சிங்கம் 3 : திரை விமர்சனம்
இனி தமிழகமே சேர்ந்து ஜல்லிகட்டுக்கு போராடியது போல போராடாமல், டைரக்டர் ஹரி சிங்க வரிசை படங்களை நிறுத்தமாட்டார்.
இப்பொழுது சிங்கம் 3 வந்திருக்கின்றது, அதே சத்தம் அதே ஓட்டம் அதே 1.5 டன் இம்சைகள், இது சிங்கம் 3 அல்லவா? அதனால் வெயிட் இன்னும் கூடி கண்டெய்னர் வடிவில் வருகின்றது
கண்டெய்னரில் வெளிநாடுகளில் இருந்து ஆபத்தான குப்பைகளை கொண்டு வருவோரை அழிகின்றாராம் சூர்யா,
அந்த களபேரத்தில் எல்லா வில்லன்களையும் சுட்டு தள்ளிவிட்டு அவர் போக்கில் பட முடிவிற்கு வந்துவிடுகின்றார், மிக எளிதாக சுடுகின்றார். இதனை முதலிலே சுட்டால் 10 நிமிடத்தில் படம் முடிந்திருக்கும்.
அப்படி நடுரோட்டில் கண்டெய்னர்களை திறந்து மக்களுக்கு காட்டுகின்றாராம், படத்தில் இறக்குமதி குப்பை கண்டெய்னர்களை மட்டும் திறப்பாராம்,
ஆனால் உள்ளூரில் நடமாடும் கண்டெய்னர்களை திறக்கமாட்டாராம், அதில் 1500 கோடி, 5000 கோடி என இருக்குமல்லவா? அதனால் அவர் குப்பை கண்டெய்னர்களை மட்டும் திறப்பார்
சிங்கம் 2விலே தூத்துகுடியில் தாது மணல் கண்டெய்னரை திறக்காமல், ஆப்ரிக்க கருப்பனை போட்டு அடித்தவர் அப்படித்தான் இருப்பார்
முதல் பாகத்தில் சூட்கேஸ், அடுத்த பாகம் சாக்கு பை, இப்பொழுது கண்டெய்னர், அடுத்து என்ன திறப்பாரோ டைரக்டருக்குத்தான் வெளிச்சம்
அடுத்து என்னவாக இருக்கும்? அட கதைக்கா பஞ்சம்
தமிழகத்தில் 131 எம் எல் ஏக்கள் கடத்தபட்டதாகவும், அதனை கண்டுபிடிக்க விஜயகுமார் சூர்யாவினை அனுப்புவதாகவும், 10 மொபைல் கண்டெய்னரிலோ அல்லது தீவில் சுண்டகஞ்சி குடித்துகொண்டிருகும் அவர்களை சூர்யா கண்டுபிடித்து வருவதாக இருந்தால் நாளையே சிங்கம் 4 ரெடி.
கண்டெய்னரில் குப்பைகள் மட்டும்தான் வருமா? எம் எல் ஏக்கள் வரமாட்டார்களா? இரண்டும் ஒன்றுதான்.
அப்படி இல்லாமல் நட்சத்திர விடுதி கதவுகளை திறந்து எம் எல் ஏக்களை மீட்டால் முடிந்தது விஷயம்
படத்தில் ஒரு காட்சியில் ஸ்ருதிஹாசனுக்கு வில்லன் ஒரு ஊசி போட்டுவிடுகின்றான், அது 3 நாட்கள் மயக்கத்திலே வைத்திருக்குமாம், படத்தின் நடுவே எம் எல் ஏக்கள் நினைவும் வந்தது. ஒருவேளை நமது எம் எல் ஏக்களுக்கும் அப்படி ஒரு நிலை வந்திருக்குமோ?
சே..சே நம்மவர்கள் மந்திர, ஜாதக நம்பிக்கை உள்ளவர்கள். ஏதும் மாந்ரீகனை கொண்டு யாகம், புனஸ்காரம் செய்யலாமே ஒழிய, டாக்டர்கள் எல்லாம் பேட்டிக்கு மட்டும்தான்.
ஆனாலும் சூர்யா கொடுத்து வைத்தவர் இந்த சிங்க வரிசைபடத்தால் அனுஷ்காவினை பக்கத்தில் வைத்துகொண்டே அவரால் பல முண்ணணி நடிகைகளுடன் டூயட் ஆட முடிகின்றது
அடுத்த பாகம் வரும்பொழுதும் அவர் இன்னொரு நடிகையுடன் ஆடுவார், அனுஷ்கா அருகிலே இருப்பார். யாருக்கு இப்படி கொடுத்து வைத்திருக்கின்றது?
ஆனாலும் இந்த படத்தில் ஒரு பெரும் நகைச்சுவை காட்சி உண்டு
அதாகபட்டது படத்தின் பெரும்பான்மை காட்சிகளை மலேசிய கோலாலம்பூரில் எடுத்துவிட்டு அது ஆஸ்திரேலியா என சொல்லிவிடுகின்றார்கள், நாம் நம்பிகொள்ளத்தான் வேண்டும்
மலேசியா என சொல்லிவிட முடியாதல்லவா? ஏன்?
“கபாலி” அப்படியான பாடத்தினை சொல்லியிருக்கின்றது போல,
அந்த அரைகுறை பா.ரஞ்சித்தால் எங்கோ தமிழ் திரையுலகம் வசமாக அடிவாங்கி இருக்கின்றது என்பது மட்டும் தெரிகின்றது