பி.டி தியாகராஜர் பிறந்த நாள் இன்று

Image may contain: one or more people, people standing and shoes

பிரிட்டிசாரிடம் பிராமணர் அல்லோதார் சார்பாக மநாட்டில் பேசியவர்கள்..

அது பெரும் நல்லதிட்டங்களை கொண்ட கட்சியாக இருந்தாலும் படித்தவர்கள் நிரம்பியிருந்தனர், கடவுள் நம்பிக்கை இருந்த அதே நேரம் பிராமணர்களின் அடாவடியினை எதிர்த்த கட்சி அது

பெரியாரும் இதில்தான் இருந்தார், ஆனால் அவரால் நீடிக்க முடியவில்லை சுயமரியாதை, திராவிடர் கட்சி என பின்பு தனியாக அதிரடி காட்டினார், வரலாற்றை மாற்றினார்

எப்படி ஆயினும் நீதிகட்சிதான் இன்றைய திராவிட கொள்கைக்கும், கட்சிகளுக்கும் முன்னோடி, அதன் தலைவர்தான் பிட்டி தியாகராஜர்

திராவிட கொள்கைக்கும், பெரும் மாற்றத்திற்கும் அடித்தளமிட்ட அவரின் பிறந்த நாள் இன்று

இவரது நினைவால்தான் அன்று புதிதாக உருவாக்கபட்ட சென்னை புறநகர் ஒன்றிற்கு தியாகராய நகர் என அக்கட்சியின் ஆட்சியில் பெயர் சூட்டபட்டது, அவர் பெயரில் அரங்கம் ஒன்றும் கட்டபட்டது

அது இன்று தி.நகர் ஆயிற்று, சென்னையின் மிக முக்கிய பகுதி ஆயிற்று

அதாவது பெரியார் காலத்திற்கு முன்பே திராவிட குரல் எழும்பியது, பலர் எழுப்பினார்கள், பெரியார் அதனை ஆணிதரமாக பிடித்துகொண்டு போராடினார்

அப்படி பெரியாருக்கு வழிகாட்டியவர்களில் ஒருவர்தான் பிட்டி தியாகராஜர்.

நிச்சயம் தியாகராய செட்டி, பனகல் அரசர் எல்லாம் பிராமண எதிரிகள் சந்தேகமில்லை ஆனால் இந்து அபிமானிகள் திட்டமாட்டார்கள்

காரணம் அவர்கள் சீர்திருத்தம் பேசினார்களே தவிர கடவுள் பகிஷ்கரிப்போ, துவேஷமோ செய்யவில்லை அதனால் அவர்களை பிராமணர்கள் தங்களுக்கு எதிரான‌ விஷ வித்துக்களை விதைத்தோர் என்ற வகையில் கூட கண்டுகொள்ளவில்லை

நிச்சயம் பிட்டி தியாகராஜர், பனகல் அரசர், பிடி ராஜன் , டி.எம் நாயர் போன்றோர் எல்லாம் வழிகாட்டிகள்

தென்னகம் இன்று ஓரளவு தனிதன்மையுடன் இருக்க இவரின் துணிவான அணுகுமுறையும், தன்னலமற்ற பொதுநல சிந்தனையுமே முதல் காரணம்

அவர் பற்றிவைத்த தீ இன்றுவரை எரிந்துகொண்டிருக்கின்றது

அந்த தீயினை பெரியாரும் அண்ணாவும் கலைஞரும் காத்தனர், இன்றோ நிலை மாறிவிட்டது

தியாகராய செட்டி காலத்திலிருந்து தொடங்கிய இயக்கம் மூன்றாம் கலைஞர் என சொல்லிகொண்டிருக்கும் ஒரு குடும்பத்து கையில் மாட்டிவிட கூடாது, அப்படி சிக்கினால் அது தியாகராயர் போல பல முன்னோடிகளுக்கு செய்யபடும் மாபெரும் அவமானம்

தியாகராஜர் போராடிய காலங்களில் கலைஞர் பிறக்கவே இல்லை என்பதும் நினைவில் வைக்க வேண்டியது

இதனை சமூகநீதி காப்பதாக, நீதிகட்சி வழிவந்த திமுக என சொல்லிகொள்வோர் உணர்ந்தால் நல்லது

நிச்சயம் நீதிகட்சி தியாகமும் போராட்டமும் மகத்தானது

அவர்கள் வழிகாட்டினார்கள் நாம் நடந்தோம், அவர்கள் படிக்கட்டானார்கள் நாம் உயர்ந்தோம்

திராவிட வரலாற்றில் மறக்க முடியாத பிதாமகனான அவருக்கு அஞ்சலியினை தெரிவித்துகொள்ளலாம்.