நீட் தேர்வு போல சட்டப்படிப்புக்கும் தேர்வு வேண்டும்
நீட் தேர்வு தமிழக மாணவர்கள் மருத்துவராவதை அழித்துவிடும், இது சமூக நீதிக்கு எதிரானது என்றெல்லாம் கடந்த ஆண்டு கட்சிகள் கடுமையாக குதித்தன
ஆனால் கொஞ்சமும் தயக்கமின்றி மாணவ சமூகம் அந்த தேர்வுக்கு அலைமோதியிருக்கின்றது, நாங்கள் எழுதுவோம் தகுதி இருந்தால் கிடைக்கட்டும் உங்களுக்கென்ன என அவர்கள் குவிந்திருக்கின்றார்கள்
இந்த தேர்வில் வென்றால் குறைந்த செலவில் மருத்துவராகலாம் என்பது அவர்களின் ஆர்வத்திற்கு இன்னொரு காரணம்
நீட் விவகாரத்தில் தமிழக கட்சிகளின் முகமூடி கிழிந்துவிட்டது, அவர்களை சட்டை செய்ய மாணவர் சமூகம் தயாரில்லை
இது வேகமான உலகம், ஆளாளுக்கு ஓடிகொண்டிருக்கின்றார்கள். எங்கே வாய்பிருக்கின்றதோ அதை ஓங்கி தட்ட முண்டியடிக்கின்றார்கள் . இதோ தட்டிவிட்டார்கள்
தமிழகம் நீட் எழுதிய மாணவர் வரிசையில் 4ம் இடத்தில் இருகின்றது
எப்படி ஆயினும் மாணவர்கள் நீட்டை ஏற்க தயாராகிவிட்டதும், மருத்துவ கல்லூரிகளுக்கு கடிவாளம் இடபட்டுவிட்டதும் தெரிகின்றது
இந்நிலை பொறியியல் கல்லூரிக்கும் வரட்டும், தரம் இழந்திருக்கும் அந்த படிப்பும் தரம்பெறட்டும். சுயநல கல்லூரிகளின் அட்டகாசம் ஒழியட்டும்
இதே நிலை இன்னொரு படிப்பிற்கும் வரவேண்டும் என்றால் அது சட்டபடிப்பு
மருத்துவம், பொறியியல் போலவே வழக்கறிஞர் தரமும் இங்கே சொல்லும்படி இல்லை
ஏகபட்ட மருத்துவர்கள் இருக்கும் நாட்டில் ஜெயலலிதாவிற்கு லண்டன் மருத்துவரே வந்தார், இன்னும் பலருக்கு வெளிநாட்டு மருத்துவரே வருகின்றார்கள்
பல கட்டங்கள் கட்ட வெளிநாட்டு பொறியலாளர்கள் வருகின்றார்கள், மெக்கானிக்கல் , கணிணி என எல்லா துறையிலும் நிலை இதுதான்
சட்டபடிப்பு கேட்கவே வேண்டாம், காவேரிக்கு கூட வழக்காட தமிழகத்தில் நல்ல வழககறிஞர் இல்லை. இந்த எம்.எல்.ஏ தகுதி நீக்க வழக்கில் கூட வாதாட நல்ல வக்கீல் இல்லை
இந்தியா இன்னும் பிரிட்டன் அடிமையாக நீடித்தால் இந்நேரம் லண்டனில் இருந்துதான் வக்கீல்களும் வந்திருப்பார்கள்
உண்மை இதுதான்
பல விஷயங்களில் சமரசம் செய்கின்றோம் என கல்வியின் தரத்தை இழந்து நிற்கின்றோம்
திறமை இருப்பவனுக்கு வடிகட்டி வாய்ப்பு கொடுப்போம், திறமை இருப்பவனை ஒரு நாளும் இத்தேசம் கைவிடாது
அம்பேத்கரும், கலாமும் இன்னும் பலரும் அதற்கு பெரும் உதாரணங்கள்
அரசியலில் சினிமா புகுந்தது போலவே இங்கு நடந்த பெரும் சீரழிவு கல்வியில் அரசியல் புகுந்தது
இரண்டும் இப்பொழுது களையெடுக்கபடுகின்றது, இன்னும் சுத்தமாக அகற்றபடட்டும்