நாஸ்டர்டாமஸ் இந்தியா பற்றி சொன்னது

“உலகின் முடிவில் கிழக்கிலிருந்து பெரும் ராணுவம் ஒன்று வரும், சில நதிகள் காய்ந்துவிடும் அது வழியாக அந்த மாபெரும் சேனை வரும்

அந்த வலிமையான சேனை மாபெரும் யுத்தத்தை தொடுக்கும், அதை தடுப்பார் யாருமிலர்.”

இப்படி சொல்வது பைபிளின் திருவெளிப்பாடு

இதை முதலில் உலகம் நம்பவில்லை, கிழக்கில் இருந்து ஒரு பெரும் அரசா? வாய்ப்பே இல்லை என நம்பினார்கள்

ஆனால் செங்கிஸ்கான் அந்த அச்சுறுத்தலை கொடுத்தான், என்ன காரணமோ தெரியவில்லை அவன் மேற்காசியா பக்கம் பாயாமல் ஐரோப்பாவுக்குள் ரஷ்யா வழியாக சென்றுவிட்டான்

அதன் பின் அந்த கவலை மேற்கத்தியாருக்கு 800 வருடமாக இல்லை

சீனாவின் எழுச்சி அந்த கவலையினை மறுபடி உயிர்த்தெழ செய்தது, ஒருவேளை பைபிள் சொன்ன அந்த மாபெரும் கிழக்கு ராணுவம் சீனமோ என ஒரு தரப்பு அஞ்சுகின்றது

நல்ல வேளையாக பாஜக தரப்பின் வெறி சங்கிகளுக்கு இதெல்லாம் தெரியவில்லை

நாஸ்டர்டாமஸ் சொன்ன இந்திய ஆளுமை மோடி என நிறுத்திகொண்டார்கள், சங்கிகள் பைபிள் படிக்காததால் வந்த நல்ல விஷயம் இது

ஆனால் நாஸ்டர்டாமஸ் மோடி பற்றி ஏதும் சொல்லவே இல்லை

ஐந்துநதி கூடும் இடத்தில் இருந்து நீலநிற‌ தலைப்பாகையுடன் ஒருவர் வருவார், அவர் முப்பக்கம் கடல்சூழ்ந்த அந்த நாட்டை மாபெரும் சக்தியாக்குவார் என சொன்னார் நாஸ்டர்டாமஸ்

அது இந்தியா என்பதும் அவ்விடம் பஞ்சாப் என்பதும் கணிக்கலாம்

ஆச்சரியமாக நீல நிற தலைப்பாகையுடன் முதல் சீக்கிய பிரதமராக மன்மோகன்சிங் வந்தார், உலகம் உற்று நோக்கியது

ஆனால் மன்மோகன்சிங் வந்து சென்றாகிவிட்டது, ஒன்றும் மாற்றமில்லை

மன்மோகன்சிங்கினை கணித்த நாஸ்டர்டாமஸ் அவரை கெடுத்த திமுகவினை பற்றி கணிக்காமலா இருந்திருப்பார்?

ஆக மன்மோகன்சிங் அந்த மாபெரும் சக்தி அல்ல‌

மாறாக இன்னொரு சிங் வரலாம் அல்லது ராணுவபுரட்சியோ இல்லை வேறொதுவோ வந்து இந்தியா மாபெரும் சக்தி ஆகலாம்

நாஸ்டர்டாமஸ் இந்தியா பற்றி சொன்னது இதுவேதான்

அழுத்தமாக நீல நிற தலைப்பாகை என சொல்லிவிட்டு சென்றிருப்பதால் நாஸ்டர்டாமஸுக்கு கோடி நன்றிகள்

காவி தலைப்பாகை என்றால் என்ன ஆகியிருக்கும்?