மாவீரன் புலித்தேவனுக்கு வீரவணக்கம் செலுத்துவதில் தேசம் பெருமை அடைகின்றது

Image may contain: outdoor

முன்பே பல இடங்களில் பார்த்திருக்கின்றோம், அலாவுதின் கில்ஜியின் படைகள் மதுரையினை தாக்கும் வரை சிக்கல் இல்லை

இங்கே பாண்டிய மன்னரின் வாரிசு சண்டை அவனுக்கு வாய்ப்பாகவும் இருந்தது

இஸ்லாமிய படையெடுப்பினை தடுக்க நாயக்கர்கள் மதுரை வந்தனர், இத்தோடு பாண்டிய வம்சம் மதுரையில் இருந்து அகற்றபட்டது

ஆனால் பாண்டியர்கள் முழுவதும் ஒழியவில்லை, தென்காசி , செவல், வள்ளியூர் போன்ற பகுதிகளில் சிற்றரசர்களாக நீடித்தனர்

அவர்கள் நாயக்க மன்னர்களோடு உறவு கொண்டாலும் தனி அரசர்களாகவே நீடித்தனர்

மதுரையினை ஆண்ட வெள்ளையர்கள் 72 பாளையாமாக தமிழகத்தை பிரித்து ஆண்டனர், அதில் இந்த சிற்றரசுகள் எல்லாம் வராது

இப்படியாக சென்றுகொண்டிருந்த காலத்தில் நாயக்க அரசில் உட்கட்சி தகறாது வந்தது, தஞ்சை நாயக்கருக்கும் மதுரை நாயக்கருக்கும் மோத தஞ்சையருக்கு மராட்டியன் உதவிக்கு வந்து சர்போஜி மன்னன் வம்சம் நீடித்தது

இக்காலத்தில்தான் அவுரங்கசீப் இஸ்லாமிய சாம்ராஜ்யத்தை தென்னகம் வரை நீட்டித்தான், ஆற்காடு நவாவ் உருவானது இக்காலத்தில்தான்

ஆற்காடு நவாபிற்கு மதுரையின் 72 பாளையங்களும் கட்டுபட்டன, சிற்றரசுகளும் கப்பம் கொடுத்தன‌

ஆற்காடு நவாப் குடும்ப வாரிசு சண்டையில்தான் பிரெஞ்ச் மற்றும் பிரிட்டன் வியாபாரிகள் உள்ளே வந்தனர்

கிளைவ் என்பவனின் வீரதீர செயலில் ஆற்காடு அரசின் கட்டுபாடு பிரிட்டானியர் வசம் சென்றது, கிளைவ் பெரும்படை திரட்டி இருந்தான் அவனின் தளபதிதான் மருதநாயகம்

ஆற்காடு நவாபிடம் பெரும் பங்கு போருக்காக வெள்ளையன் கோரியபொழுது தனக்கு அடங்கா அரசுகள் அல்லது அடங்க மறுத்தவர்களை கைகாட்டிவிட்டான் நவாப்

வசூல் வேட்டையில் இருந்த வெள்ளையர் குறிப்பிட்ட கப்பமோ இல்லை அதற்கு மேலோ கேட்டு சிற்றரசர்களை கட்டாயபடுத்தினர்

அப்படி வெள்ளையனால் மிரட்டபட்டவர்தான் புலித்தேவன்

வாசுதேவநல்லூர் அவனின் கோட்டை, நெல்கட்டும் ஜமீன் பாண்டிய அரசின் எச்சம்

ஆற்காடு நவாபிற்கு தலைவலியான பூலிதேவன் வெள்ளையனுக்கும் சவால் விட்டான்

சில போர்களில் அவர்களை விரட்டியும் விட்டான், ஆனால் மருதநாயகத்தின் அபாரமான ஆட்டம் முன்னாலும் வெள்ளையரின் நவீன ஆயுத பலத்தாலும் அவனால் நிற்க முடியவில்ல்லை

கைது செய்யபட்டான்

அவனை தூக்கிலிடும் முடிவில் மருதநாயகம் இழுத்து வர, ஒரு ஆலயத்தின் உள்ளே சென்று வணங்க உத்தரவு கேட்ட பூலித்தேவன் அப்படியே மாயமானான்

உள்ளிருந்த சுரங்கம் வழியே தப்பினான் இல்லை வெறு வழியில் தப்பினான் என ஏக தகவல்கள்

ஆனால் அவன் வெள்ளையர் கையால் கொல்லபடவில்லை என்பது உண்மை

அவன் மீண்டு வந்து கோட்டையினை ஆள கூடாது என்பதற்காக அவன் கோட்டையினை அழித்தான் மருதநாயகம்

ஒரு விஷயம் சொல்ல வேண்டும்

முதன் முதலில் வெள்ளையனை எதிர்த்தவன் அவனே, அவனுக்கு பின் நெடுங்காலம் கழித்தே கட்டபொம்மன் எதிர்த்த்தான்

சுதந்திர போரினை இத்தேசத்தில் தொடங்கிய முதல் வீரன் புலித்தேவன் என்பதில் சந்தேகமில்லை

மிக வீரமான போரினை நடத்தினான் புலித்தேவன், வெள்ளையர் திகைத்தனர், கிளைவ் வங்கபக்கம் இருந்ததால் வரமுடியவில்லை

மருதநாயகமே அவனை வென்றான், அதனால்தான் சாகிப் என்றிருந்த அவன் பெயர் தலைவன் சாகிப் என கான் சாகிப் ஆனது

வாசுதேவநல்லூர் அவனின் கோட்டை, நெல்கட்டும் ஜமீன் பாண்டிய அரசின் எச்சம்

ஆற்காடு நவாபிற்கு தலைவலியான பூலிதேவன் வெள்ளையனுக்கும் சவால் விட்டான்

எளிதாக அடக்கிவிடலாம் என வந்த ஆங்கிலேய படையினை ஓட விரட்டினான் புலித்தேவன், உண்மையில் அவன் புலி என கண்டுகொண்டனர் வெள்ளையர்

புலித்தேவன் அசரவில்லை களக்காடு கோட்டை, திருவில்லிபுத்தூர் கோட்டை என தொடர்ந்து பிடித்து அசத்தினான்,

வெள்ளையர் அவனை தொட முடியவில்லை பின் வாங்கினர்

இனி நெல்லையினை பிடித்து தன் அரசை விரிவுபடுத்தி வலுவானதாக ஆக்க திட்டமிட்டான் புலித்தேவன்

உண்மையில் அவன் பழைய பாண்டிய மன்னரின் சாம்ராயத்தை அமைக்க விரும்பினான், நெல்லையினை தொடர்ந்து மதுரையினை கைபற்றி தமிழ் மன்னனாக நிலைக்கும் திட்டம் அவனிடம் இருந்தது

அதற்கான தகுதியும் இருந்தது

ஆனால் மருதநாயகத்தின் அபார போர்முறை, வெள்ளை தளபதி ஹெரோன் என்பவரின் வஞ்சகம் எல்லாம் அவருக்கு எதிராக மாறிற்று

உண்மையில் நவாபின் சகோதரன் ஒருவனை யுத்த கைதியாக பிடித்தான் புலித்தேவன், அவன் உள்ளிருந்தே கருவருக்கும் வேலையினை செய்தான்

அவனை நம்பியதே புலித்தேவனின் வீழ்ச்சி, பல கோட்டைகளை வைத்திருந்த புலித்தேவன் ஒவ்வொன்றாக இழந்து, மருதநாயகத்தால் கைது செய்யபட்டான்

அவனை தூக்கிலிடும் முடிவில் மருதநாயகம் இழுத்து வர, ஒரு ஆலயத்தின் உள்ளே சென்று வணங்க உத்தரவு கேட்ட பூலித்தேவன் அப்படியே மாயமானான்

உள்ளிருந்த சுரங்கம் வழியே தப்பினான் இல்லை வெறு வழியில் தப்பினான் என ஏக தகவல்கள்

ஆனால் அவன் வெள்ளையர் கையால் கொல்லபடவில்லை என்பது உண்மை

அவன் மீண்டு வந்து கோட்டையினை ஆள கூடாது என்பதற்காக அவன் கோட்டையினை அழித்தான் மருதநாயகம்

ஒரு விஷயம் சொல்ல வேண்டும்

முதன் முதலில் வெள்ளையனை எதிர்த்தவன் அவனே, அவனுக்கு பின் நெடுங்காலம் கழித்தே கட்டபொம்மன் எதிர்த்த்தான்

சுதந்திர போரினை இத்தேசத்தில் தொடங்கிய முதல் வீரன் புலித்தேவன் என்பதில் சந்தேகமில்லை

மிக வீரமான போரினை நடத்தினான் புலித்தேவன், வெள்ளையர் திகைத்தனர், கிளைவ் வங்கபக்கம் இருந்ததால் வரமுடியவில்லை

மருதநாயகமே அவனை வென்றான், அதனால்தான் சாகிப் என்றிருந்த அவன் பெயர் தலைவன் சாகிப் என கான் சாகிப் ஆனது

புலிதேவனின் வீரப்போர் பின்னாளில் பெரும்போர் நிகழ்த்திய திப்பு சுல்தானுக்கு முன்னோடி போர், அவனின் வீரம் அத்தகையது வெற்றிபெற்றதும் அப்படியானது

இந்தியாவின் முதல் சுதந்திர போராட்ட வீரன் என வரலாறு அவனைத்தான் காட்டுகின்றது

பாஞ்சாலங்குறிச்சி கோட்டையினை விட வீரம் மிகுந்தது வாசுதேவநல்லுர் பூமி

அந்த மாவீரனின் பிறந்த நாள் இன்று, வரலாற்றில் வெள்ளையனை முதலில் எதிர்த்து சில வெற்றிகளையும் பெற்ற அந்தமாவீரனுக்கு வீரவணக்க்கம்

அவன் பாண்டிய வம்சத்தில் வந்தவன் அவனுக்கு கீழ் எல்லா சாதிகளும் ஒற்றுமையாக இருந்து வெள்ளையனை எதிர்த்திருக்கின்றன‌

ஒண்டிவீரன், வென்னிகாலடி போன்ற மாபெரும் வீரர்கள் இருந்திருக்கின்றார்கள் அவர்கள் தளபதிகள்

சாதி கொடுமை இருந்தது, ஒடுக்கபட்டோம் மிதிக்கபட்டோம் என்பதெல்லாம் சுத்த பொய் , புலித்தேவனின் ஆட்சியில் இந்த தாழ்த்தபட்டதாக சொல்லபடும் சாதியினர் தளபதிகளாகவே இருந்திருக்கின்றனர்

புரட்சி, வெங்காயம், தலித்தியம் இன்னபிற இம்சைகள் எல்லாம் அன்று இல்லை, இருந்திருந்தால் புலித்தேவனின் வீரகாவியம் இல்லை

அந்த நவாபின் சகோதரன் புலித்தேவனுடம் இருந்த காலங்களில் அவன் தொழுகை நடத்த தனி மசூதியே கட்டி கொடுத்திருக்கின்றான் புலித்தேவன், அவன் மனது அப்படி இருந்திருக்கின்றது, அவனின் இன்னொரு தளபதி கூட இஸ்லாமியரே

சாதிய ஒற்றுமைக்கும், மத ஒற்றுமைக்கும் நாட்டுபற்றுக்கும் புலித்தேவனின் வீர வாழ்வு பெரும் எடுத்துகாட்டு, அது இன்றைய தேவையும் கூட‌

அந்த மாவீரனுக்கு வீரவணக்கம் செலுத்துவதில் தேசம் பெருமை அடைகின்றது