அரவிந்த கோஷ் பிறந்த நாள்

Image may contain: 1 person, indoor

அவர் பெயர் அரவிந்த கோஷ், வங்காளாத்துக்காரர். முதலில் நல்ல படிப்பாளி லண்டன் எல்லாம் சென்று படித்தார்

பின் சுதந்திர போராட்டத்தில் குதித்தார், வங்க பிரிவினை காலங்கள் அவரின் போராட்டத்திற்கு அணல் சேர்த்தன, ஆனால் வெள்ளையரின் கடும் கட்டுபாடுகள் அவருக்கு தடையிட்டன‌

ஒரு வழக்கில் சிக்கி சிறையில் இருந்தபொழுதான் ஆன்மீகபக்கம் திரும்பினார், ஆன்மீகவாதி ஆனார்

வங்கத்தில் அவருக்கு கட்டுபாடுகள் அதிகம் என்பதால் அருகிருந்த சந்திரநாகூருக்கு தப்பினார், அது பிரென்ஞ் பகுதி

அங்கு தங்கி இருந்தபொழுதுதான் ஆன்மீகத்தை முழுக்க தழுவி தன் பாதையினையே மாற்றிகொண்டார், அவர் மனம் பாண்டிச்சேரிக்கு செல்ல சொன்னது

வெள்ளையர் தலையீடு இல்லா வாழ்வு அவருக்கு ஆன்மீகத்தை அதிகம் தேட வைத்தது, சுதந்திர போராட்டத்தில் இருந்து விலகி முழுக்க ஆன்மீகவாதி ஆனார்

இதுவும் பிரெஞ்ச் பகுதி என்பதால் தயக்கமின்றி வந்தார், இங்கேயே ஆசிரமம் அமைத்து தங்கினார்

அது பின்னாளில் பெரும் ஆன்மீக மையம் ஆகி இன்று ஆரோவில் என பெரும் அடையாளமாய் புதுச்சேரியில் நிற்கின்றது

இந்திய சனாதனவாதிகளில் குறிப்பிடதக்கவர் அரவிந்தர்

மிகபெரும் போராட்டவாதியாய் இருந்தவர் ஒரு கட்டத்தில் ஆன்மீகவாதியாகி பெரும் அடையாளமாய் நிலைத்துவிட்டார்

இறைவன் ஒருவனை ஆட்கொள்ள நினைத்தால் அவனை விடவே மாட்டான் என்பது அரவிந்தர் விஷயத்தில் உண்மையாயிற்று

உலகெல்லாம் பெரும் சீடர்களை கொண்ட பெரும் மகானாக அவர் போற்றபடுகின்றார்

பிளாஞ்சி ராக்சேல் மிர்ரா எனும் ஐரோப்பிய பெண்மணி ஆன்மீக தேடலால் இந்தியா வந்து அரவிந்தரே தன் ஞான குரு என அடைக்கலமாகி ஸ்ரீ அன்னை எனுன் உயரிய இடத்தை அடைந்தார்

இன்றும் அவர் மாபெரும் அற்புதங்களை நிகழ்த்துகின்றார் என அவரின் பக்தர்கள் நம்புகின்றார்கள், அதில் பெரும்பாலானோர் பிரான்ஸ் உட்பட்ட ஐரோப்பியர் என்பதுதான் ஆச்சரியம்

நல்ல இந்து ஆன்மீகவாதி எப்படி இருக்கவேண்டும் என்ற மிக சிலரில் அரவிந்தருக்கு எந்நாளும் முதலிடம் உண்டு

அரவிந்தரும் ஸ்ரீ அன்னையும் கொடுத்த உயர்ந்த தத்துவங்கள் இந்நாட்டின் சதானத தர்மத்தின் மிக உயர்ந்த ஞான அடையாளங்கள்

இன்று அவருக்கு பிறந்த நாள்

அந்த மகானுக்கு அஞ்சலி அவரின் சீடர்களுக்கு அரவிந்தர் ஜெயந்தி வாழ்த்துக்கள்