விநாயகர் அனுபூதி : 21 to 25
விநாயகர் அனுபூதி : 21 “மகப்பே(று) அருள்வான் மகிழ்வாய் நிதியைஅகத்தே தருவான்: அணியன்: கரிமாமுகத்தான் அடியை முறையாய் நிறையாய்ச்செகத்தீர் தொழுமின்! தொழுமின் தினமே” “விநாயகன் குழந்தைப் பேற்றினை அருள்வான; இல்லங்களில் எல்லாம் மகிழ்ச்சியுடன் செல்வத்தைத் தருவான்; அவன் அருகிலேயே இருப்பான்; விநாயகனின் திருவடியை முறையாக நாள் தோறும் தொழுவீர்களாக” இப்பாடல் விநாயகப் பெருமானைப் பணிந்தால் சந்ததி பெருகி பெருவாழ்வு வாழும் என்பதைப் போதிக்கின்றது. விநாயகப் பெருமான் நல்ல பிள்ளைகள் அமையும் யோகத்தை அருள்பவர், பிள்ளைச் செல்வம் அருள்வதாலே […]