ஆசான் Pa Raghavan எழுதியும் புரியாத விஷயம் ஏதுமில்லை

எப்பொழுதும் யாராவது ஒரு தொடர் எழுதுவார்கள், பத்திரிகை உலகில் அது சகஜம்

ஆனால் தினமணியில் Pa Raghavan புதிதாக ஒரு தொடர் எழுதுகின்றார், விஷயம் ஆன்மீகம் துறவு தத்துவம் பற்றியது.

உண்மையில் இந்து மத தத்துவம் மிக உயர்ந்தது, ஆழமிக்கது. துறவு என்பதற்கும் ஆன்மீகம் என்பதற்கும் அது வகுத்திருந்த எல்லையும் ஆழமும் உயரமும் பெரிது

சிக்கல் என்னவென்றால் யாரும் பாமரருக்கு புரியும் வகை சொல்லவில்லை

எமக்கும் துறவில் ஆசை இருந்தது. ஆனால் கத்தோலிக்க திருச்சபை ஒரே மகனை ஏற்காது என்றார்கள். பெற்றோருக்கும் விருப்பமில்லை

சரி காதலில் தோற்றால் துறவறம் செல்லலாம் என தோற்கும் காதலாக செய்தாலும் அடுத்த காதல் வந்ததே தவிர துறவு வரவில்லை

நான் துறவியாக பெரும் விருப்பம் கொண்டவன் என் பெரியப்பா, ஒரே காரணம் சொத்துகள் அவர் வசமாகும் என்பது ஆனாலும் அந்த சண்டாளனும் துறவினை ஒழுங்காக போதிக்கவில்லை

நல்ல குருவும் இல்லை, துறவு புரியவுமில்லை. நாம் துறவியானால் பெரியப்பனுக்கு சொத்து போய்விடும் ஒரு சென்ட் கூட அந்த சண்டாளனுக்கு செல்ல கூடாது எனும் தீவிரமான முடிவெடுத்ததால் துறவுக்கு துறவு சொல்லி ஆயிற்று

ஆனாலும் அவ்வப்போது தேடுவதுண்டு, எல்லா மதங்களின் வாயிலிலும் தேடியிருகின்றேன்

பல சித்தாத்தங்களை படித்தால் பைபிளின் பழைய ஏற்பாடு முழுக்க யூதருக்கானது, புதிய ஏற்பாடு ஒரு மாதிரி பயமுறுத்துவது அதாவது கிறிஸ்துவினை ஏற்காவிட்டால் உனக்கு நரகம் என்பது

பைபிளின் சங்க திருவுரை ஆகமம் என்பதும் , தமிழக சித்தர்களின் பாடலும் வேறல்ல, இரண்டும் சொல்ல வருவது வாழ்க்கை என்பது காற்றை கையில் பிடிப்பதற்கு சமம்

மாபெரும் ஞானி சாலமோனே அதனை சொல்லியிருக்கின்றார்

இதை தவிர பைபிளில் உருப்படியாக படித்த ஆன்மீகம் ஏதுமில்லை

இஸ்லாம் ஒரே கடவுளை போதித்தாலும் யூத சாயல் நிரம்ப இருந்தது

துறவு என்றால் என்ன என்பதை இந்துமதம் எப்படி சொல்லியிருக்கின்றது என தேடினால் ஒன்றும் புரியவில்லை

ஆனால் முதன் முதலில் புரியும்படி ஆண்மீகத்தை போதித்தவர் விவேகானந்தர்

தமிழில் கிருபானந்தவாரி ஓரளவு சொன்னார், பழைய காஞ்சி மகான் சந்திரசேகரன் இன்னும் கொஞ்சம் விளக்கி இருந்தார்

கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் இந்துக்களில் எல்லா நதிகரையினையும் தொட்டது, அது துறவை பற்றி மேலோட்டமாக சொன்னது

அந்த வரிசையில் தினமணியில் Pa Raghavan
” யதி” என்றொரு தொடரை எழுதுகின்றார்

துறவு என்பது அடைவது அல்ல உணர்வது என்ற ஒற்றை வரியில் தொடர் டாப் கியரில் எகிறுகின்றது

இந்து மத அபிமானிகள், ஆன்மீக தேடல் கொண்டவர்கள் நிச்சயம் படிக்க வேண்டிய விஷயம் அது.

(இந்த ஜக்கி, நித்தி , பாபா ராம்தேவ் பேசுவது எல்லாம் ஆன்மீகமே அல்ல, அது வியாபாரம் என்பது யாருக்கும் தெரியாதது அல்ல‌)

விவேகானந்தராக, இரண்டாம் கண்ணதாசனாக ஆன்மீக தொடர் எழுதும் குருநாதருக்கு வாழ்த்துக்கள்

ஆசான் Pa Raghavan எழுதியும் புரியாத விஷயம் ஏதுமில்லை, அப்படியும் புரியாவிட்டால் யார் எழுதியும் புரியாது

இது மிகபெரும் தொடராக வரும் என்கின்றார்கள், கிட்டதட்ட ஆயிரம் நாட்கள் தொடர்ந்து எழுதபோகின்றார்

அந்த எல்லாம் வல்ல பரம்பொருள் அவருக்கு எல்லா பலனும், நிரம்பிய ஞானமும் அருளட்டும்