விஞ்ஞான வசதிகளை நீட் தேர்வு வளாகத்தில் பயன்படுத்தினால் என்ன?
தேர்தல் காலங்களில் கட்டிலில் கிடக்கும் கிழவிக்கு கையில் ஆயிரம் ரூபாய் கொடுத்து வாக்குசாவடிக்கு தூக்கி சென்று வாக்கு வாங்குவார்கள் தொண்டர்கள். எவ்வளவு தூரம் என்றாலும் சளைக்காமல் ஓடுவார்கள்
தலைவர்களும் ரகசிய கூட்டம் என்ற பெயரில் அவர்களை உசுப்பிவிடுவார்கள்
வீடு வீடாக சென்று அவர்கள் வாக்காள முதியவர்களை தூக்கி வரும் அழகை காண்பதற்கு அவ்வளவு ஆனந்தமாக இருக்கும், எவ்வளவு கருணை, எவ்வளவு கவனிப்பு?
யாரும் கேட்காமல் அவர்களாக வந்து அப்படி உதவுவார்கள், வாகனம் முதல் எல்லாம் இலவசம்
நீட்டுக்கு செல்லும் மாணவர்களுக்கு எந்த கட்சியும் அதன் தொண்டனும் தேர்தல் கால அவசரத்தில் உதவவே இல்லை. எல்லாம் கண்துடைப்பு
ஆனால் மக்கள் முந்திகொண்டு உதவி ஜனநாயகத்தை காத்துகொண்டிருக்கின்றார்கள்.
வாழ்க மக்கள் நாயகம்
இந்த நீட் தேர்வு மையங்களில் ஏகபட்ட சோதனை அலப்பறைகள், ஹிட்லர் காலத்தில் வதை முகாமுக்கு கொண்டு செல்லபடும் யூதர்களை சோதனை செய்வது போல் கடும் சொதனை
பூனூல் முதல் தலையில் இருக்கும் பூ வரை பிடுங்குகின்றார்களாம், ரத்தம் கசிந்தாலும் கண்டுகொள்ளவில்லையாம்
எதற்கு இதெல்லாம்?
இன்று விஞ்ஞானம் உச்சத்தில் இருக்கும் காலம். சில கருவிகளை பொருத்தினால் எந்த எலக்ட்ரானிஸ் சிக்னலும் வேலை செய்யாத அளவு தடுத்துவிடலாம்
எவ்வளவோ விஞ்ஞான வளர்ச்சிகள் உள்ள காலத்தில், கிரிக்கெட் வீரர் நடு மைதானத்தில் சிறிய தாளை எடுத்தாலே கண்டுபிடிக்க கூடிய காலங்களில் இன்னும் ஹிட்லர் காலத்து கெடுபிடிகள் ஏன்?
உளவுதுறையும், பாதுகாப்பு துறையும் பயன்படுத்தும் சமாச்சாரங்கள் ஏராளம். அதில் ஒன்றை பயன்படுத்தினாலே போதும் , சத்தமின்றி கண்காணிக்கலாம் முறைகேடுகளை தடுக்கலாம்
விஞ்ஞான வசதிகளை நீட் தேர்வு வளாகத்தில் பயன்படுத்தினால் என்ன? இந்த நெருக்கடிகள் குறையும்
அவர்களே மிகுந்த பதற்றத்துடன் எழுத வரும் மாணவர்கள். அவர்களை ஊர் ஊராக அலைகழித்து அதன் பின்னும் இப்படியான கெடுபிடிகள் மனதளவில் அவர்களை பாதிக்கும்
பின் எப்படி தேர்வு எழுதுவார்கள்?
வருங்காலங்களிலாவது இதனை தவிர்க்கட்டும், உலகெல்லாம் சுற்றும் மோடி இனியாவது நல்ல நாட்டில் தேர்வு அறை வரை சென்றுவிட்டு வரட்டும்