பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ஆத்திக வாரியார் Vs நாத்திக திமுக

1944ல் மிக தைரியமாக அதாவது வெள்ளையன் ஆட்சியில் ஈரோட்டு ராம்சாமி அழிச்சாட்டிய ஆட்டம் போட்டு பெரிய புராணத்தை கொளுத்துவேன் ராமாயணத்தை எரிப்பேன் என ஆட்டம் போட்ட காலங்களில் “நாத்திக நச்சு ஆறு இங்கு ஓடுகின்றது” என பொதுவாக சொன்னார் வாரியார் சுவாமிகள் நச்சு ஆறு என்பது தாங்களே என உண்மையினை ஏற்று கொண்ட திக தரப்பு பொங்கி எழுந்தது, அண்ணா டுரை என்பவர் “கீலாசேபம்” என்றொரு கட்டுரை எழுதி பெரியார் நல்லாறு நச்சுகளை அழிக்க வந்த ஆறு […]

தென்னக கடற்கரையின் அர்த்தமற்ற அல்லேலூயா ….

தென்னகத்தின் கடற்கரையில் நடக்கும் போராட்டங்கள் வெகு பிரசித்தம். அணுவுலை கூடாது, ஸ்டெர்லைட் ஆலை கூடாது அப்படியே துறைமுகங்கள் கூடாது என பெரும் ஆர்ப்பாட்டம் நடக்கும் இவ்விவகாரத்தில் ஸ்டெர்லைட் மட்டும் நிறுத்தபட்டது அது துரதிருஷ்டமசமானது, உண்மையில் அணுவுலைக்கு எதிராக வெற்றிபெற்ற அரசுகள் ஸ்டெர்லைட் விவகாரத்தில் சொதப்பின, உளவுதுறைகளும் பாதுகாப்பு அமைப்புக்களும் சரியாக இருந்திருக்குமானால் ஸ்டெர்லைட் ஆலைக்கும் சிக்கல் வந்திருக்காது உளவுதுறையின் தோல்வியே ஸ்டெர்லைட் சர்ச்சைக்கு காரணம் அதற்கு முழு காரணம் பழனிச்சாமி அரசு அதனோடு சேர்ந்து நிலமையினை கணிக்க […]

குமரகுருபரர் நீதி நெறிவிளக்கம் : 68

குமரகுருபரர் நீதி நெறிவிளக்கம் : 68 “சொல்வன்மை யுண்டெனிற் கொன்னே விடுத்தொழிதல்நல்வினை கோறலின் வேறல்ல – வல்லைத்தம்ஆக்கங் கெடுவ துளதெனினு மஞ்சுபவோவாக்கின் பயன்கொள் பவர்” நம்சொல்லுக்கு ஒரு வலிமை இருக்கின்றது செல்வாக்கு இருக்கின்றது என்பதற்காக அதனை அடிக்கடி பயன்படுத்தி பேசிகொண்டே இருப்பது அந்த செல்வாக்கை கொல்லும் செயல் அன்றி வேறல்ல. வார்த்தைகளின் வலிமையானதுஅடிக்கடி அதனை பேசிகொண்டே இருந்தால் அகன்றுவிடும் செல்வாக்கு உள்ளவனின் வார்த்தையானாலும் தேவைபடும் இடம் அன்றி எல்லா இடங்களிலும் பேசபடுமானால் அது மதிப்பிழக்கும், பயனற்ற சொற்கள் […]

ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 130 – கலை ஞானம் / குறள் : 10

ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 130 – கலை ஞானம் / குறள் : 10 “சிந்தையில் நின்ற நிலைவிசும்பிற் சாக்கிரமாம்சந்திரனிற் றோன்று முணர்வு” சத்தியாகிய சந்திரகலையை அறிவு உடலில் (சிதாகாயத்தில்) பாய்ச்ச சாக்கிரத்தில் இருப்பதுபோல் உணர்வு எட்டும். மனதின் வெளியில் மறைவாய் இருக்கும் சிவனை (திருசிற்றம்பலம்) சிந்தையில் யோகத்தால் தேடினால் ஆன்மாவினால் சிவனை உணரலாம் என்பது குறளின் பொருள் சந்திரன் என்பது இங்கு மனதை குறிக்கின்றது, அதாவது ஆத்ம தொடர்பினை குறிக்கின்றது சிவன் நம் […]

ஏக்நாத் ராணடே

அந்த ஆர்.எஸ்.எஸ் அமைப்பு ஒரு வன்முறை இயக்கம் என்றும், அது ஒருமாதிரியான போக்கு கொண்டது என்றும் பெரும் பொய்பிம்பம் தமிழகத்தில் கட்டமைக்கபட்டிருக்கலாம் உண்மை அது அல்ல‌ அதன் அடிப்படை பயிற்சியே வன்முறையில் அல்ல எல்லா மக்களையும் இந்தியராக திரட்டி ஓரணிக்கு கொண்டுவந்து இந்நாட்டின் கலாச்சாரத்தையும் தனிதன்மையினையும் காக்க வேண்டும் என்பதன்றி வேறல்ல‌ வரலாற்றில் அது கலவரம் செய்த காட்சிகளை எங்கும் காணமுடியாது அது 1948ல் காந்தி கொலைக்கு தாங்கள் காரணம் என தடைசெய்யபட்டபொழுதும் கலவரம் செய்யவில்லை , […]

பார்சிக்கள்…

அய்யா, ரத்தன் டாட்டா எவ்வளவோ சமூகபணிகளை செய்கின்றார், நாட்டுபற்றுடனும் அவர்கள் குழுமம் விளங்குகின்ற்து, அதைபற்றி நீங்கள் கொஞ்சம் சொல்லுங்கள் என கேட்டார் அன்பர் ஒருவர் அன்பரே டாட்டாக்களின் தேசபற்றை புரிந்துகொள்ளுமுன் அவர்கள் இனமான பார்சிகள் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும் பார்சிக்கள் தனித்துவமான மதமும் கலாச்சாரமும் கொண்டவர்கள், அவர்களின் பூர்வீகம் பெர்ஷியா எனும் ஈரான் அந்த பூமி அராபிய எழுச்சியில் முழுவதும் மாறியபொழுது பார்சிகள் தங்களை காத்து கொள்ள இந்துக்களிடம் அடைக்கலாகி இந்துஸ்தானத்தில் வசிக்க ஆரம்பித்தார்கள் அவர்கள் […]

குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் : 67

“ஈகை யரிதெனினு மின்சொலினு நல்கூர்தல்ஓஒ கொடிது கொடிதம்மா – நாகொன்றுதீவினைக் கம்மியனால் வாய்ப்பூட் டிடப்படின்மற்றாவா விவரென்செய் வார்” தன்னால் பிறருக்கு ஈகை செய்ய முடியா நிலை இருந்தால் கூட இன்சொல் சொல்லலாம், அந்த இன்சொல்லை கூட சொல்லாமல் விரட்டுவது பெரும் கொடுமையிலும் கொடுமை, நாக்கிலே பூட்டு போட்டு கொண்ட கொல்லனிடம் மேற்கொண்டு என்ன பேசிபெற முடியும்? ஈகை செய்ய முடியா நிலையில் இன்சொல்லாவது பேச வேண்டும் அது புண்ணியம் என்கின்றார் குமரகுருபரர்

ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 130 – கலை ஞானம் / குறள் : 09

ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 130 – கலை ஞானம் / குறள் : 09 “இரேசக மாற்றி யிடையறாதே நிற்கில்பூரிப்ப துள்ளே சிவம்” இந்த குறளை பார்க்கும் முன் ஓளவ்வை முன்பு சொன்ன சில யோக ரகசியங்களை மீள புரட்டிகொள்ள வேண்டும் பூரகம் என்றால் உள்ளே இழுக்கும் மூச்சு ஒரு நாசியினை மூடி இன்னொரு நாசி வழியாக இழுப்பது, இழுத்த மூச்சை நிறுத்தி வைப்பது கும்பகம், பின் இன்னொரு நாசி வழியாக வெளியே விடுவது […]

சீனநாட்டு ஜிமிக்கி கப்பல்…..

ஒரு வழியாக இலங்கை ஹம்பாந்தோட்டா துறைமுகத்தில் இருந்து கிளம்பியிருக்கின்றது சீனாவின் உளவு கப்பலான “யுவான் வாங்க் 5”, ஆகஸ்டு 22 மாலை 4 மணிக்கு அது வெளியேறியதாக தரவுகள் தெரிவிக்கின்றான் உளவு இல்லாமல் காவல் இல்லை, உளவுபடையும் அதுகொடுக்கும் தகவலும்தான் ஒரு ராஜ்ஜியத்தை காக்கும் என்பது சாணக்கியனும் வள்ளுவனும் சொன்ன விஷயம், அது அன்றி அரசபடைகள் இல்லை அவ்வகையில் மனிதவழி உளவு பார்க்கும் கலையினை (human Intelligence) தொழில்நுட்ப காலம் தொழில்நுட்ப உளவு (Signal Intelligence) என […]

ஈரோட்டு ராம்சாமி இல்லையென்றால்

ஈரோட்டு ராம்சாமி இல்லையென்றால்…. ஈரோட்டு ராம்சாமி இல்லையென்றால் கல்வி இல்லை, பெண் உரிமை இல்லை என சொல்லும் கோஷ்டி சொல்லிகொண்டேதான் இருக்கும், உண்மையில் ராம்சாமி என்ன கிழித்தது என்றால் ஒன்றுமே இல்லை வைக்கம் போராட்டத்தில் கூட ஏற்கனவே நடந்த போராட்டத்தில் காங்கிரஸ் தலைவராக கலந்துகொண்டாரே அன்றி அப்போராட்டத்தை ராம்சாமி தொடங்கவுமில்லை தலமையேற்று நடத்தவுமில்லை ஆங்கில அடிவருடியான நீதிகட்சியில் ராம்சாமி இணைந்தார், ஆனால் அக்கட்சி அவரை எந்த பதவியிலும் அமர்த்தவுமில்லை, மக்கள் பிரநிதியாக ராம்சாமி ஆட்சியில் இருந்து எந்த […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications