காளிதாசனின் சாகுந்தலம் : 16
காளிதாசனின் சாகுந்தலம் : 16 சாகுந்தலை உள்ளிட்ட அனைவரையும் வரவேற்று சொன்னார் சோமநாத புரோகிதர், “அதோ எங்கள் மன்னர் எழுந்து நிற்கின்றார் பாருங்கள். நீங்கள் யார்? எக்குலம்? எந்த இனம்? எனத் தெரியாமலே உங்களை எதிர்பார்த்து எழுந்து நிற்பது அவரின் சிறப்பான குணம் என்பதைக் கவனியுங்கள். முன்பின் தெரியாத புதியவரையும் எழுந்து நின்று வரவேற்பதுதான் அவரின் போற்ற வேண்டிய பண்பு” சாரங்கன் சொன்னான், “புரோகிதரே, மண்ணில் இருந்துதான் நாம் மரமாக உருவானோம் எனும் நன்றி மரத்துக்கு உண்டு. […]