பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

பாலகுமாரன் : தனிபெரும் எழுத்தாளனுக்கு ஆழ்ந்த அஞ்சலி

தமிழக எழுத்தாளர் வரிசையில் தனி இடம் பிடித்தவர் பாலகுமாரன், சோழநாட்டு கம்பனின் தமிழ் அவருக்கு அனாசயமாய் வந்தது எழுத்துலகில் ஒருவித ரசனையான எழுத்தினை காட்டினார், அவரின் எழுத்தெல்லாம் சமாதனத்தையும் அன்பையும் சமத்துவத்தையும் தாங்கியே வந்தன‌ நாவல்களில் தனி முத்திரை பதித்துவிட்டு சினிமா உலகிற்கும் வந்தார் சுஜாதா போலவே பாலகுமாரனின் வசனங்களும் காலத்தினை வென்றவை ‘நாயகன்’ ‘குணா’, ‘செண்பகத்தோட்டம்’, ‘மாதங்கள் ஏழு’, ‘கிழக்கு மலை’, ‘ஜென்டில்மேன்’, ‘காதலன்’, ‘ஜீன்ஸ்’, ‘பாட்ஷா’, ‘முகவரி’, ‘சிட்டிசன்; என எழுதி குவித்தார், அற்புதமான […]

தமிழகம் பெரியார் பூமி , இங்கு பாஜக நுழைய முடியாதாம்

தமிழகம் பெரியார் பூமி அதனால் இங்கு பாஜக நுழையமுடியாது என்றெல்லாம் சொல்லி கொண்டிருக்கின்றார்கள். எந்த சித்தாந்தையும் தாங்கி நடத்த நல்ல வாரிசு தலைவர்கள் வேண்டும் லெனினுக்கு பின் ஸ்டாலின் அப்படி தாங்கினார், அதன் பின் வந்த தலைவர்கள் உருப்படி இல்லை சோவியத் சிதைந்தது ஆனால் மாவோவிற்கு பின் இன்று ஜின்பெங்க் வந்து தாங்கியதில் சீனா நீடிக்கின்றது இங்கு பெரியாரின் அரசியல்வாரிசாக அண்ணா வந்தார், அவரை தொடர்ந்து கலைஞர் வந்தார் அதன் பின் எங்கிருக்கின்றார்கள் நல்ல தலைவர்கள்? அப்பக்கம் […]

தமிழகத்திலும் நம்மை வீழ்த்தி பாஜக ஆட்சிக்கு வருமா?

இன்னும் கொஞ்சநேரத்தில் இங்கு லட்டு வழங்கபடும்…. இந்த கட்டிடம் பிறமாநிலங்களின் வெற்றிக்கு லட்டு வழங்குவதற்காகவே இங்கு அமைக்கபட்டிருக்கின்றது, அவ்வளவு நல்ல மனது அவர்களுக்கு  கர்நாடக முடிவு தெரிந்தாயிற்று, இனி அடுத்த தேர்தல் எங்கே? ராஜஸ்தானா? இனி அங்கு கச்சை கட்டுவார்களா? எப்படியும் தமிழ்நாட்டு சனியன்கள் 3 ஆண்டுகளுக்கு அசையாது என தெரிகின்றது, அடுத்த மாநிலங்களாவது மகிழ்ந்திருக்க எதிர்ப்பார்ப்போம் என்ன சொல்லுங்கள், அக்காவினை பற்றி ஒரு கருத்தினை கணித்தால் மிக சரியாக நிறைவேற்றி கொடுப்பார்கள் இதோ லட்டு கொடுத்தாயிற்று […]

தினகரனோ, திவாகரனோ பெங்களூர் பக்கமே செல்லமுடியாது

முந்தைய காங்கிரஸ் சித்தராமையா அரசு மூலம் சசிகலா சிறையில் பெற்ற சலுகைகள் ஏராளம், எல்லாம் அரசியல் கணக்கு இந்த ரூபாதான் அதனை வெளிகொண்டுவந்தார், அவருக்கு சித்தராமையா கொடுத்த இடைஞ்சல் கொஞ்சமல்ல‌ இனி இந்த பெண்சிங்கம் சிலிர்க்கும், தியாக தலைவி சின்னம்மா இனி உண்மையிலே ஊதுபத்தி உருட்டவேண்டியதுதான். தினகரனோ, திவாகரனோ பெங்களூர் பக்கமே செல்லமுடியாது    

திருமுருகன் காந்தி ஆவேசம்

ஈழத்தில் செத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த யாரிடம் அனுமதி வாங்க வேண்டும் : திருமுருகன் காந்தி ஆவேசம் திருப்பெரும்புதூரில் செத்த 17 பேருக்கு அஞ்சலி செலுத்தினாலோ இல்லை அமைதிபடையாய் சென்று செத்த 1500 இந்தியவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினால் யார் தடுக்க போகின்றார்கள் ஏன் இங்கு அஞ்சலி? முள்ளிவாய்க்காலுக்கே சென்று செலுத்தினால் என்ன?

ஆங்கில நாட்காட்டியின் படி நேற்று இஸ்ரேல் சுதந்திர நாள்

  ஆங்கில நாட்காட்டியின் படி நேற்று இஸ்ரேல் சுதந்திர நாள், 70 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அது நேரடி போரினை சந்தித்தது அன்றிலிருந்து இன்றுவரை அதன் ஆக்கிரமிப்பு தொடர்கின்றது ஒவ்வொரு ஆண்டும் இதே நாளில் அந்த ஆக்கிரமிப்பை எதிர்த்து பாலஸ்தீனியர் ஆர்ப்பாட்டம் செய்வர், இம்முறை டிரம்பின் அழிச்சாட்டியத்தில் ஜெருசலேம் விவகாரமும் சேர்ந்து அந்த பகுதி பற்றி எரிகின்றது நேற்றுமட்டும் 41 பாலஸ்தீனியர் சுட்டு கொல்லபட்டிருக்கின்றனர் எங்காவது சேவ் சிரியா போல சேவ் பாலஸ்தீன் என சத்தம் […]

கன்னட தேர்தலில் பாஜக வெற்றிமுகம் காட்டுகின்றது

கன்னட தேர்தலில் பாஜக வெற்றிமுகம் காட்டுகின்றது சித்தராமய்யா தேர்ந்தெடுக்கபடும்பொழுது ஒழுங்காக வேலை செய்த வோட்டு மெஷின் இப்பொழுது சரியில்லை என பலர் கிளம்புவார்கள் மக்கள் மாற்றத்தை விரும்பியிருக்கின்றார்கள், இதற்கு காவேரியினை திறந்திவிட்டு சித்தராமய்யா தோற்றிருக்கலாம் இனி காவேரிக்கு விடுதலை இல்லை… ஆக இனி தமிழகத்தை தொடர்ந்து கன்னடத்திலும் பாஜக அதிகாரம் இங்கு பழனிச்சாமி கிடைத்தது போல் அங்கு இனி குமாரசாமி கிடைக்கலாம் இனி தமிழிசைக்கு சிக்கல், எங்கே காவேரி என கேட்டு துளைத்துவிடுவார்கள்..   கர்நாடக தேர்தல் […]

யார் வந்தால் நமக்கென்ன?

க‌ர்நாடகாவில் யார் ஆட்சிக்கு வந்தாலும் எங்களுக்கு கவலை இல்லை- அமைச்சர் ஜெயக்குமார் அதானே, நீங்கள் ஆட்சி செய்யும் தமிழ்நாட்டிலே என்ன நடந்தாலும் உங்களுக்கு சுத்தமாக கவலை இல்லை, இதில் கன்னடத்தின் நடப்புகளா உங்களுக்கு கவலை தந்துவிடும்? முன்பெல்லாம் அரசியலுக்கு ராஜாஜி, காமராஜர், கக்கன் , அண்ணா என வந்தார்கள் இப்பொழுது ஆர்.ஜே பாலாஜி, ஜூலி என வருகின்றார்கள் போகிற போக்கை பார்த்த்தால் செத்து போன குமரி முத்துவினை தவிர எல்லா துணை நடிகர்களும் தமிழக அரசியல் குதிப்பார்கள் […]

மாஸ்கோவில் புட்டீனை சந்திக்கின்றார் மோடி : செய்தி

மாஸ்கோவில் புட்டீனை சந்திக்கின்றார் மோடி : செய்தி “என்னை எங்காவது பார்த்தால் கட்டி பிடிச்சி அழுறது, அமெரிக்க‌ உறவு வலுக்கணும்னு உருகுறது இப்போ புட்டீனை பார்க்க போறாராம் போ மகனே போ, சீக்கிரம் பாகிஸ்தான் பிரதமர் அப்பாசி என்ன பார்க்க வருவார், நீ என்ன செய்யுறேன்னு பார்க்குறேன்”  

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications