ரஜினியின் புதிய படத்தில்
ரஜினியின் புதிய படத்தில் வைரமுத்துவிற்கு வாய்ப்பு இல்லை : செய்தி
ரஜினியின் சில படங்களில் வைரமுத்து விடுபட்டாலும் பின்பு சேர்ந்து கொள்வார், கடந்த இரு படங்களிலும் வைரமுத்து இல்லை
ரஞ்சித் படத்தில் வைரமுத்து விரட்டபட்டது ஒன்றும் ஆச்சரியமல்ல, ரஞ்சித் தலித் வெறியர் ஆனால் இளையராஜாவினை கூட அழைக்கமாட்டார் என்பது வேறு விஷயம்
இப்பொழுது இந்த பேட்ட படத்திலும் வைரமுத்து இல்லையாம், கலாந்தி மாறன் படம் என்றாலும், வைரமுத்து இல்லாமல் போனதற்கு காரணம் ஆண்டாள் விவகாரம் என்கின்றன சில செய்திகள்
கலைஞர் இருந்தால் இப்பொழுது வைரமுத்து சும்மா இருப்பாரா?
“பிடர் கொண்ட சிம்மமே பேசு,
உன் குடும்ப நிறுவணத்தில் என் கவி வரிகளுக்குக்கு இல்லையாம் காசு, அவர்களை பிடித்து ஏசு” என அட்டகாச கவிதை வடித்திருப்பார்
கட்சி தொடங்குவார் என எதிர்பார்த்தால் ரஜினி எந்திரன் 2.0ல் ஒரு மாதிரி வந்து நிற்கின்றார், தனுஷின் மாப்பிள்ளை படத்தில் விவேக்கினை பார்த்தது போல் சில இடங்களில் இருக்கின்றது
ஆனாலும் டிரைலர் முடிவில் குக்கூ என மகிழ்ச்சியாக கூவி சிரிக்கும்பொழுது மனிதர் மனம் விட்டு சிரிப்பது தெரிகின்றது
எங்கிருந்தோ தப்பி சென்ற நிம்மதி தெரிகின்றது
அந்த குக்கூ யாருக்கு? பாஜகவில் தன்னை இழுத்து போட முயன்ற அமித்ஷா கும்பலுக்க்காக இருக்கலாம் என்கிறது ஒரு செய்தி
இல்லை, குக்கூ என்பது குயிலின் குரல், குயிலின் ஸ்பெஷாலிட்டி அது கூடுகட்டாது மாறாக காகத்தின் கூட்டை பயன்படுத்தும், அதனால் சொந்த கட்சி தொடங்காமல் இன்னொரு கட்சியினை அமுக்கும் திட்டத்தில் ரஜினி இருக்கலாம் என்கின்றது இன்னொரு செய்தி
இந்த விஷயம் கசிந்தால் அமைச்சர் ஜெயக்குமார் இனி காகமாக கத்தபோவது உறுதி

பெட்ரோல் விலை உயர்வினை இதை விட வலிமையாக சொல்ல முடியாது, முடியவே முடியாது
காரில் மிக சோகமாக அமர்ந்து பெட்ரோல் விலையினை எண்ணி கண்ணீர் விடுகின்றார் தலைவி, இந்த படம் இந்தியா எங்கும் பெரும் சலசலப்பினை ஏற்படுத்திவிட்டது
டைம் பத்திரிகை கூட இந்த படத்தை பிரசுரித்து இந்தியாவின் பெட்ரோல் கொள்ளையினை உலகெல்லாம் கொண்டு செல்லலாமா என யோசிக்கின்றது
காங்கிரஸின் ஆயிரம் போராட்டம் செய்யாத தாக்கத்தை தலைவியின் ஒரு புகைபடம் காட்டிவிட்டது

மிக மிக திறமையானவர்கள், ரசிகர்களை கட்டி போட்ட கலைஞர்களில் பெரும்பான்மையானோர் நெடுநாள் இருப்பதில்லை
திறமையினையும் ரசிக கூட்டத்தையும் அபூர்வ வரங்களையும் கொடுத்த இறைவன் சிலருக்கு ஆயுளை கொடுப்பதில்லை
மிக சிறு வயதிலே பாடவந்து 37 வயதிலே மரித்தும் போன சொர்னலாதாவும் அதில் ஒருவர்
மிக சிறந்த பாடகி, அதனைவிட சிறந்தது அந்த வீணை போன்ற குரல்
அந்த குரல் எவ்வளவு நாள்தான் மானிட உலகிலே பாடுவது? வானுலகிலும் பாடினால் என்ன? என விரும்பிய கடவுள் அழைத்துவிட்டான்
ஆயினும் அந்த குரலும் அவர் விட்டு சென்ற பாடல்களும் பூலோகத்தை விட்டு நீங்குவதே இல்லை
மனதை உருக்கிய அந்த குரலுக்கு சொந்தகாரரான அற்புத பாடகி ஸ்வர்ன லதாவிற்கு ஆழ்ந்த அஞ்சலிகள்
ஆண்டுகள் ஓடினாலும் அக்குரல் காற்றில் ஒலித்துகொண்டே இருக்கும்

ஆக ஆதித்யா டிவிக்கு போட்டியாக காமெடி சானல் ரெடி
எப்படியோ நியூஸ் ஜே என வைத்தார்கள், பன்னீர் பழனிச்சாமியின குறிக்கும் வகையில் பி நியூஸ் என்றோ இல்லை பிபி நியூஸ் என வைத்திருந்தால் எப்படி இருந்திருக்கும்?
பொருத்தமாகத்தான் இருந்திருக்கும் போல..
