பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

உதவி தேவைபடும் “சிறப்பு குழந்தைகளுக்கான நாளாக” இதனை கொண்டாடலாம்

19ம் நூற்றாண்டில் ஒரு தந்திரம் உலகெல்லாம் உண்டு, அதாவது கொஞ்சமும் தகுதி இல்லாத ஒருவரை மறுபடி மறுபடி மக்கள் மனதில் பதியவைத்து அவரை பெரும் பிம்பமாக்குவது ஊடகங்கள் பல தங்களை அறியாமலும் பல தங்களை அறிந்தும் இந்த காரியத்தை செய்யும், ஒரே ஒருவருக்கு கொடுக்கபடும் அதீத விளம்பரம் மற்ற திறமையான எல்லோரையும் அப்படியே மறைய செய்துவிடும், கிரிக்கெட்டில் யாருக்கும் வாய்பளிக்காமல் ஒரே ஒருவனை மட்டும் நிறுத்தி ஆட சொன்னால் எப்படி இருக்கும் அப்படியான நிலை இது இதனை […]

கந்தர் அனுபூதி : 02

“உல்லாச நிராகுல யோக இதச்சல்லாப விநோதனும் நீ அலையோஎல்லாம் அற என்னை இழந்த நலம்சொல்லாய் முருகா சுரபூ பதியே” உல்லாச என்றால் மங்காத உள்ளக் களிப்பும், நிராகுல என்றால் துன்பமற்ற நிலையும், யோக என்றால் யோகநிலை தருபவனும், இத என்றால் இதமான நன்மை பயப்பவனும், சல்லாபம் என்றால் பல விஷயங்களை தெரியவைத்து அடியாருடன் மகிந்து திருவிளையாடல் புரிபவனும் என பொருள் நீ அலையோ என்றால் நீயில்லையோ , நீதானே என்பது பொருள் முருகா சுரபூ பதியே என்றால் […]

தமிழில் வழிபாடு

வரலாற்றை எப்பொழுதும் அதன் ஆட்சிகாலங்களோடு பார்க்க வேண்டும், அங்கு நடந்த அரசியல் காட்சிகளோடு பார்க்க வேண்டும் இங்கு தமிழுணர்வோ, தமிழ் அபிமானமோ ராம்சாமி காலத்திலும் கருணாநிதி காலத்திலும் ஏற்பட்டது அல்ல, தமிழில் வழிபாடு என்பதெல்லாம் திராவிடத்தில் எழுந்ததே அல்ல‌ இங்கு தமிழில் வழிபாடு என்பதை அகத்தியர் சொன்னார், இன்னும் பலர் சொன்னார்கள், 11ம் நூற்றாண்டில் ராமானுஜர் எனும் மகானே தமிழ் வழிபாட்டை செய்தார் தமிழ்சங்கமெல்லாம் பல ஆயிரம் ஆண்டாக தமிழை வளர்த்தது, இங்கு முருகன் சிவன் விநாயகர் […]

அகநானூறு : 03

நாதா மேனகையே வா என்ன செய்கின்றீர்கள் நாதா அருணகிரி நாதரின் கந்தர் அனுபூதி வாசிக்கின்றேன், வா இருவரும் சேர்ந்து அந்த இனிமையான ஆன்மீக சாற்றினை பருகலாம் வா நாதா, நான் கன்னியாகுமரி வரை சென்றுவரட்டுமா? ஏன் கண்ணே? செவ்வாழை பழம் வாங்க போகின்றாயா? உன்னை விடவா அது சிகப்பானது? இல்லை நாதா, அங்குதான் ஒருத்தி காதலனுக்கு பழச்சாற்றில் விஷம் வைத்து கொன்றாளாம், கொஞ்சம் அவளிடம் ஆலோசனை கேட்காலம் என்றுதான்.. அப்படியா, சரி வா நாம் அகநானூறு படிக்கலாம், […]

அப்சல்கான் Vs சிவாஜி

அப்சல்கான் சுமார் 300 கிலோ எடை கொண்டவன், 7அடி நெருங்கும் உயரம் கொண்டவன், பீரங்கியினை இழுக்கும் காளைகளே முடியாத இடங்களில் தனி ஒருவனாக பீரங்கியினை தூக்கும் வலிமை கொண்டவன், தன் தோளில் இருவரை சுமந்துதான் உடல்பயிற்சி செய்வான், சிறந்த மல்யுத்த வீரன், அவன் ஒருவனை வளைத்து பிடித்தால் அவனிடமிருந்து தப்ப முடியாது வஞ்சம் பேசி ஏமாற்றி கொல்வதில் வல்லவன், தெற்கே பல நாயக்க சிற்றரசர்களை சமாதானம் பேச வரவைத்து கொன்றவன், எதிரி பலமானவனாய் இருந்தால் அவனின் கூட்டாளிகளை […]

பழமொழி நானூறு : 33

“அருவிலை மாண்கலனும் ஆன்ற பொருளும்திருவுடையராயின் திரிந்தும் வருமால்பெரு வரை நாட பிரிவின் றதனால்திருவினும் திட்பமே நன்று” அரிய விலை மதிப்புடைய சிறந்த அணிகலன்களும், நிறைந்த செல்வமும் ஒருவனின் ஊழ்வினையினை பொறுத்து தகுதி இல்லாமல் வந்து சேரும், அதாவது பொல்லாதவனுக்கும் அறிவில்லாதவனுக்கும் கூட ஊழ்வினை காரணமாக பரம்பரை சொத்தோ இல்லை குறுக்குவழியிலோ பணமும் பொருளும் வந்து சேரும் அப்படிபட்டவனை உலகம் ஒரு பொருட்டாக கருதாது அவனை சிறந்தவன் என ஒப்பாது, எவன் எக்காலமும் அறிவான வழியில் நிலையாக நிற்பானோ […]

ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 200 – குருவழி / குறள் : 04

“தலைப்பட்ட சற்குருவின் சந்நிதியி லல்லால்வலைப்பட்ட மானதுவே யாம்.” இக்குறள் “தலைபட்ட சத்குருவின் சந்நிதி இல்லாமல் வலைபட்டமானது அதுவேயாம்” என இக்குறள் பிரிந்து பொருள் தரும் அதாவது அறிவில் சிறந்த , முதிர்ச்சி அடைந்த சற்குருவின் சன்னதிக்கு செல்லாமல் அறியாமை வலையில் (கண்ணியில்) சிக்கிய மனதை விடுவிக்க முடியாது என்பது பொருள் நல்ல குருவே ஒருவனுக்கு முதல் அவசியம், நல்ல குரு அமைந்துவிடுவதை போல வரம் வேறொன்றுமில்லை குரு ஒருவனுக்கு ஞான வெளிச்சம் கொடுப்பார், குரு ஒருவனை அடுத்த […]

மதுரை மீனாட்சியின் பிரிட்டிஷ் பக்தன்

எவ்வளவு இடர் வந்தாலும் பல ஆயிர வருட சரித்திரத்தில் ஒரு கையில் எண்ணுமளவு மிக சில நகரங்களே தன்னை மீட்டு காத்துகொண்டன, எந்த இடர் வந்தாலும், எவ்வளவு ஆட்சிகள் மதங்கள் வந்தாலும் எந்த கலாச்சாரம் வந்தாலும் அசையாமல் அதில் மூழ்காமல் தன்னை மீட்டெடுத்து நிற்கும் பூமிகள் சில‌. அதில் ஜெருசலேம் காசிக்கு பின் அதிசயமாக நிற்கும் நகரம் மதுரை. அது இந்து, சமணர், பவுத்தர், இஸ்லாமியர், கிறிஸ்தவரென எல்லா மதத்தாராலும் அது ஆளபட்டது. ஆனால் அதன் இயல்பினை […]

வீரமாமுனிவன்

இந்த வீரமாமுனிவன் என்பவன் யார், அவன் என்ன செய்தான் என பலர் கேட்பதால் சில விஷயங்களை சொல்லலாம் அது வீரசிவாஜியின் இந்து ராஜ்ஜியத்தை அவுரங்கசீப் கடும் பிரயர்த்தனமாக முறியடித்து மொகலாயத்தை மீள கட்டமைக்கபட பெரும் போர் நடத்திய காலங்கள், அப்பொழுது மராட்டிய பகுதிகள் அணல் அடித்து கொண்டிருந்தது, தமிழகத்தின் செஞ்சி பக்கமெல்லாம் பெரும் குழப்பம் நிலவிற்று அவுரங்கசீப்பின் கனவினை சிவாஜியின் மருமகள் தாராபாய் பெண் சிங்கமாய் நின்று நொறுக்கி போட்டு கொண்டிருந்தாள், அவளின் தாக்குதல் முன் மொகலாயம் […]

கிருஷ்ணகரியம்

தங்களுக்கு யாதவாரியம் அல்லது யாதவத்துயம் ஏன் அவசியம் என விளக்குகின்றார், அவரின் பேட்டி இதோ அய்யா நீர் ஏன் இப்படி யாதவத்தியம் பேச தொடங்கிவிட்டீர்? இரண்டாயிரம் வருடமாக மட்டுமல்ல பல லட்சம் வருடமாக நாங்கள் தடுக்கபட்டவர்கள், விரட்டபட்டவர்கள் ஒடுக்கபட்டவர் தெரியும் அதென்ன தடுக்கபட்டவர்? ஆடு மாடு மேய்க்க விடாமல் எங்களை தடுத்தார்கள், தடுத்து தடுத்து விரட்டினார்கள், அப்படி தடுத்து விரட்டபட்டதால் நாங்கள் தடுக்கபட்டவர்கள் இது உங்கள் அனுபவமா? பல லட்சம் ஆண்டுகளாக யாதவ நிலை இதுதான், இதனால்தான் […]