பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

கூத்தாடி கூட்டம் என்பது சரியாக இருக்கின்றது

அது கூத்தாடி கூட்டம் என்பது சரியாக இருக்கின்றது காவேரி முதல் ஏராளமான விஷயங்களில் தோற்று கொண்டிருக்கும் பழனிச்சாமியினை பதவி விலக சொல்லாமல், அந்த விஷாலை பதவி விலகு என கோஷமிட்டு கொண்டிருக்கின்றார்கள் எஸ்.வீ சேகரை என்பவர் இங்கு காட்சி அளித்தார், அங்கு காட்சி அளித்தார் என பலர் பேசிகொண்டிருக்கின்றார்கள், திடீரென பகிரங்கமாக மேடையிலே காட்சி அளித்தார் என்கின்றார்கள் ஆனால் கைது செய்யுமுன் மறைந்துவிடுகின்றாராம், ராமாயணத்து இந்திரஜித்தன் வகையறா போலிருக்கின்றது இப்படித்தான் அன்புசெழியனை தேடினார்கள், அவரோ அமைச்சர் வீட்டு […]

வாழ்க சங்கம், வளர்க தலைவி, செழிக்க தலைவி குடும்பம்

இந்த பிரபஞ்சத்தில் வாழும் எல்லா அன்னையருக்கும் சங்கத்தின் சார்பாக அன்னையர் தின வாழ்த்துக்கள் அன்னையை போல் ஒரு தெய்வமில்லை, குஷ்புவினை போல் ஒரு அன்னையுமில்லை வாழ்க சங்கம், வளர்க தலைவி, செழிக்க தலைவி குடும்பம்  

அண்ணே ராக்கெட் ராஜா பத்தி பேசாதீர்கள்

அண்ணே ராக்கெட் ராஜா பத்தி பேசாதீர்கள், அவர் சமுதாயத்திற்கு நிறைய செய்தார்? என்ன செய்தார்? அவரால் பலர் வாழ்ந்தனர் , வாழ்கின்றனர். அவரின் நாடார் பற்று அப்படி என்னடா செய்தார்? யாரெல்லாம் வேற்றுசாதிகாரன் மணல் குவாரி , ரியல் எஸ்டேட் எல்லாம் வச்சிருந்தார்களோ அதை எல்லாம் நாடார் சாதிக்கு வாங்கி கொடுத்தார் டேய் மணல் கொள்ளையே பெரும் கொடுமை, அதை வாங்கிகொடுத்தார்னு சொல்றபாரு உன்னை எல்லாம் அட இங்க எல்லாம் அப்படித்தாண்ணே, சமுதாயம் வாழ அப்படித்தான் செய்யணும் […]

பிக்பாஸ் 2 – மீண்டும் என் மக்களை சந்திக்க வருகிறேன் : கமல்

“ஏம்பா அமாவாசை, டெப்பாசிட் வாங்குவியா? வாங்கினாலும் சந்தோஷம், வாங்காட்டாலும் சந்தோஷமுங்க‌ அதானே, உனக்கென்ன வந்துச்சி. நான் தானே ஊர்ல தலைகாட்ட முடியாது”   புதிதாக முளைக்கும் தலைவர்கள் நதிகள் இணைப்பு குறித்து பேசுவது வேடிக்கை: பழனிச்சாமி பழனிச்சாமியும் பன்னீரும் மகாத்மா காந்தி காலத்திலிருந்து அரசியலில் இருப்பது குறிப்பிடதக்கது, மவுண்ட்பேட்டனிடமே காவேரி பிரச்சினை பற்றி விவாதித்த சிறப்பு அவர்களுக்கு உண்டு பிக்பாஸ் 2 – மீண்டும் என் மக்களை சந்திக்க வருகிறேன் : கமல் இந்த மய்யத்தில் இருப்பது […]

மகாதீர் மலேசியாவின் பெரும் அடையாளம், மிகசிறந்த நிர்வாகி, கூர்மதி படைத்தவர்

ஒரு நாட்டின் தலையெழுத்து நன்றாய் இருந்தால் நல்ல தலைவர்கள் உருவாகி வந்து தாங்குவார்கள், நாட்டிற்கும் தலைவிதி இருக்கின்றது அபடி மலேசிய பிரதமராக பொறுப்பேற்றுகொண்டார் மகாதீர் அவர்கள், உலகின் மிக மூத்த பிரதமர் அவர்தான் டிரம்ப் முதல் மோடிவரை வாழ்த்துகின்றார்கள், நாமும் வாழ்த்துவோம் நிச்சயம் மகாதீர் மலேசியாவின் பெரும் அடையாளம், மிகசிறந்த நிர்வாகி, கூர்மதி படைத்தவர் மலேசியா வெள்ளையன் காலத்திலே சொர்க்கமாக திகழ்ந்தது சந்தேகமில்லை. செட்டியார்களும் இன்னும் பலரும் பெரும் செல்வாக்குடன் சம்பாதித்தனர் அப்படிபட்ட மலேசியாவில் மலாய் மக்களின் […]

எல்லாம் உனக்காக தாங்கினேன் அக்கா, உனக்காக

“அக்கா, என்னையாக்கா கூடபிறந்தவன் இல்ல சொல்ற‌ உனக்காக எவ்வளவு அடிவாங்கி இருக்கேன் தெரியுமாக்கா, எத்தனை பேர் மண்டை அடிச்சு உடைச்சான் தெரியுமாக்கா எல்லாம் உனக்காக தாங்கினேன் அக்கா, உனக்காக அன்னைக்கு எதிர் கோஷ்டி எல்லாம் எட்டி எட்டி உதைச்சாங்க அக்கா, எட்டி எட்டி உதைச்சாங்க, ரத்தமா கொட்டிச்சிக்கா ரத்தமா கொட்டிச்சி ஒரு வார்த்தை பேசிருப்பனா அக்கா, நா வாயை திறந்து பேசினா அத்தான் அன்னைக்கே ஜெயிலுக்கு போயிருப்பாருக்கா நான் மட்டும் அன்னைக்கு வாய்திறந்தா என்ன ஆயிருக்கும் தெரியுமா, […]

பிளாரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்த நாளே நர்ஸ் தினம்

பணிகளில் மிக பொறுமை வாய்ந்த மதிப்பு மிக்க பணி தாதியர் பணி, மிக மிக பொறுப்பு வாய்ந்த பணியும் கூட. அதனால்தான் அது தாய்க்கு அடுத்த வார்த்தையான தாதியர் என தமிழில் போற்றபடுகின்றது, மருத்துவமனையில் பாருங்கள், மருத்துவர் ஒரு நோயாளியினை கவனிப்பது சொற்பநேரம்தான், ஆனால் முழுநேரமும் உடனிருந்து மருந்துகொடுத்து , உணவு கொடுத்து அன்பாக கவனிப்பது தாதியர்கள் தான். அவர்களின் பணி இல்லை என்றால் ஒரு மருத்துவமனையும் இயங்காது, ஒரு உயிரும் பிழைக்கமுடியாது. மிக மிக பொறுமையும் […]

புதுச்சேரியில் நடந்திருக்கும் சுவாரஸ்ய சம்பவம்

புதுச்சேரியில் நடந்திருக்கும் சம்பவம் சுவாரஸ்யமானது அதாகபட்டது அங்கு கவர்னர் கிரண்பேடிக்கும் முதல்வர் நாராயணசாமிக்கும் ஏகபட்ட மோதல் கிரண்பேடிக்கு எப்பொழுதுமே அரசியல்வாதிகள் வருவார்கள் போவார்கள், அதிகாரி நிரந்தரமானவர் என்ற மனோபாவம் உண்டு. ஆனானபட்ட இந்திராவுடனே மல்லுகட்டியவர் அவர் புதுவை முதல்வர் நாராயணசாமி என்றால் தெரியாது, ஆனால் 15 நாள் நாராயணசாமி என்றால் எல்லோருக்கும் புரியும். சகல பிரச்சினைக்கும் 15 நாளில் முடிவு சொன்னவர், எத்தனை 15 நாள் ஆனாலும் கிரண்பேடியினை அசைக்க முடியவில்லை இதனால் கிரண்பேடி படத்தை முறைத்துகொண்டே […]

வதந்திகள் உயிருக்கே ஆபத்தை விளைவிப்பது கவலையளிக்கிறது – கமல்ஹாசன்

வதந்திகள் உயிருக்கே ஆபத்தை விளைவிப்பது கவலையளிக்கிறது – கமல்ஹாசன் வதந்தியால் இன்றுமட்டுமா ஆபத்தா? ஐயகோ வடக்கு வளர்கின்றது, தெற்கு தேய்கின்றது, தமிழனுக்கு மாபெரும் அழிவு வருகின்றது. தமிழகம் அழிய போகின்றது என பெரும் வதந்தியினை பரப்பிவிட்டு ஆட்சியினையே கைபற்றியவர்கள் உள்ள‌ தமிழகம் இது பிராமண, வருணாசிரம வதந்திகள் அடிக்கடி வரும் அதன் பின் ஈழத்தை காக்க போகின்றோம் இன்னும் யாரை எல்லாமோ காக்க போகின்றோம், காவேரி மீட்க போகின்றோம் என நிறைய வதந்திகள் வரும் ராமசந்திரன் புரட்சி […]

திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் பைபில் போதிப்பு?

திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் சில கிறிஸ்தவ போதகர்கள் பைபிள் போதித்ததாக சர்ச்சைகள் வருகின்றன‌ அங்கே சென்றுதான் பைபிள் படிக்க வேண்டுமா? இவர்கள் கட்டி வைத்திருக்கும் சர்ச் எல்லாம் எதற்கு? இவை வன்மையாக கண்டிக்கதக்கது. கலவரம் ஏற்படுத்த வேண்டும் என்ற வகையில் செயல்பட்டிருக்கின்றார்கள் மத சுதந்திரம் என்பது அடுத்த மதத்தவர் ஆலயத்தில் சென்று இப்படி வம்பு இழுப்பது அல்ல‌ ஏன் இவர்களுக்குத்தான் செய்ய தெரியுமா? அவர்கள் இவர்கள் சர்ச் முன்னால் வந்து நின்று பஜனை நடத்தினால் விடுவார்களா? இவர்களுக்கு […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications