இன்று டயானாவின் நினைவுநாள்
கடந்த நூற்றாண்டில் அரசியல், பொதுசேவை, விஞ்ஞானம், ஊழல்,கொலை,கொள்ளை என பல துறைகளில் முத்திரை பதித்த பெண்கள் உண்டு, அதில் தன் வசீகரத்தாலும், எளிமையாலும், சேவையாலும் உலகை வென்றெடுத்த பெண்களில் முதன்மையாவர் டயானா
ஒரு விசித்திரமான பெண்மணி அவர், அதனை விட மகா விசித்திரமானது அவர் வாழ்வு
எந்த பெருமைக்கும், புகழுக்கும், பதவிக்கும் ஆசைபட்டு தன் சுதந்திரத்தை தொலைக்காமல் , தான் விரும்பிய வாழ்வினை வாழ்ந்தவர் அவர், அவரின் பலமும் அது, பல்வீனமும் அதுவே
சிறுவயதில் பள்ளிக்கு செல்லவில்லை, ஆசிரியர்தான் வீட்டுக்கு வந்தார், பள்ளியினை அவர் பாத்ததே 10 வயதில்தான். மிக சுதந்திரமாக வளர்ந்தார், எங்கோ இல்லத்தரசியாக, உலகின் மிக மகிழ்வான பெண்ணாக வாழ்ந்துகொண்டிருக்க வேண்டிய அவருக்கு விதி யார் உருவில் வந்ததென்றால் உடன் பிறந்த அக்கா உருவில்
ஆம், அந்த ஜெகதலபிரதாபன் சார்ள்ஸ்க்கு கிழவிகள் முதல் குமரிகள் வரை தோழிகள் உண்டு, அதில் ஒருவர் டயானாவின் சகோதரி சாராவும் ஒருவர், சாராவோடு அவர் பழகிய நாட்களில் அவர் கண்ணில் பட்டவர்தான் டயானா
வசந்த மாளிகை சிவாஜிகணேசன் போல இருந்த சார்லஸ், டயானாவினை கண்டதும் மணம் முடிக்க துடித்தார், பிரிட்டனின் இளவரசர் ஆசைபட்டு நடக்காதது உண்டா?, மறுத்தாலும் பிடித்து வைத்து மோதிரம் மாட்டுவார்கள்,
உலகே அதிசயிக்கும் அந்த திருமணம் நடந்தது, தமிழகத்து வளர்ப்புமகன் திருமணம் எல்லாம் அதன் முன் கண் திருஷ்டி கழிக்க கூட வழியில்லாதது என்றால் அதன் பிரமாண்டத்தை நீங்களே முடிவு செய்யுங்கள்
அரச குடும்பம் என்பது சாதாரணம் அல்ல, சில லட்சங்களை கண்ட புது பணக்காரர்களே “நாங்கள் யார் தெரியுமா? என் குடும்ப கவுரவம் என்ன தெரியுமா?” என ஒரு கெத்து காட்டும் உலகில், உலகாண்ட வம்சம் எப்படி இருக்கும்?
பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்த் ஆகிய நாடுகளுக்கும் இன்றும் அவரே ராணி , இப்படி இருக்கும் குடும்பம் எப்படிபட்ட கவுரவத்தில் இருக்கும்? அதில் ஆச்சரியமென்ன?
அதன் கட்டுபாடுகள் அப்படி பல் துலக்குவது முதல் இரவு தூங்க செல்லும் வரை அவர்கள் கவுரவம் தெரியும், எல்லாவற்றிற்கும் வேலைக்காரர்கள், எல்லாவற்றிலும் ஒரு பெருமை , கெத்து இன்னபிற
அரச குடும்பத்தவர் தனித்து தெரியவேண்டும், உத்தரவு மட்டுமே போடவேண்டும் என்ற ஒருவகை பயிற்சி அது, அவர்களின் பெருமை அது
டயானா இதில்தான் மாறுபட்டார், அவரின் சுதந்திரம் அவருக்கு முக்கியம், அந்த அரச குடும்பத்து பெண்கள் குழந்தைகளை கூட கொஞ்சமாட்டார்கள், பள்ளிக்கு அழைத்து செல்வது பாடம் கற்பிப்பது எல்லாம் வேலைக்காரர்கள்
டயானா இதனை உடைத்தார், அவரே வேலைக்காரரோடு சமைத்தார், அவர் குழந்தைகளை அவரே சாதரண பெண் போல பள்ளிக்கு அழைத்து சென்றார்
பிளாட்பார கடையில் கம்மல் பொறுக்கினார், சந்தித்த மக்களையெல்லாம் ராஜிவ் காந்தி ஸ்டைலில் தொட்டு பேசினார், மிக எளிமையான இளவரசியானார்
அரச குடும்பத்தின் கவுரவம் அவரால் குலைவதாக சொன்னார்கள், அவர் கண்டுகொள்ளவே இல்லை, நீ வருங்கால அரசி என சொல்லிபார்த்தார்கள், என் சுதந்திரத்தை கட்டுபடுத்தும் அந்த அரசி பதவியே வேண்டாம் என எகிறினார் டயானா
அவர் அழகி, அதுவும் வசீகரிக்கும் அழகி. ஆனால் மனதால் மிக எளிமையானவர், அந்த எளிமை எல்லா நாட்டு மக்களையும் அவர்பால் இழுத்தது, உலகெல்லாம் பிரபலமானார் டயானா
இரு குழந்தைகள் பிறந்த நிலையில் இளவரசரின் சார்லஸ் மறுபடியும் முருங்கை மரம் ஏறினார், டயானா தன் குடும்ப கவுரவத்தை காப்பாற்றவில்லை என அவரே நொந்தார், பழைய பெண் தோழிகள் நட்பை தேடினார், அவரின் இயல்பும் அது
பெண் தோழிகள் மூலம் தன் குடும்ப கவுரவத்தை காக்கும் வழியில் இறங்கினார் சார்லஸ்
டயானா அரச மரபுகளை உடைத்தார், தன் திருமணம் தோல்வியுற்ற நிலையில் பொதுவாழ்விற்குத்தான் திரும்பினார், எல்லா பொதுசேவைகளுக்கும் அள்ளி கொடுத்தார், உதவினார்
கல்கத்தா மக்களுக்கும் அவர் உதவியது கொஞ்சமல்ல
திருமணம் முடியும் பொழுது அவருக்கு 20 வயது, அதன் பின் அரண்மனை வாழ்க்கை, கொஞ்சம் வெளிவந்து தனக்கான வாழ்வினை தேடினார்
அந்த பரிதாபத்திற்குரிய அழகி தேடியது என்ன? அவரே சொன்னது போல, “என்னை மதித்து என்னை முழுமையாக நேசிக்கும் ஒருவர், ஒரு தூய்மையான அன்பு, அது ஒன்றுதான்”
என்னதான் இளவரசி என்றாலும் அவரின் பெண்மனம் சாதாரண பெண்ணின் மனம் போலவே ஏங்கியிருக்கின்றது
குதிரை பயிற்சியாளர், பாகிஸ்தான் டாக்டர் என பலரோடு கிசுகிசுக்கபட்டார், அதில் சில உண்மையும் பல பொய்களும் கலந்திருந்தது, அவர் போலி கவுரவத்தோடு வாழும் அன்பில்லா அரண்மனை வாழ்க்கையினை விட, தூய்மையான அன்போடு வாழும் எளிய வாழ்க்கைக்கே ஆசைபட்டார்
ஒரு கட்டத்தில் விவாகரத்து வரை சென்றது, டயானாவின் பாட்டியும் முன்பு பிரிட்டன் அரண்மனையில் வேலை செய்தவர், ராணி விசுவாசமிக்க கட்டப்பா வகை, அந்த விசுவாச புராணம் எல்லாம் பாடி பார்த்தார்கள்
என் சுதந்திரத்தை விட, என் உணர்வுகளை விட இந்த அரண்மனையில் நான் அடிமைபட்டு கிடக்கவேண்டுமா? முடியாது என சொல்லிவிட்டு விவாகரத்து செய்தார் டயானா
பெரும் கோடீஸ்வரர்கள் முதல் அரைகுறை ஆங்கிலம் பேச தெரிந்த அனைவரும் அவருக்கு விண்ணப்பம் எழுதினர், அவரை மணம் செய்துகொள்ள அத்தனை பேர் துடித்தனர்
டயானா எனும் பெண் அன்று உலகில் கொண்டாடபட்ட விதம் அப்படி
இந்நிலையில் எகிப்து கோடீஸ்வரர் அல்பயது எனும் இஸ்லாமியருடன் அவருக்கு நட்பு ஏற்பட்டது, அவரும் மனைவி இல்லா வகைதான், இருவரும் மணம் செய்ய முடிவெடுத்தார்கள்
இந்நிலையில்தான் பாரீஸ் கார்விபத்தில் டயானா கொல்லபட்டார், நெடுநாள் மர்மத்திற்கு பின் பிரிட்டன் உளவுதுறை அதிகாரி மரண படுக்கையில் நான் தான் கொன்றேன், இது அரச கட்டளை என்றார், அன்னார் இன்னும் சாகவில்லை, விரைவில் அவர் சாகடிக்கபடலாம்
ஆக வேல்ஸ் இளவரசி ஒருவர் அரச குடும்பம் எனும் இரும்பு கோட்டையில் சிக்கி, அதனை மீற முயன்ற பாவத்திற்காக கவுரவ கொலை செய்யபட்டிருப்பது உறுதியாகின்றது
சந்தேகம் இல்லை, அது கவுரவ கொலை.
எப்படியோ 36 வயதுவரையே வாழ்ந்த அந்த டயானா, உலகில் எல்லோர் மனதிலும் இடம்பிடித்தார், அவரின் வசீகர அழகு முகம் அப்படி
இனம்,மொழி,மதம் கடந்து எல்லோரும் அவரை ரசித்தனர், நேசித்தனர், அவர் மின்னும் முகமும், அந்த சிரிப்பும், சிகை அலங்காரமும், அவர் அணிந்த உடைகளும் அவரை அப்படியே தேவதையாக்கின
ஒருவேளை சார்லஸை அனுசரித்து சென்றால் இங்கிலாந்து அரசியாகியிருக்கும் வாய்ப்பு உண்டா என்றால் சொல்ல தெரியாது, காரணம் இங்கிலாந்து எலிசபெத் ராணி வலுத்த கட்டை, கிட்டதட்ட நம் கலைஞர் வகையறா
அதனால் டயானா இன்று இருந்திருந்தால் செயல் ராணி எனும் அளவிற்கு வந்திருக்கலாம்
டயானாவின் ஜாதகம் உலகாளும் யோகம் கொண்டதுதான், ராகுவோ, சனியோ அவரின் தன்மானத்தை உயர்த்தி பிடித்ததில் அவர் சில வாய்ப்புகளை தவறவிட்டார்
மற்றபடி சுக்கிரன், சந்திரன்,குரு எல்லாமே உச்சம்.
பிரிட்டன் ராணியின் இடம் அவருக்கானது தவற விட்டார், விவாகரத்து ஆனபின் அமெரிக்க முதன்மை பெண்மணியாகும் வாய்ப்பும் இருந்தது அதனையும் தவறவிட்டார்
எப்படி?
இந்நாளைய அமெரிக்க அதிபர் டிரம்ப் நம்ம ஊர் ஜெமினி கணேசன், சிம்பு, பிரபுதேவா வகை. 1996ல் டயானா விவாகரத்தாகும் பொழுது பெரும் அமெரிக்க செல்வந்தரான டிரம்ப் தன் முழு பயோடேட்டா + சொத்து கணக்கு பட்டியலோடு தன் விண்ணப்பத்தை சமர்பித்தார்
ஆனால் தந்திரமாக அவர் மறைத்த மனைவியர் மற்றும் தோழிகள் கணக்கு டயானாவிற்கு தெரிந்தது, அது உலகிற்கே அன்று தெரிந்த விஷயம் தான்
இவர் விளையாட்டு பிள்ளை என்பதை உணர்ந்த டயானா, “இவர்க்கு சார்லசே பரவாயில்லை, இவருக்கு ஓகே சொன்னால் விவகாரத்தானதற்கு அர்த்தமே இல்லையே ” என சொல்லி நிராகரித்தார்
டயானா இறந்த அன்று டிரம்ப் அழுததாக கூட சொன்னார்கள், இன்றும் டிரம்ப் அதிகாரத்திற்கு வந்தபின்புதான் டயானா மரண மர்ம முடிச்சு அவிழ்க்கபட்டிருப்பதும் குறிப்பிட தக்கது
இரு பெரும் உச்ச பதவிகளை தன் எளிமையான வாழ்விற்காக தவறவிட்ட டயானா உண்மையிலே அதிசய பெண்மணிதான்
கடந்த நூற்றாண்டு கண்ட அற்புதமான அழகான பெண்மணிகளில் நிச்சயம் டயானாவிற்கு இடம் உண்டு, அந்த இடம் என்றும் அழியா இடம்
இன்று டயானாவின் நினைவுநாள், உலகெல்லாம் நேசிக்கபட்ட அந்த பரிதாபத்திற்குரிய அழகு பெண்ணை உலகம் நினைத்துகொள்கின்றது.
துணிவிற்கும், எளிமைக்கும், அழகிற்கும் பெயர் பெற்று விளங்கிய டயானாவினை போல் இன்னொருவர் உண்டென்றால் அது நிச்சயம் குஷ்பூதான்
டயானா பிரிட்டனின் குஷ்பூ, குஷ்பூ இந்தியாவின் டயானா இப்படித்தான் உலக வரலாறு குறித்திருக்கின்றது