ஒளவையரின் ஞானகுறள்/ வீட்டு நன்னெறிபால்/ அதிகாரம் 8 – அர்ச்சனை / குறள் : 05

ஒளவையரின் ஞானகுறள்/ வீட்டு நன்னெறிபால்/ அதிகாரம் 8 – அர்ச்சனை / குறள் : 05

“பூரித்திருந்து புணர்ந்து சிவனுருவைப்
பாரித்தங் கர்ச்சிக்கு மாறு”

பூரித்தல் என்றால் மிகுந்த மகிழ்ச்சியான நிலை என பொருள்

யோகத்தில் நிலைக்கும் பொழுது உச்சநிலையில் ஒரு ஏகாந்தமான‌ பரவசம் எற்படும் அந்த பரவச நிலையில் ஜீவாத்மாவினை பரமாத்வாவோடு கலக்க வேண்டும் (புணர்ந்து)

அப்படி கால்க்கும் பொழுது சிவன் உரு தோன்றும் (பாரித்தல்), அந்த உருவை கண்டு வணங்கி வழிபடல் வேண்டும்

இங்கு ஒரு யோக ரகசியத்தை சொல்கின்றார் ஒளவையார், அதாவது வழிபாட்டில் நாம் வேறு இறைவன் வேறு என்பதும் இறைவனிடம் நமக்கு தேவையானதை மட்டும் கேட்பதும் இன்றைய வழிபாடாகிவிட்டது

சித்தர்களின் ஞான மொழியில் அது அல்ல விஷயம், இறைவன் நமக்குள்ளே இருக்கின்றார் தியானத்தில் நான், நாம் என்பதை தூக்கி எறிந்துவிட்டு, அந்நினைவினை அகற்றிவிட்டு நான் என்பது ஒன்றுமில்லை, நான் என ஒருவனே இல்லை எல்லாம் சிவமயம், அந்த சிவமயத்தில் கலந்த ஆத்மா இது என்ற ஏக நிலையில் தியானிக்க வேண்டும்

தன்னை அறிதல் என்பதும், தான் ஒன்றுமில்லை என அறிதலுமே யோகத்தின் தொடக்கம். இதைத்தான் ரமண மகரிஷி உள்ளிட்ட பலர் போதித்தார்கள்

வழிபாடு அந்த மனநிலையில் இருக்க வேண்டும், யோக பரவச நிலையில் தன்னில் இருக்கும் இறைசக்தியினை சிவவடிவினை உணர்ந்து வழிபடல் வேண்டும் என்பதே ஒளவை சொல்லும் போதனை