காளிதாசனின் ரகுவம்சம் : 11 to 15
காளிதாசனின் ரகுவம்சம் : 11 தனக்கொரு மகன் பிறந்தான் எனும் அமிர்ததுக்கு ஈடான செய்தி கேட்டதும் சூரியனை மகனாய்ப் பெற்ற காசிப முனிவரைப்போல் மகிழ்ந்த திலீபன் அந்தச் செய்தியினைச் சொன்ன பணியாளனுக்குத் தன் செங்கோல், வெண்கொற்றக்குடை, மணிமுடி தவிர வேறு எல்லாமும் அள்ளி அள்ளி கொடுக்கும் அளவு எல்லையே இல்லா மகிழ்வினை கொண்டவனாய் மகனைக் காண விரைந்தான். அங்கே கலைமான் மடியில் கன்றினைப்போல் சுதக்ஷனை அருகே கிடந்த தன் மகனைக் காற்றில்லா இடத்தில் ஆடாத தாமரை மலர் […]