பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ஜூன் 4 ராஜிவின் மாபெரும் துணிச்சல் தெரிந்த நாள்

இலங்கையில் வடமாராட்சி என்றொரு பகுதி உண்டு, அன்று புலிகளின் கோட்டை அது அப்பொழுது இருந்த இலங்கை அதிபர் ஜெயவர்த்தனே ஆப்பரேஷன் லிபரேஷனை தொடங்கினார், அதாவது புலிகளை முற்றிலும் ஒழிப்பது பிரபாகரனின் ஏ1 முகாம் உட்பட பல்லாயிரம் தமிழரோடு அப்பகுதியினை வளைத்தது சிங்களபடை, புலிகள் அப்பொழுது தற்கொலை தாக்குதல் வேறு நடத்தியதில் சிங்கள படை கொலை வெறியில் இருந்தது மில்லர் எனும் புலி நடத்திய தாக்குதலில் பல ராணுவத்தார் கொல்லபட சீறி நின்றது சிங்கள தரப்பு இனி பொறுப்பதில்லை, […]

ஒரு வழியாக டிரெம்ப் வழிக்கு வந்துவிட்டார்

ஒரு வழியாக டிரெம்ப் வழிக்கு வந்துவிட்டார், வடகொரிய அதிபரை சிங்கப்பூரில் சந்திக்க ஒப்புகொண்டுவிட்டார் விட்டால் புட்டீன் வடகொரிய அதிபரை சந்தித்துவிடுவார் அதன் பின் நம் மதிப்பு என்னாவது என ஓடி வருகின்றார் டிரம்ப் அமெரிக்க அதிபர் வருகின்றார் என்றால் அமெரிக்க உளவுதுறை முதல் பாதுகாப்பு அதிகாரிகள் வரை குவிந்து பாதுகாப்பினை பலபடுத்துவார்கள் கடலில் நீர்மூழ்கி முதல் வானத்தில் செயற்கைகோள் வரை தீவிரமாக அமெரிக்க அதிபருக்காக காவல் செய்யும் அவர்களிடம் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் காவலை செம்மைபடுத்துகின்றோம் என்பதை […]

கலைஞர் இருக்கட்டும், ஆனால் பேசா கலைஞராக இருக்கட்டும் என்ற முடிவோ என்னமோ?

அந்த சலசலப்பு ஆங்காங்கே எழுந்தது, நேற்று பல இடங்களில் பெரும் குரலாகவே கேட்டது அதாவது ஏன் கலைஞருக்கு வெளிநாட்டு சிகிச்சைகள் அளிக்கவில்லை, அல்லது வெளிநாட்டு மருத்துவகுழுவினை வரவழைக்கவில்லை முதிய வயதுதான் சந்தேகமில்லை, ஆனால் மலேசியாவின் மகாதீர் போல ஒரு மெடிக்கல் மிராக்கிள் கலைஞர் அவர் வாழ்ந்த காலத்தில் ஒரு நாள் கூட நோயில் விழுந்ததில்லை, விபத்துக்களில் சிக்கிய காலம் தவிர அவர் அவராகவே இருந்தார் அவர் குடும்பத்தாருக்கும் நீண்ட ஆயுள் ஒருவரம் அவரின் இரு சகோதரிகளும் 95 […]

ஸ்னொலினுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் ….

அவள் பள்ளி மாணவி, அவளுக்கு விவரம் தெரிய ஆரம்பித்ததில் இருந்தே தெரிந்ததெல்லாம் ஸ்டெர்லைட்டால் ஏற்படும் பாதிப்பு அந்த பாதிப்பினை கண்ணால் கண்டே வளந்த பெண் அவள், 11 வருடமாக அதன் பாதிப்பை அணு அணுவாய் உணர்ந்தவள் அதனால்தான் எல்லா மக்களையும் போல தன் தாயோடு போராட வந்தாள். தமிழ்சமூகம் எப்படிபட்டது? 10 வயது கடந்தாலே பெண்ணை பொது இடங்களுக்கு அனுப்புமா? ஆனால் அப்பெண் வந்திருக்கின்றாள், வாழ்வா சாவா? என அச்சமூகம் கதறி நின்றபொழுது அவளுக்கும் வேறு தெரிவு […]

திராவிட குரல் செல்வனுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்

அக்கால கட்டத்தில் அப்படி ஒரு குரலை தேடிகொண்டிருந்தார்கள், சீர்காழி போல வெண்கல குரலும் அல்லாமல், ஸ்ரீனிவாஸ் போல புல்லாங்குழல் குரலும் அல்லாமல் இடைபட்ட குரலை தேடிகொண்டிருந்தார்கள் அக்காலம் ராமசந்திரன், சிவாஜி கணேசன் போன்றோர் உச்சத்தில் இருந்தாலும் சில இளைஞர்கள் வந்துகொண்டிருந்த காலமது, அவர்களுக்காக தேடிகொண்டிருந்தார்கள். அப்பக்கமோ அந்த இளைஞன் பொறியில் படிப்பினை பாதியில் விட்டுவிட்டு பட்டபடிப்பில் ஓப்பேற்றிகொண்டே இசைகுழுக்களில் பாடிகொண்டிருந்தான். மிக திறமையான பாடகன் அன்றே சுசீலாவோடு சில மேடைகளில் பாடும் அளவு திறமை இருந்தது திரையுலகின் […]

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவையொட்டி 67 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை – தமிழக அரசு

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவையொட்டி 67 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை – தமிழக அரசு இப்பொழுது யாராவது 7 தமிழர் விடுதலை வேண்டும் இல்லை சிறை உடைப்போம் தமிழரை மீட்போம் என கிளம்புவார்களா என்றால் இல்லை இந்த கும்பல் முன்பு செய்த அட்டகாசம் என்ன? திருமுருகன் எல்லாம் சிறை உடைப்போம் என்றெல்லாம் முழங்கினார் காங்கிரஸ் , திமுக அரசு என்றால் இவர்கள் 7 தமிழர் என பொங்குவதும். பாஜக பழனிச்சாமி அரசு என்றால், “7 பேரா? அவர்களை […]

காலா நிச்சயம் ஓடாது என்பது வேறு விஷயம்….

ரஜினியினை நிலை குலைய வைக்க வேண்டும், அவர் அரசியல் பக்கமே வராமல் அடித்துவிரட்ட வேண்டும் என்றொரு கும்பல் கிளம்பி இருப்பது தெரிகின்றது கன்னடத்தில் காலா படத்திற்கு வரவேற்பு இருந்தால்தான் ஆபத்து, கன்னடர்கள் எதிர்ப்பது நல்ல விஷயம். அப்படியே அங்கிருந்து இங்கு வந்த எல்லா நடிகர்களையும் விரட்டி வாட்டாள் நாகராஜ் கழுத்தை பிடியுங்கள் என அனுப்பினால் விஷயம் தீரும் ஆனால் வெளிநாட்டில் ரஜினி படத்திற்கு தடை என சில கிளம்பி இருகின்றன, யாரென்று பார்த்தால் ஈழதமிழர்கள் அதாவது ரஜினி […]

சட்டசபைக்கு ஸ்டாலின் தலமையில் திமுக திரும்பியது : செய்தி

சட்டசபைக்கு ஸ்டாலின் தலமையில் திமுக திரும்பியது : செய்தி “நாமளும் பன்னீரும் செய்றதுதான் காமெடின்னு நினைச்சா இந்த துரைமுருகன் ஸ்டாலின் கூட்டணி நம்மை விட காமெடியாக இருக்கும் போல… அவனுக போக்கில போறானுக, திடீர்னு வாரானுக. நாமதான் ஒருமாதிரின்னு நினைச்சா அவனுக நம்மளை விட மகா மோசம்.”

இங்கிவளை யாம் பெறவே என்ன தவம் செய்தோமோ…

ஒலிம்பிக் சின்னத்தில் 5 கண்டங்களை இணைக்கும் விதமாக 5 வளையங்கள் இருக்கும் அப்படி ஆசியா, ஐரோப்பா எனும் இரு கண்டங்கள் என்னால் இணைகின்றன என்பதை தலையில் இரு வளையங்களுடன் ஐரோப்பாவில் தலைவி குறிப்பாக உணர்த்திய தருணம் இங்கிவளை யாம் பெறவே என்ன தவம் செய்துவிட்டது சங்கம்  

இனி என்ன செய்ய என் உறவே?

“இந்த எளிய தமிழ்பிள்ளையினை ஓட ஓட அடிச்சபின்னாடி இனி என்ன செய்ய என் உறவே? ஈழமாவது , பிரபாகரனாவது எல்லாவற்றையும் தூக்கி போட்டுவிட்டு திமுக பக்கம் போய்விடலாம் சொந்தமே, இனி அவர்கள்தான் நமக்கு பாதுகாப்பு கலைஞரை கொலை செய்ய முயன்றதாக வெளியேற்றபட்ட‌ வைகோவே திமுகவுடன் சேர்ந்தவிட்டபின்பு நான் ஏன் சேரகூடாது என் இனமே இந்த தினகரனும், வைகுண்டராஜனும் இல்லைன்னு வச்சிக்க்க, இந்த நொடியே சீமான் அறிவாலய வாசலில் கிடப்பான், ஆனால் அந்த சனியன்கள் என்னை விடுவதில்லை என் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications