இன்று என்.டி ராமராவின் பிறந்த நாள். அவரின் அரசியல் வேறுவகை
இந்த ராமசந்திரன் எனும் நடிகர் தமிழகத்தை கெடுத்தார், அவரை பார்த்து ஆந்திரமும் கெட்டது
அந்த ராமராவ் என்வரின் ஒரே பலம் கண்ணன் வேடம். அந்த வேடம் மட்டும் போட்டுவிட்டால் சாட்சாத் கண்ணணாகவே கண்முன் நிற்பார். ஆந்திரம் அவரிடம் அப்படித்தான் மயங்கியது
அப்படியே ஆட்சியினையும் பிடித்தார், தெற்கே ஆட்சியினை பிடித்த இரண்டாம் நடிகர் அவர்தான்
ஆனால் காங்கிரசுக்கும் அவருக்கும் பெரும் போட்டி ஆயிற்று எனினும் மும்முறை அவரே முதல்வரானார். அவரை எப்படி வீழ்த்த என பல முயற்சிகள் நடந்தன
அசுரபலத்தோடு அவர் இருந்தபொழுதுதான் அவர் கட்சிக்குள் சிக்கல்வந்தது
குறிப்பாக அவரின் கடைசி மனைவி சிவபார்வதி எனும் தெலுங்கு தியாக தலைவி இனி நானே அவரின் வாரிசு என களமிரங்கினார்
ஆனால் தெலுங்கரின் நல்ல நேரம் சந்திரபாபு நாயுடு கட்சியினை கைபற்றினார், அத்தோடு தெலுங்கில் நடிகரும் அவரின் மனைவியும் ஆட்சிக்குவரும் விஷயம் முடிந்தது
ராமராவின் வாரிசுகள் கூட அரசியல்பக்கம் வரமுடியாதபடி சூழல் உருவாயிற்று
ராமராவின் வோட்டுவங்கியினை அப்படியே சந்திரபாபு நாயுடு தொடர, டெல்லிக்கு சதிதிட்டம் உருவாகி ஆந்திராவினை இரண்டாக உடைத்தார்கள்
இன்று ஆந்திரா தலைநகர் கூட இன்றி தத்தளிக்கின்றது, டெல்லி ஒருமாதிரி கையாள்கின்றது
டெல்லியினை எதிர்த்தால் என்னாகும் என்பதற்கும், தேசிய கட்சிகளை விரட்டினால் எப்படி பழிவாங்குவார்கள் என்பதற்கும் ஆந்திரா முழு எடுத்துகாட்டு
ராமராவால் ஏற்பட்ட புரட்சியின் விளைவு இப்படித்தான் முடிந்தது
ஆந்திரமாவது ராமராவோடு திருந்திற்று, ஆனால் தமிழகம் ராமசந்திரனை கொண்டாடி, அவருக்கு பின் ஜெயலலிதாவினை கொண்டாடி, இப்பொழுது தினகரன் என்றெல்லாம் நிலை வந்து நிற்கின்றது
இந்தியாவில் சினிமாவால் சீரழிந்த மாநிலங்களில் ஆந்திராவும், தமிழகமும் முக்கியமானவை
இதில் ஆந்திரம் திருந்திவிட்டது, தமிழகம் திருந்தியதா இல்லையா என்பது இனிதான் தெரியும்
ஆக ராமசந்திரன் என்பவர் இங்கும் கெடுத்து, அங்கும் கெடுத்து பல அழிவுகளை ஏற்படுத்தியவர் என்பது மட்டும் உண்மை
அங்காவது சந்திரபாபு நாய்டு கிடைத்தார், பாவபட்ட தமிழர்களுக்கு இந்த பழனிச்சாமிதான் கிடைத்திருக்கின்றார், அதிலும் துரதிருஷ்டம்
இன்று அந்த ராமராவின் பிறந்த நாள். அவரின் அரசியல் வேறுவகை
ஆனால் பகவான் கண்ணணை கண்முன் கொண்டுவந்த அற்புத நடிகர் அவர். அந்த அருள்தான் அவரை உச்சத்தில் நிறுத்தியதோ என்னமோ?