ஈரான்பக்கம் பூர்வீகமாம்

இந்த பல்லவர்கள் எல்லாம் ஈரான்பக்கம் பூர்வீகமாம், அங்கிருந்து இந்து வந்து காஞ்சியில் ஆண்டிருக்கின்றார்கள், ஈரானை அடிக்க வேண்டும்டா

ஏண்ணே

அவனுக நம்மை எப்படி ஓரு காலத்தில் ஆளலாம், விட கூடாது

உங்களுக்கு கிறுக்காண்ணே, எப்பவோ நடந்தத பேசிட்டு..

உஸ்பெக்கிஸ்தான்ல இருந்து தைமூர்னு ஒருத்தன் வந்து இந்தியா பக்கம் கொள்ளையடிச்சிருக்கான் , அதனால உஸ்பெக்கிஸ்தான் காரன் எல்லாரையும் அடிக்கணும்டா

ஏண்ணே குடிச்சிருக்கியளா

இந்த ஆப்கானிஸ்தான்காரர்களை எல்லாம் ஒழிக்க வேண்டும்டா

ஏண்ணே?

ஒருகாலத்தில அவனுகதான் அங்க இருந்து வந்து நம்மை அடித்தார்கள்

அட அவனுகளே தரித்திரமாயிட்டான் பாவம்ணே

இந்த நாயக்கர்கள் எல்லாம் நம்மை ஆண்டார்கள், விட கூடாது

அண்ணே அவங்க இப்போ நம்ம கூட ஒண்ணு மண்ணா கலந்துட்டாங்க, இனி அத பேசி எதுக்குண்ணே, நம்மவங்கண்ணே

இந்த பிரிட்டிஷ்காரன் இருக்கானே அவன தூக்கிபோட்டு மிதிக்கணும்

அண்ணே அவனுகளே பிரெக்ஸிட்னு சொல்றான், பவுண்ட் சரியுதுங்குறான் , அவனால நமக்கு என்னண்ணே பிரச்சினை விடுங்கண்ணே

இந்த பிராமணன் இருக்கானே..

ஆமாண்ணே, அவன விடவே கூடாது, ஆரிய பயலுக எப்பவோ இங்க வந்து நம்ம எல்லோரையும் அடிமையாக்கி, நம்ம உரிமையினை பறிச்சி , விடவே கூடாதுண்ணே. ஆரிய பயங்கரவாதம் ஒழிக, ஆரிய கும்பலை வேரறுப்போம்

ஏண்டா

அது அப்படித்தாண்ணே…இல்லண்ணா எப்படி அரசியல் பண்றது, 80 வருஷமா இப்படியே பேசி பழகிட்டோம், வேற அரசியல் தெரியாதுண்ணே