இன்று அந்த தனிப்பெரும் எழுத்தாளனுக்கு பிறந்த நாள்

Image may contain: 1 person, smiling, sunglasses, glasses and close-up

இந்த தமிழகத்தில் மொழிவெறி, இனவெறி , மதவெறி இன்றி மானுடத்தை நேசித்த ஒரு மாபெரும் எழுத்தாளன் ஒருவன் இருந்தானென்றால் அது ஜெயகாந்தன் ஒருவனே

மானிடம் மானிடமாக வாழ அவன் எழுதினான், சமூக சீர்கேடுகளை சாடி எழுதினான்

அந்த எழுத்தில் மானிட நேயம் மட்டுமே மிகுந்திருந்தது

பாரதிக்கு பின் தமிழகம் கண்ட தனிப்பெரும் சிந்தனையாளன் அவன்

இந்த பாழ்பட்ட தமிழகத்தில் பிறக்காமல் மேல்நாட்டில் பிறந்திருந்தால் நிச்சயம் டாஸ்டாய் அளவு அவன் பேசபட்டிருப்பான்

தமிழ்சினிமா தமிழகத்தை எந்த அளவு கெடுத்தது என முதலில் சொன்னது அவனே, மிக தைரியமாக சாடியதும் அவனே

இன்று அந்த தனிப்பெரும் எழுத்தாளனுக்கு பிறந்த நாள்

அந்த சிந்தனையாளன் வழியில் சினிமாக்காரர்களின் போலி முகத்தை உரித்து தொங்கவிடுவோம், பாரதிராஜா சைமன் ரஜினி, கமல் என ஒரு பயலையும் விட கூடாது

எழுத்துலக சிங்கத்தின் பிறந்தநாளில் அறிவுடை தமிழ்சமூகம் பெருமை கொண்டு அவனுக்கு ஆழ்ந்த அஞ்சலி செலுத்துகின்றது