழுது மொத்த இந்தியாவும் ஆர்ப்பரித்தது, பகத்சிங் தீர்ப்பு அறிவிக்கபட்டபொழுது ெல்லி,மும்பை,கல்கத்தா,சென்னை, லாகூர், கராச்சி என மொத்த இந்தியாவும் கதறியது.
அவன் தூக்கிலிட்ட பொழுது வெள்ளையனை விரட்டாமல் ஓயமாட்டோம் என சிந்து முதல் கன்னியாகுமரி வரை பரந்த இந்தியா சபதம் எடுத்தது
இந்தியாவின் எல்லா தாயாரும் அவனுக்காக அழுது சபதமேற்றார்கள்.
இன்று
அவன் போராடிய லாகூரில் இருந்து பல ஏவுகனைகள் அணுகுண்டோடு இன்று டெல்லியையும்,மும்பையும் குறிபார்த்து நிற்கிறது.
அவனுக்காக , வ.வு.சிதம்பரத்தோடும் இன்னும் பலரும் அழுத தமிழகத்தின் கடற்கரையில் இந்திய கப்பல்களால் லாகூரும்,கராச்சியும் 24 மணிநேரமும் குறிவைக்கபடுகிறது.
காலம்தான் என்ன விசித்திர விளையாட்டுக்களை எல்லாம்ஆடுகிறது.
இன்று அந்த மாவீரனின் நினைவுநாள், அவன் பிறந்த லாகூர் இந்தியாவில் இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவன் நினைவுகளை இத்தேசம் ஒருநாளும் மறக்காது.
பாகிஸ்தானும் அவனுக்கான மரியாதையினை கொடுத்துகொண்டுதான் இருக்கின்றது
காரணம் மதங்களை தாண்டி அவன் தேசத்தை நேசித்ததால் இருநாட்டிலும் கொண்டாடபடுகின்றான்.
இந்த மண்ணோடும் , காற்றோடும் கலந்தவன் அவன்
அவனுக்கு வீர வணக்கம்…