முன்னோர்கள் உழைத்த மண்ணை மறப்பவன் சபிக்கபட்டவன்
தந்தையின் மறைவுக்கு பின் அவர் செய்த விவசாயத்தை தொடர்ந்து கொண்டிருக்கின்றேன்
சுத்தமான நஷ்ட தொழில், கருப்பு பணத்தை வெள்ளையாக கூட ஆக்கமுடியாத தொழில் அது. கருப்பு பணம் இருந்தால் அதை புதைக்க அருமையான தொழில் விவசாயம்
ஆனால் முன்னோர்கள் உழைத்த மண்ணை மறப்பவன் சபிக்கபட்டவன் என்ற பழமொழி மனதை உறுத்துவதால் அதை விட முடியவில்லை
விவசாயத்தில் இன்றைய ஒரே ஆறுதல் இலவச மின்சாரம், நிச்சயம் கலைஞரின் சாதனை அது, ஆறுதலும் அது
ஆனால் அந்த இலவச மின்சாரம் டாஸ்மாக் வருமானத்தில் கொடுக்கபடுகின்றது என்பதுதான் வேதனை
விவசாயியொ இல்லை அவனின் வேலைக்காரனோ அந்தி சாய்ந்தால் வருமானத்தின் ஒரு பகுதியினை டாஸ்மாக்கில் கொட்டிவிட்டே போகின்றான்
ஆக விவசாயத்திற்கான மின் கட்டனம் இப்படி மறைமுகமாக வசூலிக்கபடுகின்றது என்பதும் நிஜம்
டாஸ்மாக்கை மூடிவிட்டு இந்த இலவச மின்சாரம் கொடுக்கபடுமானால் அதுவே மிகபெரும் விஷயம்
வருங்காலத்தில் முக ஸ்டாலின் அதை செய்வார் என நம்புவதை தவிர வேறு ஆறுதல் இல்லை
என்னதான் சொல்லுங்கள், அது ஊழல் கட்சி கலைஞர் ஊழல்வாதி என ஆயிரம் சொல்லுங்கள் தமிழகத்தில் ஊழலுக்கு எதிராக வழக்காடும் ஒரே கட்சி திமுக
அது ஒன்றேதான் தமிழக அரசியல் வரலாற்றிலே ஊழலுக்கு எதிராக வழக்கு நடத்தி இருக்கின்றது வேறு எந்த கட்சியும் அல்ல
ஜெயாவிற்கு எதிராக அவர்கள்தான் நடத்தினார்கள் அதில் வெற்றியும் பெற்றார்கள்
சசிகலா உள்ளே இருக்க முழு காரணம் திமுகவின் போராட்டம்
இப்பொழுது பழனிச்சாமி கும்பலுக்கு எதிராகவும் திமுகவே வழக்கு தொடர்ந்து பெரும் ஊழலை வெளிகொணருகின்றது
ஜெயாவிற்கு எதிராக கம்பு சுற்றிய சுப்பிரமணி சாமி இந்த குட்கா வழக்கில் எல்லாம் ஓடிவிட்டார்
திமுக ஊழல் கட்சியாக இருந்தால் அது எப்படி ஊழலை எதிர்த்து போராடும்?
“திருடனை திருடன் எதிர்த்து நிற்கமாட்டான்” என்பது இயேசுவின் மொழி
ஆயிரம் சர்ச்சை இருந்தாலும் திமுகவின் இந்த போராட்டத்தை ஏற்றுகொண்டே தீரவேண்டும்.
போலிசாரை மிரட்டி ஆடியோ வெளியிட்ட ரவுடி நாகராஜ் என்பவரை கைது செய்து பெண்டை நிமிர்த்திகொண்டிருகின்றார்கள்
ஆனால் அங்கிள் சைமனார் என்பவர் மைக் கிடைத்துவிட்டால் ஏதோ கிழிப்பேன், அழிப்பேன் என பல பகிரங்க மிரட்டல்களை வீடியோவாகவே வெளியிட்டுகொண்டிருக்கின்றார்
தொலைச்சி புடுவேன், கொன்றே புடுவேன், ஒரு பயலையும் விடமாட்டேன் என ஏக அழிச்சாட்டியம்
பல காமெடி வீடியோ என்றாலும், சில கடும் விஷம் வாய்ந்த வீடியோ
ஆனால் அங்கிள் சைமனாரை காவல்துறை தொடுவதே இல்லை, ஆனால் நாகராஜை மட்டும் லபக்கென்று பிடித்துவிடுகின்றார்கள்
ஆக அங்கிள் சைமன் வெறும் டம்மி என்று காவல்துறைக்கே தெரிந்துவிட்டதோ என்னமோ
அங்கிள் சைமன் மானமுள்ளவர் என்றால் நாகராஜை கூட கைது செய்த காவல்துறை நம்மை விட்டுவிட்டார்களே என்ற அவமானத்தில் இனி வாயினை திறக்கமாட்டார்
12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் அபூர்வ நீல குறிஞ்சி பூ பூத்தது : செய்தி
பல்லாயிரம் ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் மிக அபூர்வ பூவான குஷ்புவினை விடவா இது அதிசயம்?
