எஸ்.ஜானகிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும்

பாடகிகளில் அவர் நிச்சயம் சாதனையாளர், 9 வயதில் பாட வந்தவர். நாடக மேடைகளில் பாட வந்தவர் பின் சினிமாவிலும் பாட வந்தார்
அப்பொழுது அவர் பெயர் சிட்சுலா ஜாணகி, சிட்சுலா என்பது ஆந்திர குலப்பெயர். அங்கு அப்படி பல பெயர்கள் உண்டு
நாகபட்லா, மரசகட்லா போல சிட்சுலா. பின்னாளில் அவர் எஸ.ஜாணகி
ஒரு சில பாடல்கள் பாடியபின் அவர் நிராகரிக்காபட்டார், அந்த கொஞ்சும் குரல் அக்கால சுந்தராம்பாள், சுப்புலட்சுமி, வசந்தகுமாரி, சுசீலா போன்ற ஜாம்பவான்களோடு நிற்க முடியாது என அவருக்கு வாய்ப்புகள் மறுக்கபட்டன
எனினும் சிங்கார வேலனே தேவா என்ற பாடல் அவரை தூக்கி நிறுத்திற்று
தொடர்ந்து வாய்ப்புகள் வந்தன, தவிர்க்கமுடியா பாடகி எனும் இடத்தினை பெற்றார்
சுப்பையா நாயுடு காலத்தின் சிங்கார வேலனே தேவா என பாட தொடங்கி, கேவி மகாதேவன், எம் எஸ் விஸ்வநாதன் , இளையராஜா என தொடங்கி ஏ.ஆர் ரகுமான் இசையில் அவர் நெஞ்சினிலே நெஞ்சினிலே என பாடும்பொழுது 48 ஆயிரம் பாடல்களை பாடியிருந்தார்
அதில் 17 மொழிகள் பாடலும் அடக்கம், சில ஜெர்மன் ஜப்பான் பாடல்களும் உண்டு
அந்த சிறப்பு இன்றைய தேதியில் எந்த பாடகிக்கும் இல்லை என்பது பெரும் விஷயம்
சுந்தராம்பாள் காலத்தில் பாட தொடங்கிய ஜாணகி சுசிலா காலம் சித்ரா காலம், மினிமினி, சுஜாதா, என பல தலைமுறையினரோடு தொடர்ந்து வந்தார்
தலைமுறை இடைவெளி அவரை பாதிக்க்கவில்லை கிட்டதட்ட 4 தலைமுறை பாடகிகளுடன் தொடர்ந்து வந்தது சாமான்ய விஷயம் அல்ல
குழந்தைகள் வேடம் முதல், கிழவிகள் பாத்திரம் வரை உணர்ச்சிகளை அட்டகாசமாக குரலில் கொடுத்தவர் அவர்
அதில் கொஞ்சல், ஏக்கம், பக்தி, காதல், பாசம் என எல்லா உணர்ச்சிகளும் அனாசயமாக கலந்திருந்தன
நிச்சயம் தமிழ் திரை பாடல் உலகில் நீண்ட காலம் ஓடிய இன்னிசை குரல் நதி ஜாணகி, தவிர்க்கவே முடியாத இடம் அவருடையது
தன் நீண்ட நெடும் இசைபயணத்தை கொஞ்ச நாளைக்கு முன்புதான் நிறுத்தினார், இனி பாடப்போவது இல்லை என அறிவித்தார்
4 முறை தேசிய விருதும், தென்னகத்தின் எல்லா அரசின் விருதும், பல தனியார் விருதுகளும் ஏராளமான முறை வாங்கியவர். நிச்சயம் அவர் திரை இசை வாழ்வில் வாழ்நாள் சாதனையாளர்
இலங்கை போன்ற வெளிநாடுகள் கூட அவருக்க்கு பெரும் விருதுகளை வழங்கின
2013ல் பத்ம பூஷன் விருது அவருக்கு வழங்கபட்டபோது இது மிக தாமதமான விருது அதனால் வாங்கமாட்டேன் என அவர் சொன்னபொழுது அனைவருக்கும் அதிர்ச்சியே வந்தது
ஆனானபட்ட சிவாஜி கணேசனுக்கே நல்ல விருது கொடுக்காத இடம் டெல்லி, அங்கு நிலை அப்படித்தான் பல அரசியல் கொண்ட பீடம் அது.
சிவாஜிக்கு இருந்த வலி ஜாணகிக்கும் இருந்திருகின்றது,
ஆம் அவர் மனதிலும் அப்படி ஒரு வலி இருந்திருக்கின்றது, தன் திறமையினை முறையாக அங்கீகரிக்கவில்லை என்ற ஏக்கம் இருந்திருக்கின்றது,
அதனால் சொன்னார் இதை வாங்கமாட்டேன் “பாரத ரத்னா” என்றால் வாங்குவேன்
லதா மங்கேஷ்கருக்கும், எம்.எஸ் சுப்புலட்சுமிக்கும் பாரத ரத்னா பாடகிகளுக்காக வழங்கபட்டிருக்கும் தேசமிது
அவர்கள் திறமையிலும், புகழிலும் கொஞ்சமும் சந்தேகமில்லை என்றாலும் அவர்களின் இன்னபிற அடையாளங்களும் , மேலிட செல்வாக்கும் இன்னபிற விஷயங்களும் அவர்களுக்கு அப்பட்டத்தை வாங்கி கொடுத்தன என்ற சர்ச்சை இன்றும் உண்டு
பிற்படுத்தபட்ட தனக்கு அந்த சில பிறப்பு உரிமை இல்லை என்ற வடு ஜாணகிக்கு அக்காலம் முதலே இருந்தது, அதுதான் பாரத ரத்னாவா கொடுப்பார்கள்? என கேட்க வைத்தது
அவர் அப்படி சொல்லி சர்ச்சையில் சிக்கினாலும் இந்நாட்டின் விருது அரசியல் அப்பட்டமாக தெரிந்தது, நிச்சயம் அந்த பத்ம விபூஷன் முன்கூட்டியே வழங்கபட்டிருக்க வேண்டும்
நிச்சயம் அவர் சாதனையாளர், கிட்டதட்ட 50 வருடங்கள் திரையுலகில் தொடர்ந்து பாடுவது என்பது மாபெரும் சாதனை. அவர் குரலின்றி 50 ஆண்டு கால சிறந்த பாடல்கள் இல்லை உறுதியாக சொல்லலாம்
தமிழ்திரை பாடல்களின் சிறந்த பாடல்களில் ஏராளம் ஜாணகி குரலோடே வந்துகொண்டிருக்கும், அதுவும் இளையராஜா இசையில் ஜாணகி குரல் வைரமாக ஜொலித்தது, தனித்து நின்றது
அந்த அற்புத பாடகிக்கு இன்று பிறந்த நாள்
அவரின் முதல் படம் “விதியின் விளையாட்டு”, அவரின் முதல் பாடல் “பெண் என் ஆசை பாழானது” என தொடங்கும்
ஆச்சரியமாக விதி அவரின் வாழ்வில் விளையாடி தனிபட்ட அவரின் பல ஆசைகளை கெடுத்தது
அதன் பின் வெள்ளுடையில் கிட்டதட்ட சுந்தராம்பாள் போல சன்னியாசி கோலத்தில் நகை துறந்து வலம் வந்தார்
குரலால் கோடான கோடிபேரை கட்டிபோட்ட அவர் தனிபட்ட முறையில் அதிகம் தென்படுவதில்லை, பெரும் பேட்டிகளோ, நடுவராக இருந்து அழிச்சாட்டியம் செய்பவராகவோ அவரை பார்க்க முடியாது
குயில் பாடலாம் தன் முகம் காட்டுமா? என்ற வரிகள் அவருக்கு பொருந்த கூடியவை
தலைவி குஷ்புவிற்கும் ஜாணகி அம்மையாருக்கும் சிறப்பு தொடர்பு உண்டு
தலைவி குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான மேரி ஜங்க் இந்திபடத்தில் அவருக்கு பாடியவர் ஜாணகி
பின் தலைவி தெலுங்குக்கு வந்தபொழுதும் பாடினார்
தலைவி தமிழில் காவிய படங்களில் நடித்த படங்களில் எல்லாம் அவருக்கு பாடியவர் ஜாணகி
அந்த வகையில் சங்கத்தின் தனிபெரும் நன்றிக்குரியவர் ஜாணகி என்பதால் சங்கம் ஸ்பெஷல் வாழ்த்துக்களை தெரிவிக்கின்றது
அந்த கொஞ்சும் கவிகுயிலுக்கு இன்று 80ம் வயது பிறக்கின்றது, அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும்