பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

அப்படி ஈழத்துல என்னடா செஞ்சான் பிராமணன்?

அண்ணே உங்களுக்கு ஒண்ணுமே தெரியல்ல, இவ்வளவு அப்பாவியா இருக்காதீங்க ஆபத்து, அந்த பிராமணாலதான் ஈழத்துல அப்படி அழிச்சி போச்சி நம் இனம், வாங்க வந்து விளக்கு ஏந்தி அஞ்சலி செலுத்துங்க‌ அப்படி என்னடா நடந்துட்டு? அப்படி ஈழத்துல என்னடா செஞ்சான் பிராமணன்? அண்ணே நீங்க பிராமணனுக்கு சப்போர்ட் பண்றீங்க, அவனுக பொல்லாதவனுக. இப்ப கூட பாருங்க இந்திய ராணுவத்துல ஒரு பிராமணும் இருக்க மாட்டான், சாக மட்டும் அடுத்தவன் வேணும் அவனுக்கு. அப்படித்தான் இலங்கையில நம் இனத்தையும் […]

அந்த ஆன்ம வலியிலும் அமைதிகாத்து நின்றது இத்தேசம்…

புலிகளுக்கு எப்பொழுதுமே ஒரு தந்திரம் உண்டு, சிங்களரை தாக்கிவிட்டு ஊருக்குள் ஓளிவது. புலிகளை தேடுகின்றோம் என வரும் ராணுவம் ஊரையே கொளுத்தும் இதனால் பலர் பாதிக்கபட உடனே ராணுவத்தை எதிர்க்க எங்களோடு கிளம்புங்கள் என ஆள்சேர்ப்பர் புலிகள் அவர்களின் எக்கால தந்திரமும் இதுவேதான் இப்படித்தான் 1983ல் சிங்கள வீரர்களை கொன்று பெரும் கலவரத்தை ஏற்படுத்தி ஆள்பிடித்து இயக்கம் வளர்த்தனர் இதற்கு அவர்கள் வைத்த பெயர் என்ன தெரியுமா? “அம்மை நோய்க்கு மருந்து செலுத்தும்பொழுது முதலில் காய்ச்சல் வரும், […]

ரஜினி என்றால் தன் சினிமாவில் ஏதாவது ஒரு பெண்ணோடு தகறாறு செய்வார்

ஒரு மலேசிய தமிழ் முதியவர் முன்பொருமுறை சொன்னார் “என்னய்யா இந்த ரஜினிபய, எல்லா படத்திலேயும் ஏதாவது ஒரு பொம்பளகிட்ட சண்ட போட்டுகிட்டே இருக்கார், அதில ஏகபட்ட‌ அட்வைஸ் வேற, உங்க ஊர் பெண்களுக்கு எல்லாம் கோபம் வரலியா? சரி அப்படியும் சினிமாவுல பெண்களோட சண்டை போடும் ரஜினி, நிஜத்தில் ஜெயலலிதாவாவினை எதிர்ப்பாரா என்றால் இல்லை. சில அறிவுரையாவது ஜெயாவிற்கு சொன்னால்தான் என்ன?” ரஜினி படங்களை பற்றி அவரின் அபிப்ராயம் அப்படி இருந்திருக்கின்றது, ரஜினி என்றால் தன் சினிமாவில் […]

மிஸ்டர் செயல்தலைவர்@அறிவாலயம்

மிஸ்டர் செயல்தலைவர்@அறிவாலயம் மாற்று அரசியல், நீதி, நேர்மை, நியாயம், பெருந்தன்மை என நாட்டாமை விஜயகுமார் போல முழங்கிகொண்டிருக்கும் தாங்கள், ராஜிவ் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தபோகும் முதல் திராவிட கட்சி தலைவர் எனும் பெயரினை பெற தயாரா? இல்லாவிட்டால் இந்த நீதி, நியாயம், நேர்மை, மாற்று அரசியல் பற்றி எல்லாம் தயவு செய்து பேசாதீர்கள் ஆனால் உங்களை வெறுப்பேற்ற‌ மய்யமோ, ஆன்மீகமோ செல்ல‌ வாய்ப்பு அதிகம் உள்ளது தினகரனே சென்றாலும் ஆச்சரியமில்லை கர்நாடகாவில் ஜனநாயகம் நிலைநாட்டபட்டுள்ளது : தினகரன் […]

ராஜிவ் நிச்சயம் தமிழகத்து ரட்சகர்

தமிழ்நாட்டில் 27 ஆண்டுகளாக ஒரு பெரும் கொடுமை நடக்கின்றது, மாபெரும் நன்றிகெட்டதனம் நடக்கின்றது இதில் திமுக அதிமுக என இரண்டிற்குமே தந்திரம் உண்டு, சில அரசியல் கணக்கும் உண்டு. மிக சிரமபட்டு தந்திரமாய் அதை மறைப்பார்கள் அல்லது நகர்வார்கள் புலிகளும் இந்திய எதிரிகளும் , காங்கிரஸ் எதிர்களும் இங்குள்ள தமிழுணர்வாளர்களை தூண்டிவிட்டு அந்த இடம் மக்கள் மனதில் வராதவாறு பார்த்துகொள்வார்கள் ஆம், நேருவின் பேரனும் இந்திராவின் மகனும் இத்தேசத்தின் கென்னடியாக துணிச்சலாக இருந்த ராஜிவ் தமிழகத்தில்தான் கொல்லபட்டார், […]

என்றும் இந்தியாவின் பாசத்திற்குரிய தியாக தலைவன் எங்கள் ராஜிவ்

அந்த மனிதன் இன்று ஐரோப்பாவில் எங்கோ வாழ்வாங்கு வாழ்ந்து கொண்டிருக்க வேண்டியவன், அரசியலுக்கும் அவருக்கும் அன்று துளியும் சம்பந்தமில்லை. நேருவின் பேரன் என்ற பெருமையோடு வாழவேண்டியவன் ஆனால் 27 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் ஒரு பொட்டல் காட்டில் சிதறி கிடந்தார் ஒரு மனிதனின் தலைவிதிபடியே வாழ்வு அமையும், அந்த விதியின் முடிவை நோக்கியே சூழ்நிலைகள் ஒருவனை கொண்டு செல்லும், மானிட வாழ்வின் பெரும் விசித்திரமிது, மதியினால் தப்பவேமுடியாது, பெரும் ஞானி சாணக்கியனும், பல ஞான நூல்களும், ஞானிகளும், […]

தலைவி குஷ்பு கெத்து, அவர் தமிழ்நாட்டு முத்து  

உலகமே வியக்கும் தங்க தலைவிக்கு உறுதுணையாக இருக்கும் சங்கத்தின் உறுப்பினர்களை ஒன்றிணைக்கும் விதமாக  தலைவியின் நல்லாசியுடன் வாட்சப் குரூப் தொடங்கபட்டுள்ளது இதன் மூலம் சங்கத்தின் நடவடிக்கைகள், தலைவி ஆதரவு கொள்கைகளை வேகமாக விவாதிக்க முடியும், செயல்பட முடியும் உலகெல்லாம் இருக்கும் தலைவியின் இரும்பு தொண்டர்கள் உடனடியாக செயலாளர் Periya Samy அவர்களை , பொருளாளர் Senthil Kumar Chennaiஅவர்களை தொடர்பு கொண்டு குழுவில் இணையுமாறு சங்கம் கேட்டுகொள்கின்றது “தலைவி குஷ்பு கெத்து, அவர் தமிழ்நாட்டு முத்து ….”  

புலிகளுக்கும் மோசே தயானுக்கும் என்ன சம்ப்ந்தம் ?

மோஷே தயானின் பிறந்த நாள் இன்று, ஆச்சரியமாக இதே நாளில்தான் புலிகளும் முடிந்ததாக அறிவிக்கபட்டது புலிகளுக்கும் மோசே தயானுக்கும் என்ன சம்ப்ந்தம் என்றால் கண்டிப்பாய் உண்டு 1983ல் ஈழபோராளிகளுக்கு பயிற்சி என்றவுடன் புலிகளை தவிர எல்லோரும் அராபத்திடம் பயிற்சிபெற பாலஸ்தீனம் சென்றனர், உமா மகேஸ்வரன், பத்மநாபா எல்லாம் அவ்வகை. புலிகள் இலங்கையிலே கண்ணில்பட்டோரை கொன்று பயிற்சி என சொல்லிகொண்டிருந்தனர். இந்தியா இதன் பின்பே மொத்தமாக எல்லோரையும் அழைத்து பயிற்சி அளித்தது எனினும் பாஸ்தீன அராபத் என்பவரே முதலில் […]

இதற்கா அவ்வளவு கஷ்டபட்டு காங்கிரசை விரட்டினோம்?

“அடேய்… கன்னடத்துல காங்கிரஸ் ஜெயிச்சா இங்க உள்ள திமுக எல்லாம் ஏன் இப்படி கத்துறீங்க‌ இது ஆபத்துடா, நாளைக்கு நம்மகிட்டயே காங்கிரஸ் வந்து ஜெயிக்க போறோம் 100 சீட் கொடு, ஆட்சியில் பங்குகொடுன்னு வந்துரும்டா குமாரசாமி மாடல்ல காங்கிரஸ் இருக்கட்டும் திமுக ஆதரவு கொடுக்கட்டும்னு மிரட்டுவானுக . நீதி நேர்மை மதவாத ஆபத்துண்ணு நீங்களும் அப்படியே செஞ்சு தொலைச்சா காங்கிரஸ் வளந்துரும்டா… இதற்கா அவ்வளவு கஷ்டபட்டு காங்கிரசை விரட்டி விட்டோம் பூரா திமுக பயலும் இப்போ காங்கிரச […]

போரியல் மேதை மோசே தயான்…

வரலாற்றில் அலெக்ஸாண்டர், நெப்போலியன், ராஜராஜ சோழன், சீசர், ஆண்டனி என பலர் நிற்கின்றார்கள். எப்படி நிற்கின்றார்கள் என்றால் போர்களத்தில் அவர்கள் காட்டிய வீரம் அப்படி, அதைவிட முக்கியம் வியூகம் வியூகம் என்றால் என்ன? தங்களிடம் உள்ள ஆயுதம், அது தாக்கும் தூரம் அது கொடுக்கும் சேதாரம் இவற்றை கணித்து எதிரியின் நகர்வை கணித்து, விவேகமாக அதே நேரம் வீரமாக தாக்குவது கூடவே தகவல் தொடர்பு, பூகோள அமைப்பினை பயன்படுத்துவது, தகவல் தொடர்பு எல்லாமும் முக்கியம், ராணுவ உளவு […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications