பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

அமெரிக்காவில் அய்யா ராம்சாமி ….

அமெரிக்கா எப்பொழுதுமே இனவெறி கொண்ட நாடு, பொதுவாக ஐரோப்பியருக்கு தாங்களே உயர்ந்தவர்கள் எனும் மேட்டிமை மனம் மனதால் உண்டு, கிரேக்கருக்கும் ரோமருக்கும் இருந்த அந்த உயர்ந்த மனப்பான்மை அவர்களுக்கும் உண்டு, ஹிட்லர் கூட அப்படித்தான் உருவாகியிருந்தான் இதனால் ஐரோப்பியரை தவிர எல்லோரையும் தாழ்வாகவும் மரியாதை குறைவாகவும் நடத்தும் தன்மை அவர்கள் ரத்தத்திலே உண்டு, என்னதான் இயேசுவின் அன்பு சமதர்மம் என பேசினாலும் அந்த உயர்ந்த மனப்பான்மை வெறியினை மாற்றவே மாட்டார்கள் அது அவர்கள் உலகெல்லாம் ஆளும்பொழுது தெரிந்தது, […]

ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 140 – உருவொன்றி நிற்றல் / குறள் : 02

“பாலின்க ணெய்போற் பரந்தெங்கு நிற்குமேநூலின்க ணீச னுழைந்து” இக்குறள் “பாலின்கள் நெய் போற் பர்ந்தெங்கும் நிற்குமே நூலின் கண் ஈசன் நுழைந்து” என பிரிந்து பொருள் தரும் பாலுக்குள் நெய் இருப்பது போல எல்லா இடத்திலும் சிவன் நிறைந்து பரவி இடையேளியே இல்லாமல் தொடர்ந்து (நூலாக பிணைந்து) வியாபித்திருக்கின்றார் என்பது பொருள் சிவன் எல்லா இடத்திலும் நிறைந்திருக்கின்றார், நம் உடலிலும் இருக்கின்றார் ஆனால் பாலுக்குள் நெய் போல மறைந்திருக்கின்றார், பாலை பக்குவபடுத்தி தயிராக்கி கடைந்தால் நெய் வருவதை […]

குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் : 70

“செயக்கடவ வல்லனவுஞ் செய்துமன் னென்பார்நயத்தகு நாகரிக மென்னாம் – செயிர்த்துரைப்பின்நெஞ்சுநோ மென்று தலைதுமிப்பான் றண்ணளிபோல்எஞ்சா தெடுத்துரைக்கற் பாற்று” தன்னிடம் அடைக்கலமாகி உதவி கேட்டு வருபவனிடம் தன்னால் முடியாத ஒன்றை முடியும் என சொல்லி அதாவது இரக்கம் கொண்டு தன்னை நல்லவன் என காட்ட‌ அவன் கோரிக்கையினை ஏற்று ஆனால் காரியத்தை முடிக்காமல் இழுப்பது எப்படியானது என்றால் ஒருவன் மனம் நோகாமல் இருக்க அவன் தலையினை வெட்டுவதற்கு சமம் ஒருவனுக்கு உதவ முடியவில்லை என்றால் முடியாது என முதலிலே […]

அபிராமி அந்தாதி 48

“சுடரும் கலைமதி துன்றும் சடைமுடிக் குன்றில் ஒன்றிபடரும் பரிமளப் பச்சைக்கொடியைப் பதித்து நெஞ்சில்இடரும் தவிர்த்து இமைப்போது இருப்பார் பின்னும் எய்துவரோகுடரும் கொழுவும் குருதியும் தோயும் குரம்பையிலே” பட்டர் தன் முதல் வரியில் “சுடரும் கலைமதி துன்றும் சடைமுடிக் குன்றில்” என பாடி தொடங்குகின்றார் அதாவது “ஒளிவிடும் (சுடரும்) கலைமதி (பிறை நிலா) ஒட்டி நிற்கும் (ஒன்றும்) சடைமுடி குன்று மே;ல்” என சொல்கின்றார், மலையின் மேல் நிலா இருப்பதையும், மலையின் உச்சியில் இருந்து அருவிகள் நீண்டு விழுவதையும் […]

ஆச்சார கோவை : 43

ஆச்சார கோவை : 43 “உச்சிஅம் போழ்தோடு இடை யாமம் ஈர்அந்திமிக்க இரு தேவர் நாளோடு உவாத்திதி நாள்அட்டமியும் ஏனைப் பிறந்த நாள் இவ் அனைத்தும்ஒட்டார் உடன் உறைவின்கண்” ஆச்சாரகோவை கணவன் மனைவியோடு கூடும் காலத்துக்கும் சில ஆச்சாரங்களை சொன்னது, மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் பல காரணங்களுக்காக சில பொழுதுகளில் சில நாட்களில் தாம்பத்யம் கூடாது என்றது அதற்கு குழந்தைபேறும் இன்னும் சில காரணங்களும் வலுவானவை, குறிப்பிட்ட நாட்களில் குழந்தை உருவானால் அது ஆரோக்கியம் குன்றியதாக இருக்கும் […]

ஜி.யூ போப் என்பவன் ஒரு மிஷனரி, வரலாற்றை சரியாக சொன்ன தமிழக ஆளுநர்..

இந்திய தலைநகர் டெல்லியில் தமிழ் கல்வி கூட்டமைப்பு என்றொரு அமைப்பு உள்ளது, அங்கு திருவள்ளுவர் சிலை திறக்கபட்டுள்ளது, திறந்து வைத்தவர் தமிழக ஆளுநர் ரவி அவர்கள் இச்சிலைதிறப்பில் திருவள்ளுவரை ஏக குத்தகைக்கு எடுத்திருக்கும் தமிழ் அமைப்பு தலைவர்களும், திராவிட தலைவர்களும் ஏன் கலந்துகொள்ளவில்லை என்பதெல்லாம் கேட்கவே கூடாது முன்பு கன்னடத்திலும் வடக்கே கங்கை கரையிலும் வள்ளுவன் சிலைக்கு சர்ச்சை வந்தபொழுது பொங்கிய திராவிட சிங்கங்கள் டெல்லியில் வள்ளுவன் சிலை திறக்கபட்டபொழுது அமைதி என்றால் அதுதான் திராவிட தமிழ் […]

மிஷனரி ஐடா ஸ்கேடர் Vs இந்து துறவி அமிர்தானந்தமாயி

ஹரியானா மாகாணம் பரிதாபாத்தில் மோடி உலகறிய திறந்துவைத்த மாதா அமிர்தானந்தமாயி கட்டிய மருத்துவமனை நிகழ்வு இந்திய சரித்திரத்தில் கொண்டாட வேண்டிய ஒன்று இந்த உலகம் மாற ஆரம்பித்த 18ம் நூற்றாண்டில் இந்தியா பிரிட்டிசாரிடம் வசமாக சிக்கியிருந்தது, ஆயுதம் ஒன்றே போராட வழி என இருந்த காலத்தில் இங்கு எந்த மன்னனும் வீரனும் எழாதவாறு அடக்கி ஆளதொடங்கியிருந்தான் அந்த கிறிஸ்தவநாட்டுக்காரன் அவன் காலத்தில் இங்கு மிஷனரிகள் பெருகினார்கள், அவர்கள் வருகை வினோதமானதும் நகைசுவையான காரணங்களையும் கொண்டது இந்தியர்கள் காட்டுமிராண்டிகள், […]

நீதிநெறி விளக்கம் : 69

நீதிநெறி விளக்கம் : 69 “சிறுமுயற்சி செய்தாங் குறுபயன் கொள்ளப்பெறுமெனிற் றாழ்வரோ தாழார் – அறனல்லஎண்மைய வாயினுங் கைவிட் டரிதெனினும்ஒண்மையிற் றீர்ந்தொழுக லார்” அதாவது ஒரு சிறிய செயலால் சிறிதளவே பயன் எனும்பொழுது அதை செய்வதால் அறிஞர்களுக்கு தாழ்வா என்றால் அது தாழ்வல்ல‌ அறம் கெட்ட வழியில் மாபெரும் சாதனைகளை செய்வதை விட அறமான வழியில் செய்யும் மிகசிறிய செயல் பெரும் புகழையும் செல்வாக்கையும் அறிஞர்களுக்கு பெற்றுதரும என்பது பாடலின் பொருள் இதனை இன்னும் ஆழமாக விளக்க […]

ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 140 – உருவொன்றி நிற்றல் / குறள் : 0

“எள்ளகத் தெண்ணெ யிருந்ததனை யொக்குமேஉள்ளகத் தீச னொளி” இக்குறள் “எள்ளகத்து எண்ணெய் இருந்தனை ஒக்குமே உள்ளகது ஈசன் ஒளி” என பிரிந்து பொருள் தரும் அதாவது எள் உள்ளே எண்ணை இருப்பது போல் நம் உடலுக்குள் ஈசனின் அருள் ஜோதி இருக்கின்றது என்பது பாடலின் பொருள் ஒளவை சும்மா சொல்லவில்லை ஒரு தெளிந்த உதாரணத்தோடே சொல்கின்றார் எள்ளில் எண்ணை உண்டு ஆனால் உடனே வராது, அந்த எள்ளை காயவைத்து அரைத்து பிழிந்தால் மட்டுமே எண்ணெய் பிரிந்துவரும், அந்த […]

ஆச்சார கோவை : 42

ஆச்சாரகோவை எனும் இந்த சங்ககால பாடல் தொகுப்பு சமூக வெளிப்புற ஆச்சாரங்களை மட்டும் சொல்லவில்லை, அது இன்பவாழ்வின் தாத்பரியத்தையும் அகவாழ்வின் நுணுக்கமான விஷயங்களையும் குறிப்பாக மங்கையரின் மனமும் உடல்நிலை குறித்து அறிந்த ஞானத்தில் போதனைகளை சொல்கின்றது கணவன் மனைவி இணைந்ததுதான் இல்லறம், அந்த இல்லறத்தில் மனைவியின் மனமும் உடல்நிலையும் அவன் அறிதல் அவசியம், அதை அறியா இடத்தில்தான் பிரச்சினைகள் வெடிக்கின்றன‌ கணவன் மனைவி சிக்கலுக்கு முதல் காரணம் மனைவியின் சில மனநிலையும் உடல்நிலையும் கணவன் புரிந்துகொள்ளாததே என்பதை […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications