காவிரி பிரச்சினையில் சாதித்தது தி.மு.க.வா? அல்லது அ.தி.மு.க.வா?

காவிரி பிரச்சினையில் சாதித்தது தி.மு.க.வா? அல்லது அ.தி.மு.க.வா? என்று ஒரே மேடையில் விவாதிக்க தயாரா : துரைமுருகன் சவால்

உண்மையில் காவேரியில் சாதித்தது கன்னடம், கிட்டதட்ட 400 டிஎம்சி தமிழக நீரை 160 டிஎம்சியாக தந்திரமாக சுருக்கி அதையும் தராமல் இழுத்தடித்து மகத்தான வெற்றியினை பெற்றிருக்கின்றது

இதில் தமிழகத்தின் அதிமுக, திமுக இரண்டிற்குமே தோல்விதான், படு தோல்வி

இவர்களால் கன்னடன் அளவிற்கு டெல்லியில் லாபி செய்ய முடியவுமில்லை, அந்த தோல்வியினை தமிழகத்தில் ஒப்புகொள்ள தைரியமுமில்லை.

உண்மையில் காவேரியில் அதிமுக திமுக என்ன கிழித்தது என்றால் மழை வந்தால் காவேரியில் நீர்வரும், அந்த அளவுதான் கிழித்திருக்கின்றது

எப்படிபட்ட சாதனை?

மழைவந்தால் காவேரியில் வெள்ளம் வருவதா இவர்கள் சாதனை?

இதுபற்றி ஏதும் பேசவந்தால் துரைமுருகன் கறைமுருகனாக திரும்புவார்