பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

மிக்க சொதப்பியவர் முதலில் விஜயகாந்த், இப்பொழுது ரஜினி

அரசியல் களத்தில் இறங்கிவிட்டால் மானம், கோபம் இவற்றை எல்லாம் உடனே களைந்து விட வேண்டும். மிக முக்கியமாக எழுத்து,பேச்சு என எல்லாவற்றிலும் வலு கவனமாக இருக்க வேண்டும் (மற்றபடி பழிவாங்குதல், சதிதிட்டம், மிரட்டல் , உருட்டல் எல்லாம் மறைமுகமாக செய்ய வேண்டும்) யாரையும் பொதுஇடத்தில் பேசும்பொழுதோ, எழுதும்பொழுதோ காயபடாமலோ, ஆத்திரபடவைக்காமலோ செல்வது தனிபயிற்சி அண்ணா அதில் ஈடு இணையற்று இருந்தார், கலைஞர் அதை அப்படியே பின்பற்றினார் ஆற்றல் அதிகம் இல்லை என்றாலும் ஸ்டாலின் பத்திரிகையாளர் சந்திப்பில் ஓகே, […]

புத்தகம் இல்லா நூலகம், தெய்வம் இல்லா ஆலயம்

37ஆண்டுகளுக்கு முன்பாக இந்நேரம் யாழ்பாணத்தில் அந்த நூலகம் எரிய ஆரம்பித்தது, தரப்படுத்துதல் எனும் இடஒதுக்கீட்டினை எதிர்த்து ஈழமாணவர்கள் போராடிகொண்டிருந்த நேரம் அது, தனிஈழம் மட்டுமே தீர்வு என சொல்லி அரசியல்வாதிகளும் தூண்டிவிட்ட காலம் அது, தேர்தல் கால பிரச்சார கூட்டத்தில் சில போலிசார் கொல்லபட அது கலவரமாக வெடித்தது. அக்காலத்தில் யாழ்பாண தமிழரின் அறிவின் அடையாளமாக அந்நூலகம் இருந்தது. அங்கிருந்த புத்தகங்கள் அரியவை இனி கிடைக்காதவை. வாசலில் சரஸ்வதி சிலையும் அழகான கட்டிடமாக பெரும் அறிவு பொக்கிஷமாக […]

சிலை காக்கும் அதிகாரி பொன் மாணிக்கவேல்

ஒவ்வொரு இனத்திற்கும் தனிபெரும் அரசன் என்றொருவன் இருப்பான், அம்மக்கள் அவனை அப்படி கொண்டாடுவார்கள், அவன் சம்பந்தமான பொருட்களை கண் போல் பாதுகாப்பார்கள் காலம் மாறினாலும், அந்நாடு வீழ்ச்சி அடைந்தாலும் அந்த பெருமையின் அடையாளத்தை அழியவிடமாட்டார்கள் அரசன் அடையாளம் என்று அல்ல, தங்கள் வரலாற்று சின்னங்களை எல்லாம் அப்படி பாதுகாப்பார்கள் தமிழருக்கு ராஜராஜசோழன் மாபெரும் அடையாளம், சந்தேகமில்லை அவன் காலத்தில் அவன் தென்கிழக்கு ஆசியாவின் ஒரே மன்னன். அரசனுக்கெல்லாம் அரசன் தஞ்சை தரணி அவனால் பெரும்புகழ் பெற்றது. அவனின் […]

தூத்துகுடியில் ரஜினி : பெரும் கூட்டம் கூடி செல்பி எடுக்கின்றார்கள்

தூத்துகுடிக்கு ரஜினி சென்றிருக்கின்றார், 13 பேர் செத்த துக்கம் கொஞ்சமும் இல்லாமல் பெரும் கூட்டம் கூடி படம் எடுக்கின்றார்கள் ஒரு துக்க நிகழ்வு என்பதோ, அவர் வந்திருப்பது ஆறுதல் சொல்ல என்பதோ கொஞ்சமும் இவர்கள் நினைவில் இல்லை இந்த கூட்டம் தமிழகத்தின் சாபக்கேடு துப்பாக்கி சூடு நடத்துவதாக இருந்தால் இப்பொழுது நடத்தலாம், துப்பாக்கி என்ன? பீரங்கி தாக்குதல் ஏவுகனை தாக்குதல் கூட நடத்தலாம் இந்த நச்சுபுகை குண்டாவது சிரியாவிடம் இருந்து கடன் வாங்கி அங்கு வீசவேண்டிய நேரமிது […]

திமுக அத்தியாயத்தில் இந்நாள் கறுப்பு நாள்

இவர்களுக்கு வாக்களித்து சட்டமன்றத்தில் எங்கள் பிரச்சினைகளை பேசுங்கள் என அனுப்பி வைத்தால் அறிவாலயத்தில் போட்டி சட்டமன்றம் நடத்துகின்றார்களாம் இதெல்லாம் கேலி கூத்தான விஷயங்கள் ஸ்டெர்லைட்டில் அதிமுக, திமுக என இருவரின் கரங்களும் கட்டாயம் உண்டு. தலைகீழாக நின்றாலும் ஸ்டாலின் மறைக்க முடியாது தமிழகத்தில் உள்ள ஆயிரம் பிரச்சினைகளில் ஸ்டெர்லைட்டும் ஒன்றே தவிர தமிழகத்தின் ஒரே பிரச்சினை அது அல்ல‌ காவேரி முதல் கரைகாணா சிக்கல் ஏராளம் உண்டு, ஒவ்வொரு தொகுதியிலும் ஆயிரம் பிரச்சினை இருக்கின்றது அதுவும் ஆலை […]

இனி இருப்பவர்களையாவது சைமன் காப்பாற்ற வேண்டாமா?

அப்பொழுது அங்கிள் சைமன் சேகுவேரா தம்பி, பெரியாரின் பேரன் என சொல்லிகொள்வார், பிரபாகரன் கணக்கில் வரவில்லை அப்பொழுது ஒருமுறை முத்துராமலிங்க தேவர் சமாதிக்கும் வரும் வழியில் இம்மானுவேல் சேகரன் சமாதிக்கும் மாலை போட்டு வணங்கி வந்தார் என்னய்யா இது கொன்றவனுக்கும் மாலை, செத்தவனுக்கும் மாலை என பலர் கேட்டார்கள், அங்கிள் அமைதியாக சொன்னார் “தம்பி, இத நுட்பமா விளங்கிகிடனும், இருவருமே இந்த மண்ணின் தலைவர்கள். அன்று நான் இருந்தால் இருவரையும் அழைத்து அய்யா நாம் இருவருமே இந்த […]

அழகின் தலைமகள் நிற்கும் அற்புத காட்சி

  கலைகளின் தலைநகரான பாரீசில் அழகின் தலைமகள் நிற்கும் அற்புத காட்சி பாரீஸ் கலை அழகா? இந்த சிலை அழகா? என வியந்து நிற்கின்றது பிரான்ஸ்..

தூத்துகுடி செல்கின்றார் ரஜினி : செய்தி

நடிகரான என்னை பார்த்தால், தூத்துக்குடி மக்கள் மகிழ்ச்சி அடைவார்கள்: ரஜினிகாந்த் ஆக அரசியல்வாதி ரஜினியினை யாரும் விரும்பமாட்டார்கள் , அதுவும் ஆன்மீக அரசியல்வாதியினை சுத்தமாக விரும்ப மாட்டார்கள் என்பதும் அவருக்கே புரிகின்றது. இதே எல்லைக்குள் ரஜினி நிற்பது நல்லது. காவேரியில் ரஜினி என்னவோ சொல்லிவிட்டதால் கர்நாடகாவில் அவர் படத்தை விடமாட்டார்களாம் இனி தமிழகமும் கன்னட நடிகர் நடிகைளுக்கு வாய்ப்பு கொடுக்கமாட்டோம் என சொல்லிவிடுவதுதான் சரி பாரதிராஜா இனி படம் இயக்கும் எண்ணத்தில் இல்லை, சைமனும் இல்லை என்பதால் […]

பழனிச்சாமிக்கும் கீதா ஜீவனுக்கும் இடையிலான போராக மாறிவிட்டது

ஸ்டெர்லைட் விவகாரம் இப்ப்பொழுது பழனிச்சாமிக்கும் கீதா ஜீவனுக்கும் இடையிலான போராக மாறிவிட்டது அதாவது ஸ்டெர்லைட்டுக்கு சிகப்பு கம்பளம் விரித்தது ஜெயா என்றால் அதை வளரவிட்டதில் திமுக பங்கும் உண்டு கலைஞரின் முரட்டு பக்தரான தூத்துகுடி பெரியசாமி, ஸ்டெர்லைட்டுக்கு முரட்டு ஊழியராக இருந்தார், உழைத்தார் சம்பாதித்தார் அவரின் மகள்தான் கீதா ஜீவன், கடந்த வருடம் வரை இவரின் லாரிகள் ஸ்டெர்லைட்டுக்குள் ஓடியது இப்பொழுது ஸ்டெர்லைட் விரிவாக்கத்தில் தூத்துகுடி விழித்துகொள்ள கீதா ஜீவன் போராட வந்தார் சம்பாதிக்கும் மட்டும் ஸ்டெர்லைட்டுடன் […]

சாதி எனும் வியாதி

எங்கும் எதிலும் முதல் மரியாதை பெறவேண்டும் என்பது சிலருக்கு பிறப்பிலே வரும் ஒருவித கொள்கை, சிலருக்கு வளர்பில் வருகின்றது. அது சிறிய ஊர்களில் கோவில் போன்ற பொது இடங்களில் அப்பட்டமாக தெரிகின்றது இது இந்து ஆலயங்கள் மட்டுமல்ல, கிறிஸ்தவ ஆலயங்களில் கூட நடப்பதுண்டு, அது வெளியே தெரிந்தது, இன்னும் தெரியா வரலாறுகள் ஏராளம் கிராமங்களில் இப்படியான சிக்கல்கள் வரும்பொழுது சாதியினை துணைக்கு இழுக்கின்றார்கள், விளைவு அது சாதிய மோதல்களாக உருவெடுக்கின்றன‌ உதாரணமாக முன்பு வடக்கன்குளத்தில் நடந்த கலவரங்களை […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications