தமிழ் தேசிய கும்பலுக்காக சென்றீரா?
கோமதி மாரிமுத்து என்பவர் நிச்சயம் நல்ல ஓட்டபந்தய வீரர்
ஆனால் ஜெகத் கஸ்பர் என்பவருடன் அமர்ந்து பேட்டி கொடுத்தபின் சந்தேகமே இல்லாமல் சொல்லலாம் அம்மணி குழப்பவாதி
தெளிவானவர்களுக்கு ஜெகத் கஸ்பர் எனும் போலிபாதிரியோடு என்ன தொடர்பு?
அட கரகாட்ட கோஷ்டிகளும் நாட்டுபுற கோஷ்டிகளுமே ஜெகத்கஸ்பாரை கண்டு தலைதெரிக்க ஓடும்பொழுது அம்மணிக்கு என்ன வந்தது?
அம்மணி முன்பு ஆடிய விளையாட்டுக்காக அவருக்கு அரசுபணி கொடுக்கபட்டிருக்கின்றது, நிச்சயம் வாழ்த்துகுரியது
அதாவது அரசு அவருக்கான உதவிகளை சரியாக செய்கின்றது, நல்ல வேலை எனும் பொருளாதார அடித்தளத்தை அமைத்து கொடுத்திருக்கின்றது
இதோ கத்தாருக்கு சென்ற செலவெல்லாம் ஜெகத் கஸ்பாரா கொடுத்தார்?
இல்லை, நிச்சயம் இல்லை
அரசின் விளையாட்டு மேம்பாட்டு துறையில் சில சுணக்கம் இருக்கலாமே தவிர அடிப்படை காரியங்களில் கைவிடுவது இல்லை
அவர்களுக்கு வேலையும் இன்னபிற பாதுகாப்பும் கொடுக்கின்றது, அதிலிருந்து மேல் ஏறி வரவேண்டியது விளையாட்டாளரின் பொறுப்பு மற்றும் தேடல்
இங்கிருக்கும் யதார்த்தம் அது
பறக்கும் சீக்கியரான மில்கா சிங் பாகிஸ்தானில் அப்பட்டம் பெற்றார், ஆம் அந்த பாகிஸ்தான் அய்யூப் கான் தந்திரமாக “பறக்கும் இந்தியன்” என்பதற்கு பதிலாக “பறக்கும் சீக்கியன்” என வார்த்தையினை மாற்றி சொல்லி வாழ்த்தினான்
ஆனால் தேசத்திற்கு மில்கா சிங் இந்தியனாக வந்தார்
ஆம் அவர் வெறும் காலோடுதான் ஓடினார், ஷூ எல்லாம் இல்லை
தேசத்துக்காக ஓடும்பொழுது ஷூ என்ன? வெறும் கால் என்ன? பாகிஸ்தானை வென்றேனா இல்லையா? என சொல்லிவிட்டு சென்றான் மில்கா சிங்
ஆம், அவன் இந்தியன்
அப்படிபட்ட சாதனையாளர்கள் தேசபற்றாளர்கள் வாழ்ந்த பூமியில் இந்த கோமதி போலி பாதிரியுடன் கண்ணீர்விடுவது சரியல்ல
அம்மணிக்கு இத்தேசம் நல்ல பணியினை கொடுத்திருக்கின்றது, பாதுகாப்பு இன்னபிற வசதிகளை கொடுத்திருக்கின்றது
பணியினை தமிழகத்துக்கு மாற்றி கேட்கலாம் அது சரி ஆனால் ஏதோ தேசம் கைவிட்ட பெண்மணி போல கண்ணை கசக்குவது சரி அல்ல
அம்மா கோமதி, உனக்கு ஒன்றே ஒன்றை இத்தேசம் சொல்கின்றது
இந்த தமிழ்தேசிய கும்பலுக்கு இங்கு குழப்பம் ஏற்படுத்த தெரியுமே அன்றி யாரையும் வாழவைக்க தெரியாது
அவர்களால் அழிந்தவர் தொகை பல லட்சம் இருக்குமே அன்றி வாழ்ந்தோர் என ஒருவரையும் காட்டமுடியாது
ஆனால் அவர்கள்மட்டும் வாழ்வாங்கு வாழ்வார்கள்.
இந்த சதியில் நீயும் சிக்கிவிடாதே தாயே, சாதிக்க வேண்டுமானால் இந்தியனாய் இரு
இல்லையேல் இந்த தமிழ்தேசிய கும்பலிடம் சிக்கி நாசமாய் போ
அந்த மில்கா சிங்கையும் உன்னையும் ஒப்பிட்டு பார்த்து நாணத்தால் தலைகுனிகின்றோம்
அவனுக்கு இருந்தது நாட்டுபற்று, நாடு வெல்லவேண்டும் எனும் வெறி. வீரனுக்கு அதுதான் தேவை
மாறாக நான் எனது, எனக்கு என்ற குறுகிய வட்டம் கொண்ட , சுயநல வீரன் எவனும் சாதித்ததாக சரித்திரமே இல்லை
ஒவ்வொரு நாடும் விளையாட்டுக்கு கொட்டி கொடுப்பது ஏன்?
அதில் நாட்டுபற்றும் மக்கள் உடல் நலமும் இன்னும் பல தேவைகளும் இருக்கின்றன
ஆம் விளையாட்டை விரும்பி உடலை பலமாக்கும் சமூகமே சிறந்த ராணுவத்தை பெறும்
அதை முதலில் சொன்னவன் அலெக்ஸாண்டர், அந்த முதல் ஒலிம்பிக் போன்ற போட்டிகள்தான் அதில் உருவான வீரர்கள்தான் அலெக்ஸாண்டர் பெற்ற மாபெரும் வெற்றிக்கு அடிபப்டை
நெப்போலியனும் ஹிடலரும் இதில்தான் தோற்றார்கள், அவர்கள் சிறந்த தளபதியாயினும் வீரர்கள் சொத்தைகள்
இன்றும் உலகில் முன்னணியில் இருக்கும் சைனா அமெரிக்கா ரஷ்யா எல்லாம் ஒலிம்பிக்கில் சாதித்து முதலிடம் வர துடிக்கின்றார்களே எப்படி?
நல்ல விளையாட்டு வீரனே நல்ல ராணுவ ரீதியாக வரமுடியும் அல்லது அவனை பார்த்து உருவாகி வருபவர்கள் வரமுடியும்
உலகமெல்லாம் ஒவ்வொரு நாடும் விளையாட்டை ஊக்கபடுத்துவது அந்த அடிபப்டையிலே, நாட்டுபற்றை வளர்க்கவே
ஆனால் நீர் செய்யும் செயல்….வேண்டாம் அதிகம் பேச வைக்காதீர். தேசபற்றில்லா பதர்கள் நாட்டின் களைகள்
அது யாராய் இருந்தாலும் சரி
தமிழ் தேசிய கும்பலுக்காக சென்றீரா? இல்லை இந்தியாவுக்கா?
முக ஸ்டாலினும் ஜெகத்கஸ்பரும் அனுப்பினார்களா? இல்லை விளையாட்டுதுறை அனுப்பியதா?
இந்த நாட்டில் விளையாடி, இந்த நாட்டு அரசில் பணி பெற்று, இந்நாட்டின் சார்பாக பதக்கமும் பெற்று, இந்நாட்டின் தேசிய கொடியினை ஏந்திவிட்டு
கேவலம் திமுக கொடுத்த 10 லட்சம் ரூபாய்க்காக ஸ்டாலினை பார்த்தது தேசிய கீதம் என்பதும், ஜெகத் கஸ்பர் எனும் அவர்களின் பினாமியோடு சேர்ந்து
கண்ணீர் விடுவதும்
ச்ச்சீ…ச்ச்சீ.. தமிழகம் உன்னால் நாணி குனிகின்றது
