பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ஆச்சார கோவை : 36

“சுடர் இடைப் போகார் சுவர்மேல் உமியார்இடர் எனினும், மாசுணி தம் கீழ் மேல் கொள்ளார்படை வரினும், ஆடை வளி உரைப்பப் போகார்பலர் இடை ஆடை உதிராரே என்றும்கடன் அறி காட்சியவர்” அதாவது ஒரு மனிதனுக்கும் விளக்குக்கும் இடையே உள்ள இடைவெளியில் நடந்து செல்லக்கூடாது. சுவர் மேல் உமிழக்கூடாது. பெரும் வறுமையும் கஷ்டமும் வந்தாலும் அடுத்தவர் பயன்படுத்திய படுக்கை விரிப்பு, போர்வையை பயன்படுத்தக்கூடாது, மிகப் பெரிய ஜனநெரிசலிலும் நம் ஆடை அடுத்தவர் மேல் படும் வண்ணம் நடக்கக்கூடாது. பலர் […]

இந்திய சுதந்திர வரலாறு : 08

சிவாஜிக்கு பின்னரான இந்துவிடுதலை போரை இரு பெண்கள் முன்னெடுத்து சென்றார்கள், வரலாற்றில் ஒவ்வொரு இந்தியனும் இந்துவும் கையெடுத்து வணங்கவேண்டிய மாதரசிகள் அவர்கள் புனே தொடங்கி தமிழகம் மதுரை வரை பெரும் இந்து ராஜ்ஜியத்தை உருவாக்கிவிட்டு 50 வயதில் காலமானான் வீரசிவாஜி, அவனுக்கு பின் அவன் மகன் சாம்பாஜியிடம் அவ்வளவு சாமார்த்தியமில்லை சிவாஜியிடமில்லா கேளிக்கையும் கொண்டாட்டமும் அவனிடம் குடிகொண்டன‌ அந்த சாம்பாஜியினை எளிதாக பிடித்து கொடூரமாக கொன்று அவன் மகன் சாகுவினை கைதியாக்கினான் அவுரங்கசீப், 1690களில் சிவாஜியின் இந்துராஜ்ஜியத்தை […]

மாகாண கட்சிகளுக்கு

சுதந்திர இந்தியாவில் மாகாண கட்சிகளுக்கு அனுமதி கொடுக்க கூடாது, அப்படி கொடுத்தால் அது பல்வேறு குழப்பங்களை நாட்டுக்கு கொடுக்கும், ஒவ்வொரு மாகாண கட்சியும் அரசியலுக்காக மாநில குழப்பங்களையும் பிரிவினைகளையும் தூண்டும் அது பெரும் விபரீதத்தை கொடுக்கும் என நேருவிடம் தேசாபிமானிகள் எவ்வளவோ மன்றாடினார்கள் ஆனால் உலக ஜனநாயகத்தை காக்க பிறந்திருப்பதாக தன்னை கருதிய நேரு அதனை மறுத்தார், அமெரிக்கா பிரிட்டன் என உலக ஜனநாயக தாய்நாட்டிலே மாநில கட்சிக்கு அனுமதி இல்லை, உலகில் எந்த ஜனநாயக நாட்டிலும் […]

மாய தேவர்

அதிமுக 1972ல் தொடங்கபட்டாலும் அக்கட்சியின் பலத்தை காட்டியது அது சந்தித்த முதல் தேர்தல் 1974ம் ஆண்டு திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதிக்கு நடந்தது திமுகவில் இருந்து பிரிந்த அக்கட்சியின் முதல் தேர்தல் என்பதால் பெரும் பரபரப்பு நிலவிற்று அப்பொழுது அதிமுகவின் வேட்பாளராக மாயன் என்பவர் நிறுத்தபட்டார், பின்னர் அவரின் சாதியும் சேர்க்கபட்டு “மாய தேவர்” என்ற அறிவிப்பு வெளியானது அண்ணா நாமம் வாழ்க என அடிக்கடி சொன்ன எம்ஜிஆரின் அண்ணா கொள்கை அப்படித்தான் மாறியிருந்தது அந்த தேர்தலில் அதிமுக […]

குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் : 56

“நட்பிடைக் குய்யம்வைத் தெய்யா வினைசூழ்ந்துவட்கார் திறத்தராய் நின்றார்க்குத் – திட்பமாநாளுலந்த தன்றே நடுவ னடுவின்மைவாளா கிடப்பன் மறந்து” நண்பனுக்கு வஞ்சகமாய் , அவனை வீழ்த்தும் சகல வழிகளையும் ஆராய்ந்து , பகைவன் பக்கம் சேர்ந்து நண்பனை ஒழித்துகட்ட நினைத்துகொண்டிருக்கும் வஞ்சகனுக்கு காலம் முடிந்தே விட்டது. ஒருவனின் பாவ புண்ணியத்தை நடுநிலையோடு அளக்கும் யமதர்மன் இந்த பாவத்தை கண்டு இறங்கி வராமல் இருக்க மாட்டான் என்பது பாடலின் பொருள் தம்மேல் நம்பிக்கை கொண்ட நண்பனுக்கு செய்யபடும் துரோகத்துக்கு ஒரு […]

ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 120 – தேர்ந்து தெளிதல் / குறள் : 08

“எல்லா வுலகத் திருந்தாலு மேத்துவார்கள்நல்லுலக நாத னடி” இக்குறள் “எல்லா உலகத்து இருந்தாலும் ஏத்துவார்கள் நல்லுலக நாதன் அடி” என பிரிந்து பொருள் தரும் மூவுலகு மட்டுமல்ல, 14 உலகங்களில் இருப்போர்களில் உண்மையினை உணர்ந்தவர்கள் எப்பொழுதும் பரம்பொருளை அடிபணிந்து போற்றி கொண்டே இருப்பார்கள் என்பது பொருள் (வாழ்வில் தொழில் , அந்தஸ்து, என பல‌ விஷயங்கள் பல மாந்தருக்கு உலகமாக தெரிந்தாலும் அங்கும் உண்மை ஞானம் கொண்டோர் எந்நிலையிலும் பரமனை போற்றுவார்கள் என்பதும் இன்னொரு பொருள்) எங்கு […]

ஆடி தபசு

இந்த பிரபஞ்சம் பெரும் மூலசக்தி ஒன்றால் படைக்கபட்டு இயக்கபடுகின்றது, மானிடன் புரிந்துகொள்ள முடியா பல சூட்சும வழிகளில் பல சக்திகளாய் பிரிந்து அது இந்த உலகை இயக்கி கொண்டிருக்கின்றது அந்த சக்திகள் பல வடிவில் உண்டு, அதனை மானுடன் புரிந்து கொள்ள கூடிய அளவில் அது பெயரிட்டு சொன்னாலும் , பல பிரிவுகளாய் விழும் அந்த அருவியின் மூலம் ஒன்றே என்றாலும் அறிவில் குறைந்த மானுடன் சில சர்ச்சைகளை செய்ய ஆரம்பித்தான் அறியாமையால் எழுந்த அந்த சர்ச்சைகள் […]

ஐன்ஸ்டீன், எடிசன் வரிசையில் கருணாநிதி. ஒரு பதற வைக்கும் காமெடி

ஐன்ஸ்டீன், எடிசன் வரிசையில் கருணாநிதி. ஒரு பதற வைக்கும் காமெடி இப்படி ஒரு காமெடியினை கிளப்பியிருப்பவர் கருணாநிதியின் முன்னாள் செயலாளர் ராஜமாணிக்கம், அன்னார் கருணாநிதிக்கு செயலாளராக இருந்தார் அதுவும் ஐ.ஏ.எஸ் தகுதி கொண்டிருந்தார் என்பதுதான் ஆச்சரியம் அவர் பேட்டியின்படி அவர் கண்ட சிறந்த IQ கொண்ட நபர் கருணாநிதிதானாம், உலகில் ஐன்ஸ்டீன் அம்பேத்கர் போன்றோரை சிறந்த IQ கொண்டவர்கள் என்பார்களாம் கருணாநிதி அப்படிபட்டவராம் சரி ஐன்ஸ்டீனை ஆய்வு செய்த யார் கருணாநிதியின் IQ வினை ஆய்வு செய்தார் […]

இந்திய சுதந்திர வரலாறு : 07

அந்த 15ம் நூற்றாண்டில்தான் இந்தியாவின் தலைவிதி பெரிதாக மாறிற்று ஏறகுறைய ஒரே நேரத்தில் இரு அந்நியர்கள் கால்வைத்தார்கள் ஒருவன் வடக்கே நிலம் வழியாக கால் வைத்தான் அவன் பெயர் மிர் சாகிர் உல் முகமட், அவன் தனக்கு தானே பாயும் புலி என ஒரு பட்டம் வைத்து கொண்டான், அதற்கு உஸ்பெக் மொழியின் பெயர் பாபர் இன்னொருவன் கடல் வழியாக இந்தியாவினை அடைந்திருந்தான் அவன் பெயர் வாஸ்கோட காமா, அது வரை ஐரோப்பாவுக்கு நேரடி கடல்வழி கிடையாது […]

புத்தரே ஞானம் பெற என்ன செய்யவேண்டும்?

புத்தரே ஞானம் பெற என்ன செய்யவேண்டும்? ம்ம்ம்.. இந்த இட ஒதுக்கீடு, புரட்சி, புண்ணாக்கு என எதுவும் பேசாமல் காட்டுக்கு சென்று அரசமரத்தின் கீழ் அமர வேண்டும், சினிமா அது இது என கோடிகளை தேடாமல் திருவோடு ஏந்தி பிச்சை எடுக்க வேண்டும் பின் எப்படி புரட்சி வெடிக்க்கும்? அன்பனே, அரசே வேண்டாம் என சென்றவன் நான், நீயோ அரசாங்கத்தின் இட ஒதுக்கீடு, ஆட்சியில் பங்கு என அரசியல் குழப்பம் விளைவிப்பதிலே குறியாய் இருக்கின்றாய், உனக்கு ஒரு […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications